உங்கள் வருகைக்கு நன்றி...

Thursday, October 6, 2011

கல்லூரி மாணவிகளோடு கிஸ்கிந்தா


நீண்ட நாட்களுக்கு பிறகு...

தொடர வேண்டும் என்ற எண்ணத்துடன் தொடர் எழுதி, அதை தொடர முடியாமல் படர்ந்து விட்டேன். இந்த சோர்வு எல்லோருக்கும் வரலாம், ஆனால் இந்த நாட்களை வீணாக்கி விடவில்லை வீணையாக்கி விடுவேன்.

எழுதுவது ஒரு கலை நம்மருகில் பதில் பேசாத நண்பனை அமரவைத்து, நம் கதைகளை சொல்லிக் கொண்டிருப்பது போல, எண்ணத்திற்கும், எழுத்திற்கும் மத்தியில் எது வேண்டுமானாலும் சிந்திக்கலாம், எழுதலாம், எழுதியதை சிதறாமல் திருத்தலாம் திருந்தலாம் எழுத்து மனித வாழ்க்கையின் வடிகால்.