உங்கள் வருகைக்கு நன்றி...

Tuesday, August 11, 2009

மனம் கவர்ந்த மலேசியா....13

மனம் கவர்ந்த மலேசியா பாகம்-8ல் மதிப்பிற்குரிய பதிவர் “வந்தியத் தேவன்" அவர்கள் ஜூலை 31-ல் பின்னூட்டம் போட்டிருந்தார்…அதில் லங்காவி போனீர்களான்னு கேட்டிருந்தார்.
லங்காவி போகாமல் மலேசியாவை சுற்றி பார்த்ததாக யாரும் கூறினால் அது முழுமைப் பெறாது. என்பது எனது கருத்து

லங்காவி டூட்டி பிரின்னு சொன்னேனில்லையா… அங்கு சிகரெட், மதுபானங்கள், மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள், மற்றும் துணிமணிகள், சாக்லேட் வகைகள், பேக் இப்படி ஏராளமான பொருட்களுக்கு வரி விலக்கு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த பொருட்களை வாங்கிச்செல்வதற்கு ஒரு சட்டமும் உண்டு. எப்படின்னா…
மூன்று தினங்கள் நாம் லங்காவியில் தங்கிருந்தால்; நாம் வாங்கிச் செல்லும் பொருட்களுக்கு வரிவிலக்கு உண்டு. இல்லையெனில் தீர்வை கட்டவேண்டும் என்று சொல்கிறார்கள் ஆனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இந்த விதிமுறை இல்லை என்று கூறுகிறார்கள்…அதை நம்பி நானும் சாமான்கள் (வீட்டு உபயோக பொருட்கள்) வாங்கினேன். எனக்கு தீர்வை போட்டாங்களான்னு நீங்க கேட்கிறீங்க…. ம்…அவசரப்படாமல் நிதானமா சொல்றேன்.

அங்கு பீச் , முதலை பண்ணை ,மன்னர் மியூசியம், மார்கெட் ,நிறைய ஹோட்டல்கள் இப்படி பார்க்கவேண்டிய இடங்கள் உண்டு.
நாங்கள் லங்காவியில் இறங்கியதும்.... ச்சோன்னு நல்ல மழைபெய்ந்தது. (பின்னே இருக்காதா…பிரபல பதிவர் வரேன்ல … அதான் மழைவரவேற்பு.)
இறங்கியதுமே எனது மைத்துனர் திரும்பி செல்வதற்கான டிக்கேட் எடுத்துக் கொண்டார். மாலை 7.30 மணிக்கு செல்லக் கூடிய பேரிக்கு .மாலை நாம் திரும்பும் போது தாமதம் ஆகிவிட்டால் டிக்கேட் கவுண்டரை மூடிவிடுவார்களாம்.

அங்கே ஒரு மினிவேனை வாடகைக்கு எடுத்துக் கொண்டோம். ஒரு மணி நேரத்திற்கு 30 ரிங்கிட் என்றார்கள்.
அங்கிருந்து முதலில் ஸ்கைபிரிஜ்கு சென்றோம். போகும் வழியெல்லாம் மழை எங்களை தொடர்ந்து வந்துக் கொண்டிருந்தது. சந்தோசமாகத்தான் இருந்தது ஆனால் ஸ்கைபிரிஜ் போவதற்கு கேபிள் கார் வழியாகதான் செல்லவேண்டும் கிளைமேட் நன்றாக இருந்தால்தான் கேபிள் காரை இயக்குவார்களாம்.
அங்கே போய் இறங்கியதும் பார்த்தால் நிறைய மக்கள் கேபிள் காருக்காக காத்து நிற்கிறார்கள். டிக்கேட் கொடுக்கப்படவில்லை.

விசாரித்தோம் நம்ம ஊரு வானிலை அறிக்கை சொல்றவங்க மாதிரி … எதிர்பார்க்கிறோம் வரலாம் அப்படின்னு சொன்னாங்க. அதாவது மழையை எதிர்பார்கிறார்களாம் மேகமூட்டம் அதிகம் வரலாம்ன்னு சொன்னாங்க அதனால காத்திருப்போர் லிஸ்டில் நீங்களும் காத்திருங்கள் என்று சொல்லிவிட்டார்கள்.
அடக்கடவுளே இவ்வளவு தூரம் வந்து இப்படி ஆகிவிட்டதேன்னு நாங்க எல்லோரும் வருத்தப்பட்டோம்.
அதுவரைக்கும் அங்குள்ள முயல்கள் பண்ணை மான்கள் பண்ணை இவைகளை கண்டு களிக்கலாம்னு சுற்றினோம்… காதுகளை பிடித்து முயல்களை தூக்கி அழகு பார்த்தோம். மான்களுக்கு உணவு கொடுத்து மகிழ்ந்தோம்.


இந்த நேரத்தில் மழை நின்றது. மேகமூட்டம் குறைந்தது சுமார் 2 மணிநேரத்திற்கு பிறகு வானிலை பச்சைக் கொடி காட்டியதும் பெல் அடிச்சாங்க… நாமுந்தி நீமுந்தின்னு முண்டி அடிக்காமல் எல்லோரும் வரிசையில் நின்று டிக்கேட் வாங்கிக்கொண்டிருக்க … நம்மஆளு நம்ம கலாச்சாரத்தை விட்டுக் கொடுப்பாங்களா … எங்களை அழைத்துவந்த வேன் டிரைவர் எங்கோயோ எப்படியோ பூந்து டிக்கேட் வாங்கி வந்துட்டாரு.
எங்களுக்கு சந்தோசம் தாங்கலை .

கேபிள் காரில் ஏறி அமர்ந்தோம் . கடல் மட்டத்திலிருந்து 700 மீட்டர் தூத்திற்கு அது செங்குத்தாக தூக்க கீழேப் பார்தால் பாதாளம் மாதிரி பெரிய குன்றுகள் அடி வயத்தை அப்படியே கவ்விகிச்சி.
என் மனைவி முகத்தை மூடீக்கிட்டாங்க எனக்கு பயம் மாதிரி தெரிஞ்சாலும் …ம்கூம் …நான் பயப்புடலையே.

என் வாண்டுகளுக்கு ரொம்ப தைரியம். நாங்க உட்காந்துகிடப்பதற்கே பயந்துக் கொண்டிருந்தோம் அவர்கள் நின்றுக் கொண்டு வேடிக்கை பார்த்தார்கள்.
முதல்கட்டமாக 500 மீட்டர் தூரத்தில் உள்ள ஸ்டாப்பில் இறக்கினாங்க…
அங்கிருந்து லங்காவியை பார்க்கலாம் லங்காவியை சுற்றி சுமார் 99 தீவுகள் இருக்கிறதாம் இதுதான் மலேசியாவின் பெரிய ஐலாண்ட் என்கிறார்கள்.


அடுத்தகட்ட உயரத்திற்கு செல்ல கேபில் காரில் ஏறினோம். இதேபயம் தான் என்றாலும் முதலில் ஏற்பட்டது போல் இல்லை. கிட்டதட்ட 700 மீட்டருக்கு மேல் சென்று விட்டோம். ஆந்த மலையின் மீது வட்டமான பெரிய மேஜைப்போன்று கட்டிருந்தார்கள் அதில் நின்றால் உடம்;பெல்லாம் மேகத்தில் உரசி நனைந்து தலைமுடி யெல்லாம் ஈரமாகி அட….அட… இப்போ நினைத்தாலே மனசெல்லாம் குளிருதுங்க. அந்த குளிருடன் ஸ்கை பிரிஜ்ஜில் நடக்க தொடங்கினோம்.
நடக்கும் போது மேகம் சூழ்ந்துக் கொள்ள எதிரே நிற்பவரைக்கூட பார்க்க முடியாதளவு மேகம் எங்களை இருக தழுவிக் கொண்டது… அந்த காட்சியே எனக்கு கவிதையாக தெரிந்தது . நடந்தேன் ஒடினேன் அமர்ந்தேன் அங்கிருந்து இந்தியாவிற்கு போன் செய்து எங்கள் உறவினரிடம் பேசி இந்த இடத்தைப் பற்றி விபரமாக என் மனைவி பேச… அன்றைய தினம் பில்லா படம் ஒடிய தியேட்டரில் நல்ல கலெக்ஷன் ஆகிருக்குமுங்க. பில்லா படத்தை அடையாளப்படுத்திதான் எல்லோரிடமும் என் மனைவி கூறினார்.

லங்காவியில் ஸ்கைப்ரிஜ் …இது 2004-ல் அமைக்கப்பட்டதாகும்.
இது கடல் மட்டத்திலிருந்து 687 மீட்டர் உயரத்தில் அமைத்திருக்கிறார்கள். இந்த பாலத்தின் நீளம் 136 யாட், அகலம் 2 யாட் ஆகும் . இந்த பாலத்தின் சப்போட் 95 யாட் நீளமுள்ள ஓரேயொரு கம்பியும், அதை தாங்கி நிறுத்தும் 8 கயிருகளும் மட்டும் தான்.
அந்த பாலத்தில் நாம் நடக்கும் போது காற்றின் வீச்சத்தில் சின்னசின்ன அதிர்வுகளை நம்மால் உணரமுடிகிறது. அந்த உணர்வு ஒருவித பயத்தை ஏற்படுத்தினாலும் அந்த பயத்தில் சந்தோசம் கிடைக்கிறது.

பயம் தொடரும்………….

Saturday, August 8, 2009

பழகலாம் வாங்க.....

எனக்கு அரபு நபருடன் பழக்கமிருக்கிறது . எனக்கு அரசியல் வாதியுடன்
பழக்கமிருக்கிறது .
இப்படி பலர் அல்லது சிலர் கூற நாம் கேட்டிருக்கலாம் அல்லது நாமே
சிலரிடம் கூறியிருக்கலாம்.
பல மனிதர்களுடன் பழகும் வாய்ப்பை நாம் பெற்றிருக்கிறோம் .அந்த பழக்கம்
நட்பாக காதலாக மாறலாம் நட்பிற்கு நாடோ மொழியோ நிறமோ இனமோ தடையில்லை . ஆத்மார்தமான அன்பு மட்டுமே போதுமானது.
சிலருடன் நாம் பழகும் போது அவர்களுடைய பழக்கத்திற்கு நம்மை அழைத்து
செல்வார்கள் .அல்லது நம்முடைய பழக்கத்திற்கு நாம் ஈட்டுச் செல்வோம் . இது அவரவரின்
மன வலிமையை பொருத்தே நிகழ்கிறது.

பழக்க வழக்கத்தினால் ஒரு மனிதன் முன்னேற்ற மடையவும் முடியும்
தாழ்வு நிலைக்கு செல்லவும் முடியும்.

பெற்றோர்களின் வளர்ப்பில் குழந்தைகள் மனதில் முதன் முதலில்
பழக்கம் பதிவாகிறது. இந்த பதிவு குழந்தைகளின் வளர்ச்சியில் சிறுவனாகி வாலிபனாகி வயதாகும் வரையில் பதிவான பழக்கம் முழுமையாய் மாற்றமடைவதில்லை . அதனால் தான் குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை சொல்லி தர வேண்டும் என்பார்கள்.

வளரக்கூடிய சூழ்நிலையில் வாழக்கூடிய சூழ்நிலையிலும் எத்தனையோ
மாற்றங்கள் பழக்கத்தினால் நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது.

தீய பழக்க வழக்கங்களை கொண்டவர்கள் அவர்கள் மட்டுமே பாதிக்கப்படுவதில்லை அவர்களைச் சார்ந்திருக்க கூடிய அனைவரும் பாதிக்கப் படுகிறார்கள்.

நல்ல பழக்கத்தினால் ஒரு குடும்பம் சந்தோசமாக வாழ நூரு சதவீதம் வாய்ப்பிருக்கிறது.

நல்ல பழக்க வழக்கங்கள் வருவதற்கு கஷ்டமாக இருக்கலாம் ஆனால்
அவற்றோடு வாழ்வது சுலபமே ஆகும். தீய பழக்க வழக்கங்கள் சுலபமாக வருவதாக இருக்கலாம் ஆனால் அவற்றோடு வாழ்வது கடினமாகும் .என்கிறார் ஒரு ஆய்வாளர்.

நம்மை விட உயர்தவர்களோடு பழகுவதற்கு எப்போதும் முயற்சி செய்ய வேண்டும். அந்த பழக்கம் நம்மை அவர்களவிற்கு சமமாக உயரச் செய்யும்.

நம் பழக்கத்தை விட குறைந்தவர்களோடு நாம் பழகிக் கொண்டிருந்தால்
அவர்களுடைய குணதிசயங்கள் நம்மில் தொற்றிக்கொள்ள நிறைய்ய வாய்ப்பிருக்கிறது .பின் நாமும்அவர்களைப் போலாகி விடுவோம்.

அது மட்டுமல்ல தாழ்வு மனப்பான்னை உடையவரோடு நாம் பழகினால்
நம்மால் எதையும் சாதிக்க முடியாது எதிலும் வெற்றி பெற முடியாது . நமக்கும் தாழ்வு மனப்பான்மை உண்டாகி விடும்.

தாழ்வு மனப்பான்மையுடைய நண்பர்களை பெற்றவர்கள் அவர்களை நீங்கள் மாற்றிவிடுங்கள் இல்லை யெனில் நீங்கள் மாறிவிடுவீர்கள் .

நமது முன்னேற்றதிற்கு நம் பழக்க வழக்கங்கள் முக்கிய பங்கு
வகிக்கிறது என்பதை மறந்திடக்கூடாது . கவனமாயிருக்க வேண்டும்.



தீய பழக்க வழக்கத்தை கொண்டவரோடு நட்பு வைத்துக் கொள்வதை விட நல்ல புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளலாம்.அவர் திருந்தாத வரையில்.

நம்மோடு பழகும் நம் நண்பர்களின் பழக்க வழக்கங்களை நாம்
கூர்ந்து கவனிக்கதான் வேண்டும். அவர்களின் தீய பழக்கத்தினால் நமது முன்னேற்றம் எந்த விதத்திலும் தடைப்படக் கூடாது.

சில தீய பழக்கம் உடம்பை கெடுக்கும் சில பழக்கம் மனதை கெடுக்கும் அதனால் உறவுகள் இடையே விரிசல் கொடுக்கும்.

நமது நடத்தை பெரும்பாலும் பழக்கமே யாகும் . இவை நாம் சிந்திக்காமலேயே தானாகவே வந்து விடுகின்றன. பண்பு என்பது நமது பழக்க வழக்கங்களின் மொத்தத் தொகையாகும். நல்ல வித பழக்க வழக்கங்களுடன் ஒருவர் இருந்தால் அவர் நல்லவிதப் பண்பு உடையவர் என்று கருதப்படுகிறார்.


எதிர் மறைப் பழக்க வழக்கங்களை எதிர் மறை பண்புடையவர் ஆகிறார்.பழக்க வழக்கங்கள் தர்க்கத்தையும் பகுத்தறிவையும் விடவும் மிகப் பலமானவை .
தொடக்கத்தில் பழக்க வழக்கங்கள் நம்மால் அறிந்துக் கொள்ள முடியாத அளவிற்கு மிக பலவீனமாக இருக்கும் இறுதியில் அவற்றிலிருந்து வெளிவர முடியாத அளவிற்கு மிகப் பலமானவையாகி விடும் . பழக்க வழக்கங்களைத் தன்னிச்சையாகவோ அல்லது மன உறுதியானாலோ வளர்த்துக் கொள்ளலாம்.

நான்சிறுவனாக இருந்த போது எனது பெற்றோர்கள் நீ நல்ல பழக்க வழக்கங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் ஏனென்றால் பழக்க வழக்கங்களே பண்பை உருவாக்குகின்றன. என்று என்னிடம் சொன்னது நினைவுக்கு வருகிறது என்கிறார் ஷிவ்கெரா.

ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் ஒருவரின் நல்ல பழக்க வழக்கத்தினால் அந்த கம்பெனி அவர் மீது நம்பிக்கை வைக்கிறது அதனால் அவருக்கு உயர் பதவியை அது சம்பாதித்து தருகிறது. நல்ல நண்பர்களை தேடி தருகிறது. பலர் நம்மிடம் பழகுவதற்கு ஆர்வப்படுவார்கள்.நல்ல சிந்தனையாள்களுடன் பழகும் போது நமக்கும் நல்ல சிந்தனைகள் மலரும்.

நல்ல பழக்க வழக்கங்களை கொண்ட சிலர் சில சந்தர்பங்களில் தீய பழக்கத்திற்கு மாறிவிடுவதுண்டு இதற்கு பல வித காரணங்கள் கூறுவார்கள் இவர்களின் வாழ்க்கையில் ஏதோ ஒரு நிகழ்ச்சி மனதில் பாதிப்பை உண்டாக்கியிருக்கலாம் இதிலிருந்து மீள்வதற்கு இவர்களின் நண்பர்கள் உதவி செய்ய முன் வர வேண்டும் இது இவர்களின் மீது கடமையாகும்.
ஓரு பழக்கத்தை வளர்ப்பது என்பது நிலத்தை உழுவது போன்றதாகும்.
நல்ல பழக்கத்தை வளர்ப்பது ஒரு பூந்தோட்டத்தை உருவாக்குவது போலாகும்.

எதையும் அறிவுரைகள் என்று நாம் கருதவும் கூடாது அதை ஒதுக்கவும் கூடாது இவைகள் யாவும் நமது அனுபவத்தின் பிரதிலிப்பு. . .

Friday, August 7, 2009

மனம் கவர்ந்த மலேசியா...12

தென்னமரத்தை இதுவரைக்கும் கண்டுபிச்சுரப்பீங்க அதனால ரொம்ப பில்டப் பண்ணல நேரா விசயத்துக்கு வந்துடுறேன்.
தென்னமரம் மாதிரி உள்ளது எண்ணெய் மரம்… அதாவது ஃபாம் ட்ரீ –சமையல் எண்ணெய் இந்த மரத்தின் காய்களிலிருந்து தயார் செய்கிறார்கள். இது மலேசியாவில் ஐவேஸ்ரோடுகளின் இரு பக்கத்திலும் காணமுடிகிறது.

இன்று பொட்டானிக்கல் பார்க் சென்றோம். அதனுல் உடற்பறிச்சி செய்வதற்கான அனைத்து உபகரணங்களும் வைத்திருக்கிறார்கள். சனி ஞாயிற்று கிழமைகளில் மக்கள் பிரத்தோமாக உடற்பறிச்சி செய்வதற்கு இங்கு வருகிறார்கள். சிலர் தினசரியும் வந்து செல்வார்களாம்.

உடற்பயிற்ச்சி மட்டுமல்ல நடைபயிற்ச்சி செய்பவர்களுக்கும் இந்த பூங்காவில் இடம் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த இயற்கையின் சூழலில் நடந்தாலே நோய்கள் பறந்து போய்விடும். எங்கும் பசுமை குளிர்ந்த காற்று பல வண்ணங்களில் நம் எண்ணங்களை கவரும் நமக்காகவே பூத்த மலர்கள். இவைகளுக்கு நடுவே நாம் நடந்தால் நம்மிடமுள்ள டென்சன் நம்மிடம் சொல்லிக்காமலேயே விடைப்பெற்று விடும்.


பினாங்கின் பீச் நமக்கு மெரினாவை ஞாபகப்படுத்தும் குதிரைசவாரி ,மோட்டார் சவாரி ,பாராசூட்சவாரி இப்படி சவாரிகள் நிறைந்த பீச். மலைப்பகுதிகளை சுற்றி கடல் சூழ்ந்திருப்பதால் அதன் அழகே அழகுதான்.
ஸ்ட்ரீட் மார்க்கெட் இருக்கிறது. இங்கு உபயோகித்த பொருட்களும் புதிய பொருட்களும் கிடைக்கும். திருட்டுப்போன சாமான்களை கூட இந்த மார்க்கெட்டில் வாங்கலாம். ஆமாங்க நம்ம வீட்டில் திருடியிருப்பாங்க மார்க் கெட்டில் வந்த விலைக்கு விற்பனை செய்து விட்டு போய்விடுவார்களாம். நம்ம பொருளுக்கு நாம் காசுகொடுத்து விட்டுதான் எடுத்துவரனும். நம்மஊரு பலே கில்லாடிகள் இங்கு அதிகம் என்கிறார்கள். கவனமாக இருக்கவேண்டும் என்று எச்சரிக்கிறார்கள்.

மலேசியாவில் சூப் ரொம்ப பேமஸ். அதுவும் மாட்டுவால் சூப்… ம்… நல்ல டேஸ்ட். போறவங்க மறக்கமால் சூப் குடிங்க. விஜிடேரியனும் உண்டு.


சனிக்கிழமை காலை 5மணிக்கு புறப்பட்டோம் லங்காவி செல்வதற்கு. பினாங்கிலிருந்து ஃபேரியில் சென்றால் 4 மணிநேரமாம். அதனால் அலோஸ்டார் பக்கத்தில் செல்கின்ற ஃபேரியில் 1மணிநேரத்தில் சென்று விடலாம் என்று மைத்துனர் ஆலோசனை…
ஏன் பினாங்கிலிருந்தே போகலாமே என்றேன்.
போகலாம் ஆனால் பலர் வாந்தி எடுப்பார்கள்… அதைப் பார்க்கும் நமக்கும் வாந்திவரும். ஃபேரி ஆட்டம் இருக்கும் மிக வேகமாகவும் செல்லும். என்று விளக்கம் கூற
சரி நீ சொல்றபடியே போகலாம்னு அலோஸ்டார் நோக்கி எங்கள் கார் பயணமானது.
ஹைவேயில் அவர்கள் போகக்கூடிய ஸ்பீடு எவ்வளவு தெரியுமா…? 160 லிருந்து 200 யும் தாண்டுகிறது…
இவர்களின் வேகத்தில் நாம் எதையும் ரசிக்கமுடியாது… பயத்திலேயே அமர்ந்துக் கொண்டு எப்படி கார் ஒட்டுகிறார் முன்னாடி போற காரில் இடித்து விடுவாரோ இப்படி நெஞ்செல்லாம் பகீருடன் பதட்டத்துடன் தான் பயணம் செய்ய வேண்டி இருந்தது.
அலோஸ்டார் ரோடுவழியாக தாய்லாந்து சென்று விடலாம். பக்கம்தான் என்கிறார்கள். தாய்லாந்து பார்டரில் பெரிய துணி மார்க்கெட் இருக்கிறது. விலையும் குறைவாம். பலர் வியாபாரத்திற்கு அங்கு போய் தான் கொள்முதல் செய்வார்களாம்.


நாங்கள் லங்காவி செல்வதற்கான ஃபேரிக்கு வந்துவிட்டோம். காலை
8.30 மணிக்கு ஃபேரி புறப்படப்போகிறது. ஓவ்வொரு ஒரு மணிநேரத்திற்கு ஒரு ஃபேரி லங்காவி செல்கிறது. அதேபோல் லங்காவியிலிருந்து திரும்புவதற்கும் அப்படியே.
"லங்காவி" ஒரு ஐலாண்ட் அது டூட்டி ஃப்ரீ ஐலாண்டு . கிட்டதட்ட துபாயில் ஜெபல்அலி இருப்பது போல் இருந்தாலும் நிறைய்ய வித்தியாசம் உண்டு. லங்காவியில் குறைந்த விலைக்கு பொருட்களை வாங்கலாம். அந்த ஐலாண்டை நோக்கி உலகிலிருந்து பல நாட்டினர்கள் வருகை புரிகிறார்கள்.
அந்த இடத்தினனுடைய அமைப்பும் இயற்கையாகவே இயல்பாக அமைந்திருக்கிறது. பார்ப்பவர்களின் கண்ணைமட்டுமல்ல மனதை கொள்ளைக் கொள்கிறது.
லங்காவி மிக அழகான ஐலாண்ட் நம்மஊரு ஸ்டார் அதாங்க நம்மபில்லா அஜீத் இந்த ஐலாண்டில் தான் அந்த படத்தின் சூட்டிங் நடந்திருக்கிறது. இதைப்பற்றி இன்னும் நிறைய சொல்லனும் …. சொல்கிறேன்…!

Monday, August 3, 2009

மனம் கவர்ந்த மலேசியா....11

மலைப்பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு சென்றோம்… மாலை 6 மணியானதால் யாருமே அங்கு இல்லை. சாலையில் காரை நிறுத்திவிட்டு கரடுமுரடான பாறைகளுக்கிடையில் ஏறி இறங்கி நீர்வீழ்ச்சியை அடைந்தோம்.
பால்மாதிரி தண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது தண்ணீரில் காலை வைத்தால் ஐஸ் மாதிரி சில்லுப்பு இதுல எப்படி குளிப்பதுன்னு நான் யோசனை பண்ணிக்கொண்டு நிற்க எனது மைத்துனரும் அவர் பையனும் டமார்னு தண்ணில குதிச்சாங்க அதைப்பாத்து என் மகள்களும் குதிக்க எனக்கு குளிர்வந்துடுச்சு.
நல்ல சுத்தமான தண்ணீர் அந்த அருவியின் அருகிலேயே பெரிய பைப் இருந்தது இந்த தண்ணீரைத்தான் பினாங்கு மக்கள் குடிக்கிறார்கள் என்று விடை கொடுத்தார் மைத்துனர்.
ஏல்லோரும் குளிக்கும் போது நான் மட்டும் சும்மா நின்னா நல்லா இருக்காது இல்லிங்களா அதனால நானும் குதிச்சிட்டேன்.
கொஞ்சநேரம்தான் குளிரு அப்புறம் ஜாலியாத்தான் இருந்துச்சு…
அரைமணிநேரம் குளிச்சுட்டு கரையேறினோம்.


நாங்கள் நிறுத்தியிருந்த காருக்கு அருகில் கடைகள் இருந்தன. ஆந்த கடைக்கு பக்கத்தில் ஒரு கூண்டில் இரண்டு குரங்கு குட்டிகள் விளையாடிக் கொண்டிருக்க எனது சின்ன மகள் ஆசையாய் அந்த குரங்குக்கு சிப்ஸ் கொடுத்தால் அதை வாங்கி தண்ணீரில் நனைத்து குரங்கு சாப்பிட்டது. மீண்டும் சிப்ஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் போது ஒரு குரங்கு எனது மகளின் முடியை பிடித்து இழுக்க மற்றொரு குரங்கும் இழுப்பதற்கு ஆயத்தமானது. நூன் எனது மைத்துனரிடம் பேசிக் கொண்டு நின்றேன் இதை கவனிக்க வில்லை… என் மகள் அலறியபோது தான் நான் ஒடி குரங்குகளிடமிருந்து என் மகளின் முடியை காப்பாற்றினே;.
என் மகள் ரொம்பவும் பயந்து விட்டாள்.
இவ்வளவுக்கும் அந்த குரங்கு கூண்டுக்குள் தான் இருந்தது.
குழந்தைகள் மிக அருகில் சென்று நிற்கக்கூடாது. மிருகங்களை பார்க்கும் போது கொஞ்சம் இடைவெளி விட்டுதான் நிற்கவேண்டும்ன்னு என் மகளுக்கு ஆறுதல் சொல்ல…
இதையெல்லாம் சொல்லுங்க என் பக்கத்துல நீங்க ஏன் நிக்கலன்னு அழுதுக்கொண்டே கூற சாரிமா…ன்னு சமாதானம் படுத்தினேன்.




அங்கிருந்து புறப்பட்டு டாய்ஸ் மியூசியம் சென்றோம்.
உள்ளே சென்றால் உலகத்திலுள்ள அனைத்து பொம்மைகளையும் அழகாக அடுக்கி வைத்திருந்தார்கள்.
கலாச்சாரம் சினிமா அரக்கர்கள் சூப்பர்மேன் ஃபைடர் மேன் குத்துச்சண்டை வீரர்கள் ஆங்கிலப்பட நாயகர்கள் நம்ம காமடி உலக நாயகன் மிஸ்டர் பீன் இப்படி நிறைய்ய விதவிதமான பொம்மைகள்.
இதன் உள்ளே வருவதற்கு ஒரு நபருக்கு 20 ரிங்கிட். இது கொஞ்சம் அதிகமாதான் தெரிஞ்சுது…
30 நிமிடங்களில் அனைத்தையும் பார்த்தாச்சு… இது உலகத்திலேயே பெருசுன்னு போடு போட்டிருந்தாங்க இருந்தாலும் இருக்கலாம்…







மறுதினம் தங்கஆபரணங்கள் செய்யும் பேக்டரிக்கு செல்ல தயாரானோம்…
துபாயில் நான் வேலைபார்க்கும் நகைக் கடைக்கு பினாங்கிலிருந்துதான் நகைகள் செய்து வருகிறது… சப்ளையர்கள் தங்களுடைய நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
அதன் பேரில் சென்றோம் நகைகள் எப்படி செய்கிறார்கள் என்பதை என் துணைவியாருக்கு காண்பித்தேன்.
அதிகமாக இந்தோனேசிய பெண்கள் தான் வேலைப்பார்க்கிறார்கள். வேலையில் மிக கவனமாக இருக்கிறார்கள். ஆனால் சம்பளம் குறைவு.
மலேசியாவிலேயே தங்க தொழிற்சாலை பினாங்கில் தான் அதிகம்.
துபாய்க்கு மிக அதிகமான தங்க இறக்குமதி மலேசியாவிலிருந்து தான் வருகிறது.
இதன் உரிமையாளர்கள் பெரும்பாலோர் சீனர்கள் தான.ஒவ்வொரு வாரமும் ஒரு ஆயிரம் கிலோ துபாய்க்கு இறக்குமதி செய்வார்கள்.
22 கேரட் 21 கேரட் 18 கேரட் இந்த மூன்றுவித தரத்தில் ஆபரணங்கள் செய்கிறார்கள்.
தோழிற்சாலையை முழுவதும் சுற்றி பார்த்து விட்டு கிளம்பும் சமயம் இன்று இரவு டின்னருக்கு எல்லோரும் வரனும்னு சொன்னார்.
சரி வருகிறோம்ன்னு சொன்னேன்… டின்னரை முடிச்சுட்டு மசாஜ் கிளப் வறியான்னு என்னை கேட்டாரு…
ஏம்ப்பா நாங்க சந்தோசமா இருக்குறது உனக்கு பிடிக்கலையா…ன்னே.
இதுல என்ன இருக்குன்னு ரொம்ப அசால்ட்டா சொன்னான்.
டேய் இதுல என் வாழ்க்கையே இருக்குடா… நீபேசுனது என் மனைவி காதுக்கு விழுல… விழுந்திருந்தா அவ்வளவு தான்.
ஏற்கனவே ஒருமுறை கம்பெனி வேலையா நான் மட்டும் பினாங்கு வந்தேன்.
நான் இருக்கும்போதே மசாஜ்க்கு கூப்பிடுகிறாரே நீங்க தனியா வந்தப்ப என்னென்ன பண்ணிருப்பிங்கன்னு தேவையில்லாம அவ கற்பனைக்கு ஆளாகி நான் கர்ப்பம் தரிக்கனுமா…? நான் ஏக பத்தினி விருதன்னு உனக்கு தெரியாதா…?ன்னே.
பரவாயில்லையே உன் மனைவிக்கு நல்லவே பயப்புடுற… நான் மட்டும் தான் அப்படின்னு நனைச்சேன்…ன்னான்.
என்னைவச்சாப்பா உன்னை சோதிக்கனும் … சரி ஆள விடு இதுக்கு மேல நின்னா என்ன நீ வம்புள மாட்டிவிட்டுடுவ… டின்னர் மட்டும் ஏற்பாடு பண்ணு.
நாவாரேன்னு … கிளம்பிட்டேன்.

மாலையில் பினாங்கு கடைத்தெரு சென்று சாமான்கள் வாங்கினோம். இரவு டின்னருக்கு சென்றோம். தமிழ் உணவை சீனர்கள் ருசித்து சாப்பிடுகிறார்கள்.
ஒருவழியா டின்னரை முடிச்சுட்டு பட்டவர்த் போகலாம்னு மைத்துனர சொல்ல புறப்பட்டோம்.
பினாங்கு பாலத்தில் சென்றுக் கொண்டிருக்கும் போது மைத்துனர் இடம் சொன்னேன்.
பினாங்கின் இன்னொரு பெயரை கண்டுபிடிச்சுட்டேன்னு…
எங்க சொல்லுங்க பார்ப்போம்னார்.
சார்ஜ்டவுன் என்றேன்.
எப்படி மச்சான்னா
சைன் போடுதான் போட்டிருக்கே…ன்னே தென்ன மரம் என்ன மரம்னும் கண்டுபிடுச்சிட்டேன்னே…
ஆர்வமாக என் மனைவி என்னமரம்ங்கன்னு கேட்க
சொல்லுங்க மச்சான் தெரிஞ்சுக்கிறோம்னு கேட்க

தென்ன மரம் என்ன மரம் ன்னு நான் திருப்பி சொல்ல
என்ன கிண்டல் பண்றீங்களான்னு அவங்க கேட்க
இல்ல இல்ல
இதை வேகமா கிடுகிடுன்னு சொல்லுங்க
தென்னமரம் என்ன மரம் … தென்னமரம் என்னமரம்
இதிலேயே பதில் இருக்குது
சொல்லி பாருங்க…
ஜூட்…!

Sunday, August 2, 2009

மனம் கவர்ந்த மலேசியா...10

இப்படி கேள்வியா கேட்டுகிட்டு போன பதிலை யார் சொல்வதுன்னு கேக்கிறீங்களா…? கண்டிப்பா பதில் கிடைக்குமுங்க…
நேத்து பின்னூட்டத்துல மதிப்பிற்குரிய ஐயா சுப. நற்குணன் அவர்கள் பினாங்குக்கு தமிழில் பொருள் பாக்கு என்று விளக்கத்தை தந்துள்ளார்…ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி…!

மறுநாள் பைசி கார்டன் போகலாம்னு முடிவு பண்ணினோம்…எல்லாமே மதியத்துக்கு பிறகு தான் கிளம்புனும்னு என் மைத்துனர் ஆர்டர்…காலை நேரத்துல அவர் கடையின் அலுவல்களை பார்ப்பதினால் இந்த முடிவு…
மதியம் புறப்பட்டோம்…
கடற்கரையோரம் உள்ள மலைப்பகுதியில் கார்டன் அமைந்திருக்கிறது. பைசிகார்டனில் நடப்பதற்கு தான் கால்வேண்டும்…வயசு ஆகிடுச்சுன்னு நினைக்கவேண்டாம்…நான் என்னச் சொல்லிக்கல…நான் சின்ன பையன்தானே…
மலையின் மீது ஏறுதற்கு வசதியாக சாலை அமைத்துள்ளார்கள்… சாலைதான் ஏற்றமும் இறக்கமும் வாழ்க்கயைப்போல இருந்துச்சு…மூச்சு வாங்கிடுச்சு…( என் கூட வந்தவங்களுக்கு) அந்த கார்டன் உள்ளே பட்டை ஏலக்காய் ஜாதிக்காய் மிளகாய் பூண்டு இப்படி மசால சம்பந்தப்பட்ட செடி கொடிகள் இருக்கின்றன…அதுமட்டுமல்ல அங்கே ஒரு டீகடை இருக்கு அருமையான மசால டீ போட்டு தராங்க…குடிச்சேன் நல்ல உரைப்பாக (காரமாக) இருந்துச்சு…
என் மைத்துனர் சொன்னார் …. மச்சான் இந்த கார்டன் உள்ள நீங்க ஆச்சிரியபடுகிற மாதிரி ஒரு விசயம் இருக்கு…கண்டுபிடிங்கன்னா…?
டேய்…வேணாம்…என்ன உசுப்பேத்தாதே ஏற்கனவே கேட்ட கேள்விக்கு பதில் வரலை…இப்ப என்ன வச்சு நையாண்டி பண்றியான்னே…
இல்ல மச்சான் உண்மையாதான் சொல்றேன்னார்…
நான் ஆச்சிரியப்படுகிற மாதிரி என்ன இருக்குன்னு யோசனை பண்ணிக் கொண்டிருந்தேன்…ஒன்னும் புலப்படல…அப்படியே கார்டனை சுற்றி வரும்போது இங்கே ஒரு சின்ன மியூசியம் இருந்துச்சு அது உள்ளே சென்றோம்.

சென்றதும் ஆச்சிரியப்பட்டேன்…என் மனைவி சந்தோசப்பட்டார்…என் குழந்தைகள் மாமா…மாமா…ன்னு கூக்குரலிட்டாங்க…அப்படி என்ன விசயம்…?

மியூசியத்தில் என் மைத்துனரின் புகைப்படம்


அந்த மியூசியத்திலே எனது மைத்துனரின் புகைப்படமும் அவர் கடையின் வரலாறும் அங்கு வைக்கப்பட்டிருந்தது.
கேட்டேன் எப்படிப்பா இப்படியெல்லாம்ன்னு…
நாங்க பைசி (மசாலா) வியாபாரம் தான் பண்றோம் எங்க கடை பொருள்களை இந்த மியூசியத்திற்காக இலவசமாக கொடுத்திருக்கிறோம் மார்கெட்டுல நாம்ம கடை மிக பழமையானது. அதனால நம்முடைய விபரங்களை இங்கு வைச்சுருக்காங்கன்னு. இதைப் பார்த்திட்டு பல டூரிஸ்டுகள் நம் கடைக்கு வராங்கன்னார்…

உண்மையில் இது எனக்கு ஆச்சிரியமாதான் இருந்தது…வாழ்த்துக்கள் கூறி விட்டு நடந்தேன்…

போற வழியில ஒரு நீர்வீழ்ச்சி இருக்கு அதுல குளிப்போமான்னார்…குளிக்கிறதுன்னா நமக்கு குலாப்சான் சாப்பிடுறமாதிரி …ம் குளிப்போன்னே…
காரை மலைப்பாதையில் ஒட்டிச் சென்றார்… கார் போய் கொண்டிருந்தது.
திடீரென்று என் மனைவி காரை நிறுத்து நிறுத்துங்க என்று கூச்சலிட்டார்… நான் பதறிப்போய் ஏன் என்னாச்சு என்று கேட்க நிறுத்த சொல்லுங்கன்னு திரும்பவும் கத்தினார் அதற்குள் காரை நிறுத்தினார்.



ஏன் என்ன…? என்று கேட்கும் போது கையை வெளியில் நீட்டி
அங்க பாருங்கன்னா…
கைக் காட்டிய இடத்தில் பார்த்தால் ரம்புத்தான் பழமரம்…
நிறைய்ய காய்ச்சி தொங்குது… இதைப்பார்த்ததும் என் மனைவியை விட எனக்கு ஆர்வம் அதிகமாச்சி…
அடஅடஅட… என்னம்மா காய்ச்சி தொங்குது… இந்த பழம் பத்து பீசை வச்சிகிட்டு துபாயில 15திரஹம் விக்கிறானுங்க இங்க சீண்டுவதற்கு ஆள் இல்லாம கிடக்கே மனசுகடந்து அடிச்சுக்கிச்சு…
பெரும்பாலோர் தங்கள் வீட்டு வாசல்களில் இந்த மரத்தை வளர்கிறார்கள்…

காரைவிட்டு இறங்கினோம் கிளைகளையும் கொப்புகளையும் இழுத்து பழங்களை பறிக்கத்தொடங்கினோம் எறும்புகள் அதிகம் இருந்தன… ஆனால அது கடிக்கல… என் சிட்டுகள் பையை பிடித்துக்கொண்டு டேடி பறிச்சு போடுங்கன்னு உற்சாக படுத்தினாங்க… அவங்களுக்கு ரொம்பவும் பிடித்த பழம் இது…
ஒரு பத்துபழம் தான் பறிச்சுரப்போம் காய் முய்னு சத்தம் வந்தது… திரும்பி பார்த்தால் அந்த மரத்தோட சொந்தக்காரன் இல்ல சொந்தக்காரி பத்தரக்காளி மாதிரி நின்னா… ஐயோ குடும்பத்தோட மாட்டினோம்டான்னு பக்பக்குன்னு நின்னே…
அவள் ஏதோ மலாய்ல பேச… என் மைத்துனர் ஏதோ சொல்ல புலியா வந்தவள் பூனையா போயிட்டா…
மைத்துனர்கிட்ட கேட்டேன்… அவள் என்ன சொன்னா நீ என்ன சொன்னே பேசாம போயிட்டாளேன்னு…
இவங்க திருடர்கள் இல்ல டூரிஸ்டு … பிரியப்படுறாங்க காசுவேணுன்னா வாங்கிக்கன்னு சொன்னேன்…
இல்ல வேண்டாம் பறிச்சிக்க சொல்லுன்னு… சொன்னாங்க…!

எவ்வளவு பெரிய மனசு… இதுவே நம் நாடாக இருந்தால் கட்டிவச்சு தோல உறிச்சுருப்பாங்க… அவசரபட்டுட்டோமே அவங்களிடம் அனுமதி கேட்டு பறிச்சிருக்கலாமேன்னு புத்தி… பின்னாடி சொல்லிச்சு…

வா… அவங்களிடம் மன்னிப்பு கேட்கலாம்னே… அதெல்லாம் வேண்டாம் நாம கிளம்பலாம் வாங்கன்னு அழைத்துப் போய்விட்டார்…

எவ்வளவு ஆசையாக பறிச்சமோ … பிறகு அந்த பழத்தை சாப்பிட யாருக்கும் மனசு வரலை… குழந்தைகளுக்கு முன்னாடி இப்படி நாம செஞ்சிருக்கக் கூடாது.
உற்சாகத்துல செய்திட்டோமேன்னு என் மனைவியிடத்தில் கூறி வருந்தினேன்…

நாம செய்யக்கூடிய ஒவ்வொரு செயலையும் குழந்தைகள் உன்னிப்பாக கவனிக்கிறார்கள். விளையாட்டாக நாம செய்யக்கூடிய சில தவறுகளை குழந்தைகள் கால போக்கில் தவறையே விளையாட்டாக ஆக்கிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு தவறாகவே தெரிவதில்லை.

சமீபத்தில் நான் படித்த பெ. தூரனின் நூலில்

பெற்றோருடைய பேச்சு நடத்தை எல்லாம் குழந்தைக்கு முன்மாதிரியாக இருக்கின்றனவாதலால் அவற்றிலெல்லாம் அவர்கள் மிக எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். குழந்தையை நன்கு வளர்க்க ஆவல் கொண்டிருக்கும் பெற்றோர்கள் தங்கள் நடத்தையையே ஏன் வாழ்க்கையையே அதற்கேற்றபடி அமைத்துக் கொள்ள வேண்டும். களைய முடியாத குறைபாடுகளைக் குறைந்த பட்சம் குழந்தைக்குத் தெரியாதவாறாக மறைத்துக் கொள்ள வேண்டும்.-என்று கூறியிருக்கிறார்… இந்த வாசகங்களை மனதில் நிறுத்திக் கொண்டேன்… இனி இப்படி ஒரு சம்பவம் நம் வாழ்க்கையில் நடக்கக் கூடாது…!

Saturday, August 1, 2009

பிரபலங்களும் பிரியாணியும்...

சில தினங்களுக்கு முன் வலைப்பூ ஆரம்பிப்பது எப்படி...? என்ற நிகழ்ச்சியை கீழைராஸா ஏற்பாடு செய்தார்...எங்கு வைத்து செய்யலாம் என்ற கேள்வி வந்தது...
நான் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருந்திருக்கலாம்...என் வீட்டிலேயே வைக்கலாம்னு உற்சாகத்தில் சொல்லி தொலைக்க... நிகழ்ச்சி முடிவானது....

ஒரு வெள்ளிக்கிழமை காலை 10 மணின்னு முடிவு செய்யப்பட்டது...வெள்ளிக்கிழமைதான் துபாய் வாழ் எங்களுக்கு விடுமுறை....தூங்கனும்னு நினைக்கிறதே வெள்ளிதான்...இந்த வெள்ளிக்கு ஆப்புன்னு முடிவாச்சு....சரி ஒரு வெள்ளிக்கிழமை தானே அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்னு இருந்தேன்...

வெள்ளிக்கிழமையும் வந்துச்சு...ஒரு நாளுபேரு வருந்தாங்க.கீழைராஸா ,அப்துல் வாஹித் ,திருச்சி சையது ,சந்திரசேகர்...சிரிச்சு சிரிச்சு பேசினாங்க...அட நல்ல ஆளாக இருக்கிறாங்களேன்னு...நானும் அவங்களோடு சேர்ந்து சிரிக்க ஒரே சிரிப்பு மழையா இருந்துச்சு....!




வரும்போதே கீழை ராஸா அவருடைய லெப்டாப்பை எடுத்து வந்தாரு...அதை வச்சுதான் பதிவைப்பற்றிய பாடம் நடத்தினாரு....எனக்கு ஏற்கனவே பதிவு இருந்தாலும் சரி நமக்கு தெரியாத விசயங்கள் ஏதாவது இருக்கலாம் கத்துக்கலாம்னு ஆர்வத்தோட இருந்தேன்...
இப்படி அப்படின்னு எல்லாத்தையும் தெளிவாதான் சொன்னாரு....எல்லாம் முடிஞ்சு அவர் தயாரித்த குரும்படம் ஒன்னையும் போட்டு காண்பிச்சாரு...அட ஆளு சரியான கில்லாடியா இருப்பார்னு தோனுச்சு...

தொழுகை நேரம் நெருங்கியதுனால நாங்க எல்லோரும் தொழுது விட்டு வந்தோமுங்க.... ஹோட்டலுக்கு போய் மந்தி பிரியாணி சாப்பிடலாம்னு நான் தான் ஐடியா கொடுத்தேன்...கொடுத்தவரைக்கும் சரிதாங்க...

சாப்பிடும் போது எனக்கு முன்னால கீழைராஸா உட்காந்திருந்தாரு...சாப்பிட்டுகிட்டே சொன்னாரு...பிரியாணி சூப்பரா இருக்குன்னு....எனக்கு அப்படியே சில்லுனு இருந்துச்சு... நாம ரெக்கமடேசன் பண்ணின சாப்பாட்டை நல்லாருக்குன்னு சொல்லிட்டாரேன்னு குருட்டு உற்சாகத்துல நான் சூப்பரா பிரியாணி போடுவேன்னு சொல்லி வெச்சேன்...

அட பாராட்டுவாருன்னு பார்த்தா ... அப்படியா அப்ப அடுத்தவாரம் பிரியாணி ஆக்கிடுங்க நம்ம இந்த நாளுபேரும் சாப்பிடலாம்னு சொன்னாரு....! அப்பவே எனக்கு பகீர்ன்னது...ஐய்ஐயோ...வாயக்குடுத்து வாங்கிக்கிட்டமடான்னு....சரி நாலு பேர்தானேன்னு சமாளிச்சுடலாம்னு நானும் ரெடியாவுனேன்....!

ரெண்டு நாள் கழிச்சு கீழை ராஸா போன்போட்டாரு....என்ன பிரியாணி வேளையெல்லாம் எப்படி இருக்குன்னாரு...அதுக்கென்ன வியாழன்கிழமை எல்லா சாமான்களையும் வாங்கி ரெடிபண்ணிடுவேன்னே...



நாம நாளுபேரு மட்டுமல்ல இன்னும் ரெண்டு நண்பர்கள் வராங்கன்னாரு....
பரவாயில்ல ரெண்டுபேரு தானே..சமாளிக்கலாம்னு ஆறா கணக்கு பண்ணினேன்....
இதுல ஏன் பங்குக்கு நண்பர் நாசரை கூப்பிட்டேன்

மறு நாளு வாஹித் இருக்காறே....அவருதாங்க இந்த பட்டிமன்றத்துல யெல்லாம் குழைப்பாறே....அவரு போன் போட்டு
என்ன இஸ்மத் பாய் பிரியாணி வேளைய ஆரம்பிச்சுட்டீங்களான்னு கேட்டாரு....
அட என்னா பாசமா கேக்குறறேன்னு வியாழன்கிழமை தான் சாமான்கள் வாங்கனும்னு சொன்னேன்....
அப்படியா நல்லவேளை சாமான்கள் வாங்கிட்டீங்களோன்னு நனெச்சேன்னாரு
ஏன்னே...?
எனக்கு வேண்டியபட்டவரு ரெண்டுபேரு வறாங்க அதான் உங்ககிட்ட சொல்லிக்கிலாம்னு சரி சரி நீங்க வேலைய பாருங்கன்னாரு....
கணக்கு பார்த்தா எட்டுபேரு...?கொஞ்சம் பதட்டம் இருந்தாலும் சமாளிப்போம்னு தைரியம் இருந்துச்சு....

மாலைல திருச்சி சையது போன் பண்ணி பாய் நீங்க ஒன்டியா இருந்து கஸ்டப்படுவீங்களே நான் கூடமாட ஒத்தாசைக்கு வரவான்னாரு...? பரவாயில்லை நம்மமேல எவ்வளவு பாசம்ன்னு நினைச்சு...எதுக்கு உங்களுக்கு கஸ்டம் இவ்ளோ பண்றேன்....சின்னசின்ன வேலைகளையும் நானே பண்ணிக்கிரேனேன்னு சொன்னேன்...

அப்புறம் பாய் நம்ம வானலை வளர்த்தமிழ் ஆலோசகர் காவிரிமைந்தனுக்கு
தெரிஞ்சா வருத்தப்பட்டுக்குவாறேன்னு அவரையும் பிரியாணிக்கு கூப்பிட்டிருக்கேன்னாரு...!அவரு மட்டும் தானான்னே...? அவரைமட்டும் கூப்பிட்டா நல்லா இருக்காதேன்னு நம்ம பழனி அவரையும் கூட அழைச்சிருக்கேன்னு சொல்லிட்டு சாரி பாய்னு போனை வச்சுட்டாரு....

எனக்கு மூச்சு வாங்க ஆரம்பிச்சுடுச்சு....இன்னும் ஒருத்தருதான் பாக்கி நாளாவது சந்திரசேகர்....அவரு போனவாரமே நான்வரமாட்டேன் லீவுல ஊருக்கு போறேன்னு சொல்லிட்டு போயிட்டாரு...இல்லன்னா அவருரெண்டு பேர அழைச்சுட்டு வரேன்னு போன் பண்ணிருப்பாரு....தப்பிச்சோம் இதுவே பத்து பேராச்சு....

இதை நெனச்சு பயமே வந்துடுச்சு....ஒருவழியா எனக்கு நானே ஆறுதல்படித்துதிகிட்டு சமாளிக்கலாம்னு தைரியமா இருந்தேன்....

இன்று வியாழன் டூட்டி முடிச்சுட்டு பிரியாணிக்குள்ள வேலைய ஆரம்பிக்க ரெடியானேன்....காலிங் பெல் சப்தம் கேட்க கதவை திறந்தேன்....
பெரிய உருவத்தோடு கீழைராஸாவும் திருச்சி சையதும் நின்னாங்க....வாங்க வாங்க...ன்னு உள்ளே அழைத்தேன்....

உங்களுக்கு உதவிசெய்யலாம்னு தான் வந்தோம்னு கீழைராஸா சொன்னாரு....
என்னங்க உதவி பத்துபேருதானே சமாளிச்சுடுவேன்னு சொன்னேன்....
அந்த நேரம் பார்த்து கீழைராஸாக்கு போன் வந்துச்சு.....பேசினாரு பேசிகிட்டே வாச பக்கம் போனாரு....
நான் எதையோ எடுக்க வாசப்பக்கம் போக எதேச்சயா அவரு பேசுறத கேக்கக் கூடிய சந்தர்ப்பம் அமைஞ்சுடுச்சி....

சர்புதீன் பாய் ஒரு நல்ல பார்ட்டி சிக்கிருக்கு நல்லா பிரியாணி போடுவானாம்....நாளைக்கி பிரியாணி போட்டு பார்க்குக்கு எடுத்து போறோம்னு சொன்னாரு....
நானும் வரவான்னு அவருகேட்டிருப்பாரு போல...
உங்கள உட்டுட்டு போனா நல்லாயிருக்காது நீங்க அவசியம் வாங்கன்னாரு....
திரும்பவும் அவரு ஏதோ கேட்க.... பசங்களையா...? எத்தனை பேரு...?
எது வேனு நிறைய்யவா....அவ்ளோபேறா...?ன்னு கீழைராஸா வாயை பிளக்க....இதைக் கேட்ட எனக்கு மயக்கமே வந்துடுச்சு....ஒருத்தவனை வச்சு இவ்வளவு பேறா சமைக்கிறது...!
எக்குதப்ப இந்த ஆளுங்க கையில மாட்டிக்கினோம்டா...ன்னு சுதாரிச்சேன்....

திரும்பவும் பேசிக்கிட்டு இருந்தாரு .... இல்லபாய் இந்த வாரம் நீங்க மட்டும் வாங்க அடுத்தவாரம் உங்க பசங்ககளை யெல்லாரையும் அழைச்சுகிட்டு வரலாம்னு....போனை கட்பண்ணினாரு....
அடப்பாவிங்களா...இந்த வாரத்துக்குள்ள பிரியாணியே இன்னும் ரெடியாகல....அடுத்தவாரத்துக்கு இப்பவே பிளான் பண்றான்களேன்னு....இதை இப்படியே விட்டா சரியாவராது....முடிவுகட்டனும்னு நினைச்சேன்....

சாதரனமா வெள்ளிக்கிழமையில 10 மணிக்கும் 11 மணிக்கும் எழுந்திருக்கக்கூடிய நான் ....இந்த வெள்ளிக்கிழமை 4 மணிக்கே எழுந்திருச்சு பிரியாணி வேலைய ஆரம்பிச்சு 8 மணிக்கு தான் முடிச்சேன்....
வேலையெல்லாம் முடிச்சுட்டு கீழைராஸாவுக்கு போன் போட்டா....அந்தாளு அப்பதான் எழுந்திருக்கிறாராம்....என்னப்பா 8 மணிக் கெல்லாம் கிளம்பிடனும்னு சொன்னீகளே.... இன்னும் தூங்குறீங்களேன்னேன்...
வெள்ளிக்கிழமை பாய்...ன்னாரு...எது வெள்ளிக்கிழமையா...?
அப்ப எனக்கு என்ன கிழமையா..?.அடப்பாவிங்களா எல்லாருமா சேர்ந்து என் தூக்கத்தை கெடுத்திட்டீங்களடான்னு...ஒரு வழியா கிளம்பி பார்க் போய் சாப்பிட ஆரம்பிச்சாங்க...

ஒரு வாய் பிரியாணிய வாயில வச்சவுடனே திருச்சி சையது சொன்னாரு .....பாய் இது மாதிரி பிரியாணி நான் சாப்பிட்டதே இல்லன்னு சொல்ல....இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி மாட்டி விடுறாங்களே...
ஒவ்வொரு ஆளா அதையே ரிபிட்டு பாட....சட்டி காலியாச்சு...மனசுக்கு கொஞ்சம் திருப்பதியா இருந்தாலும்.....


கீழைராஸா எல்லாத்தையும் போட்டா எடுத்தாரு....சரி ஒரு ஞாபகத்துக்காக எடுக்குறார்னு நினைச்சேன்....
வானலை நிகழ்ச்சிக்கு போனப்ப பார்த்தா பிரியாணி போட்டோ எல்லார்கையிலும் இருந்துச்சு...என்னப் பார்த்ததும் பாய் நம்மள மறந்திட்டீங்களேன்னு குசலம் விசாரிச்சாங்க....

நாளுபேருன்னு சொல்லி இப்ப 400 பேருக்கு எத்திவச்சிட்டாங்களேன்னு .... நிகழ்ச்சி முடிந்ததும் வேகமா கிளம்பினேன்...

இஸ்மத் பாய்ன்னு ஒரு குரல்....
திரும்பி பார்த்தா சிம்மபாரதி....

வருகிற வெள்ளிக்கிழமை 4 பேருமட்டும் பிரியாணி போடுங்களேன்னு... சொன்னாரு
அவ்வளவு தான்....தலைதெறிக்க...திரும்பி கூட பார்க்காம ஒடிட்டேங்கோ....

இன்னும் முச்சு வாங்குதய்யா....முச்சுவாங்குது....!

(வடிவேல் பாணியில் ஒரு முயற்சி....சம்பவம் உண்மை)

மனம் கவர்ந்த மலேசியா...9

காலையில் எனது சுட்டிகள் நீச்சல் குளத்தில் குளிப்பதற்கு தயாரானார்கள்…
அவர்களை அழைத்துக்கொண்டு நானும் இறங்கினேன்…
ரொம்பவும் தூய்மையாக இருந்தது. நாங்கள் தங்கிருந்த அந்த கட்டிடத்திற்கு நல்ல பாதுகாப்பும் கொடுத்திருந்தார்கள்…வெளியிலிருந்து யார் வந்தாலும் அவர்கள் யார் எந்த வீட்டுக்கு வருகிறார்கள் போன்ற விபரங்களை கேட்டே அனுமதிக்கிறார்கள் செக்யூரிட்டிகள்…
பெரும்பாலோர் சொந்த வீட்டில் அல்லது பிளாட்டில் தான் வசிக்கிறார்கள். ஒரு லட்சம் ரிங்கிட்டிற்கு இரண்டு அறை கொண்ட பிளாட் விலைக்கு கிடைக்கிறது…வாடகையாக இருந்தால் 500 ரிங்கிட்டுக்கு 3 பெட்ரூம் பிளாட் கிடைக்கிறது.
இதே துபாயில் 200 சதுரஅடி கொண்ட ஸ்டுடியோ பிளாட் பாத்ரூம் மட்டும் தனி இதற்கு ஆண்டுக்கான வாடகையே நாற்பதுஆயிரம் திரஹம்-ரிங்கிட் வசூலிக்கிறார்கள்…அந்த 200 சதுரஅடி பிளாட் மலேசியாவில் 40000 ரிங்கிட்டிற்கு நாம் சொந்தமாக வாங்கியே விடலாம்.
மலேசியாவை பொருத்தவரையில் உணவு தங்குமிடம் மருத்துவம் இவைகளுக்காண சிலவுகள் மிகக்குறைவு…சிங்கப்பூரை இதோடு ஒத்துப் பார்த்தோமேயானால் மலேசியாவுக்கு தான் என் ஒட்டு…
அதேபோல் சம்பளமும் குறைவு என்கிறார்கள்…அது வேலையைப் பொருத்து இருக்கிறது…பெரும்பாலும் இந்தோனேசியா தாய்லாந்து இந்தியா பங்கலாதேஷ் போன்ற நாட்டினர்கள் அதிகமாக வேலைப்பார்க்கிறார்கள்…சம்பளம் குறைவுக்கு இதுவும் ஓரு காரணம்…!



மதியம் பினாங்ஹில் போவதற்கு கிளம்பினோம்…கைடு என் மைத்துனர்தான். அவர் கைடாக மட்டும் வரவில்லை பைனான்சியல் மினிஸ்டராகவே இருந்தாரு. (இப்படி சொன்னாத்தான் இன்னும் நல்லா எனக்கு சிலவு செய்வார்னு…யாரோ சொல்றீங்க) ஒவ்வொரு இடத்திலும் நுழைவுச்சீட்டு பெறுவதற்கு கட்டணம் செலுத்துவதில எனக்கும் அவருக்கும் போட்டியாகவே இருந்தது. தங்குவது தான் ஒசின்னா சுத்திபார்ப்பதிலும் ஒசியான்னு நீங்க கேட்டுடாதிங்க…விடமாட்டேங்குறான்…என் மனைவிக்கு ரொம்ப வருத்தம் என் தம்பி காசிலேயே ஊரை சுத்திறீங்களேன்னு…
சரி…சரி…துபாய் வரும்போது நாம கவனிப்போன்னு ஆறுதலா என் மனைவிகிட்ட ஒரு வார்த்தைக்காக சொன்னே…உடனே ஆமா மச்சான்…அடுத்த வருடம் துபாய் வருவதற்கு புரோகிராம் போட்டிருக்கோம்னு சொன்னாரு…என் மனைவிக்கு ரொம்ப சந்தோசம்…அப்ப எனக்கு…?
பினாங்ஹில் இரயில்வே ஸ்டேசனில் ஒரளவு கூட்டம் இருந்தது…பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நின்றுக் கொண்டிருந்தார்கள் இதில் வளைகுடாவிலிருந்து அரபியர்களின் குடும்பங்கள்; அதிகம். அவர்கள் பினாங்கில்
வீடு வாடகைக்கு எடுத்து இரண்டு மாதம் வரை தங்குவார்களாம்…அவர்கள் தங்கியிருக்கக்கூடிய பகுதியில் விலைகள் கொஞ்சம் அதிகம்…ம்…இருக்காதாபின்னே…பெட்ரோல் காசாச்சே…அதை கரைக்கினுமுல்ல…!


பினாங்கு ஹில் ரெயிலின் அழகு என்னன்னா…ரோடு செங்குத்தாக இருக்கிறது மெதுவாக தான் ஏறுகிறது…இது கீழிருந்து மேலே ஏறும் போது மேலிருந்து கீழே வருவதற்கு அங்கிருந்து ஒரு இரயில் புறப்படுகிறது…ஒன்வே ரோடு தான் …குறிப்பிட்ட தூரத்தில் இரண்டுடேக் இருக்கிறது…இந்த இரண்டு இரயில்களும் சரியான நேரத்தில் அந்த கிராசிங்கை அடையனும்…அப்படித்தான் அடைகிறது…இதில் சின்ன மாற்றம் ஏற்பட்டாலும் விபத்துதான் முடிவாக இருக்கும்.
இந்த இரயில் ஒரு 500 மீட்டர் தூரத்திற்கு செல்கிறது…அதன் பிறகு இங்கு இன்னொரு இரயிலுக்கு நாம் மாறனும்…அதுவும் இதே பார்முலாதான்… இந்த மலையின் உச்சிக்கு சென்றால் குளிர்ருகிறது…முழு பினாங்கு நகரத்தையே நம்மால் பார்க்க முடிகிறது…
அதன் உள்ளே…பறவைகள் பூங்கா இருக்கிறது…கடைகளும் இருக்கிறது…
அதுமட்டுமல்ல…அந்த மலையின் மேல் பள்ளிவாசலும் கோவிலும் மாதாகோவிலும் இருக்கிறது…இதைப் பார்த்ததும் சமய நல்லிணக்க ஒற்றுமையை ஓங்கச் செய்துள்ளதாக தோன்றியது…கோயில்களில் பஜனையும் பள்ளிவாசலில் தொழுகையும் தேவாலயத்தில் பிரார்த்தனையும் நடந்துக் கொண்டிருந்தது…


அங்கு வரக்கூடிய மனிதர்கள் அவரவர்களுக்கு எதுதேவையோ அதை எடுத்துக்கொள்கிறார்கள்…இந்த சூழல் என்மனதை மிகவும் கவர்ந்தது…
என் மைத்துனரின் பையனும் என்குழந்தைகளும் நன்றாக விளையாடினார்கள்…பல வண்ணங்களில் அடைக்கப்பட்டிருந்த பறவைகளுக்கு இந்த குழந்தைகள் அவர்கள் சாப்பிட்ட சிப்சை பறிமாறினார்கள் அந்த பறவைகளும் அதை வாங்கி கொறித்தது அந்த காட்சியைப் பார்த்து நாங்கள் ரசித்தோம்…
சிலமணி நேரங்களை சிலவு செய்து விட்டு கீழே இறங்கினோம்…துரியான் பழத்தின் மரத்தை இரயிலில் வரும்போது பார்த்தோம்ங்க…அதுல துணிகட்டி வச்சுருக்காங்க…அந்த பழத்தில் முட்கள் அதிகம்…அது விழும்போது யார் தலையிலாவது விழுந்தால் அவ்வளவுதான் மியூசிக் வாசிச்சிடுவாங்களாம்…
காட்டுப்பக்கம் போறவங்க கவனமா போங்ககண்ணு…
பினாங்குக்கு இன்னொரு பேரு இருக்குன்னு மைத்துனர் சொன்னாரு… என்னப்பேருன்னே…? … என்னப் பார்த்து சிரித்தார்… அந்த சிரிப்பிலேயே தெரிஞ்சுடுச்சு… அவருக்கு தெரியாதுன்னு…
நான் உன்னுகிட்ட இனிமே எதையும் கேட்கமாட்டேன்… நானாகவே தெரிஞ்சுக்கிறேன்…ன்னே…
ஏன் இவ்வளவு விரக்கதியாயிட்டீங்க…?ன்னாரு


பின்னே என்னப்பா… தென்னமரம் என்னமரம்னு இதுவரைக்கும் சொல்லலையே…ன்னே…!
ஆரம்பிச்சுட்டாரப்பா…?ன்னு என் மனைவிபக்கம் அவன்பார்க்க…
ஏங்க… தென்னமரம் என்னமரம்னு தெரிஞ்சு…இப்ப என்ன கோடிஸ்வரன் நிகழ்ச்சியில் கலந்துக்க போறீங்களா?அவனை கேள்விமேல கேள்வி கேக்குறீங்க… ன்னாங்க.
எங்க… கோடிஸ்வரன் நிகழ்ச்சில கலந்து கோடிய வாங்கிபுடுவேன்னு உங்களுக் கெல்லாம் பொறாமை…?.ன்னு நான் தனியா பொலம்பிக்கொண்டே நடந்தேன்…
இவரு இப்படி தான் நீ கண்டுக்காத தம்பின்னு என் மனைவி மைத்துனர் இடம் சொல்ல…
எப்படிக்கா….துபாயில வச்சு சமாளிக்கிறே… தாங்க முடியலேயே…ன்னு வந்து ரெண்டே நாள்ல புரிஞ்சுக்கிட்டான்…
கூட்டு சேர்ந்துட்டாங்கடா…இனி ஞாக்கிரதையா இருக்கனும்…!

கேள்வி எண்.1. தென்னமரம் என்ன மரம்…?
கேள்வி எண்.2.பினாங்கின் மற்றொரு பெயர் என்ன…?
எழுதி வைச்சுகிட்டேன்… பதிலை கண்டுபிடிச்சுடுவேனில்ல…!