உங்கள் வருகைக்கு நன்றி...

Thursday, February 4, 2010

காலடியில் சொர்க்கம் (சிறுகதை)


‘தாத்தா எழுந்திறிங்க’ என்று பேரன் பாசித் கூப்பிட்டதை பொறுட்படுத்தாமல் விட்டத்தைப்பார்த்துக் கொண்டு படுத்திருந்தார் உஸ்மான்பாய்.

எழுந்திருங்க என்று கூப்பிடுவது ஆஸ்பத்திரி போவதற்கு பதினைந்து வருடங்களாக எல்லாம் மருந்தும் சாப்பிட்டாச்சு ஆனால் இரண்டு காலிலும் உள்ள புண் மட்டும் குணமாகவில்லை.

இப்பவும் பேரன் அதுக்குதான் கூப்பிடுகிறான் என்பது தெரிந்திருந்தாலும் ஆஸ்பட்டல் போவதற்கு மனசு அலுப்புதட்டியது.

‘உடம்பு சரியில்லையா’ என கரசனையோடு அவரருகில் அமர்ந்து கேட்டுக் கொண்டே அவர் நெற்றியில் கைவைத்து சுடுகிறதா என்று பார்த்தான் பாசித்.

உடம்பெல்லாம் நல்லாதான் இருக்கு மனசுதான் சரியில்ல என்று பேரனிடம் கூறுவதற்கு அவரிடம் தைரியமில்லை.

எந்த குறையும் இல்லாமல் தன்னை பேணிகாத்து வரும் பேரனிடம் மனசு சரியில்லை என்று கூறினால் அவனால் தாங்க முடியாது என்பதை நன்கு அறிந்திருந்தார்.

‘தாத்தா நேரமாகுது ஆஸ்பத்திரியில கூட்டமாகிடும் கிளம்புங்க’ என்று துரிதப்படுத்தினான் பாசித்.

பேரனின் நச்சரிப்புக்காக அவன் மனம் திருப்திக்காக புறப்பட்டார் உஸ்மான் பாய்.

‘அம்மாவை பார்க்க எப்போ போறே?' கேட்டார் உஸ்மான்.

“அம்மாவை பார்த்து வந்து இரண்டு நாள்தானே ஆச்சு எப்பவும் அம்மாவைப் பற்றியே அதிகமா எனக்கு ஞாபகம் மூட்டிக்கிட்டு இருக்கீங்க... அப்பாவுடன்தானே அம்மா இருக்காங்க நான் வேலைக்காக வேண்டி இப்படி தூரமா குடும்பத்துடன் இருக்கிறதுனால உங்களை துணைக்கி வைத்துக் கொண்டு வார விடுமுறையில நான் போகலைன்னாலும் வம்பிப்பா என்னை போகச்சொல்லி கட்டாய படுத்துறீங்...சில நேரம் எனக்கு எரிச்சலாக இருக்கு.”என்றான்

‘தாயை பார்ப்பதற்கு உனக்கு எரிச்சலாக இருக்கா’? கேட்டார் உஸ்மான்.

‘பார்பதற்கு இல்ல...நீங்க இப்படி அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பதற்கு’ என்றான்.

மருத்துவமனையில் கூட்டம் அதிகமாகவே இருந்தது.வரிசையில் உஸ்மானை அமரவைத்துவிட்டு பாசித் பெயர் பதிவு செய்ய சென்றான்.
வயதான மூதாட்டி ஒருவரை கைத்தாங்களாக ஒருவர் அழைத்துவர அங்கு அமர்வதற்கு இருக்கை காலியாக இருக்கவில்லை.அழைத்து வந்தவர் சுற்றும் முற்றும் பார்க்க பலரும் குழந்தைகளுடனும் வயதானர்களாகவும் இருந்தார்கள் உஸ்மான் பாய் சடாரென எழுந்து தன் இருக்கையில் அமரும்படி சைகை செய்தார்.

‘வேண்டாம்ங்க இப்படி தரையிலேயே உட்கார வைக்கிறேன’; என்று மூதாட்டியை அமைத்து வந்தவர் கூற

“தரையில வேண்டாம் சில்லுன்னு இருக்கும் இருக்கையில அமரவையுங்கள்” என்று கூறி தன் கைத்தடியின் துணையுடன் எழுந்து செவிற்றில் சாய்ந்து கொண்டார் உஸ்மான்.

மூதாட்டி கைகூப்பி நன்றி கூறினார்.

‘ஆத்தா நான் போய் டோக்கன் வாங்கியாறேன்’ என்று அழைத்துவந்தவர் உரக்க கூறிவிட்டு சென்றார்.

அவர் செல்வதையே பார்த்துக் கொண்டு நின்றார் உஸ்மான்.
இந்த மூதாட்டி அவருடைய தாயாகதானிருக்கும் எப்படி அனுசரனையுடன் நடந்துக் கொள்கிறார் என்று அவரை நோக்கிய எண்ணம் பறந்தது.

உஸ்மானை நோக்கி வந்த பாசித் உஸ்மான் நிற்பதைக் கண்டு
“ஏன் தாத்தா நிக்கிறீங்க உங்கள உட்காரவச்சிட்டுதானே போனேன்” என்று கேட்க

“வயசானவங்க உட்காரட்டுமேன்னு நான் நின்னுகிட்டேன்” என்றார்.

“ஏன்ன வயசானவங்களா? அப்ப நீங்க வயசுப்பையனா...? உங்களுக்கே ஒரு ஆள் தூக்கிவிடனும் ஏன்தான் இப்படி இருக்கீ;ங்களோ தெரியல.சரிவாங்க டாக்டர் ரூமுக்கு போவோம்” என்று அழைத்துச் சென்றான் பாசித்.

வழக்கம்போல் புன்னகையுடன் வரவேற்றார் டாக்டர்

“பாய் ! எப்படி இருக்கீங்க புண்ணு ஆறி இருக்கா காலை ஸ்டுல் மேலே வைங்க” என்று காலைப்பார்த்தார்.புண் ஆறுவதற்கு பதிலாக அதிகமாக இருப்பதுபோல் டாக்டருக்கு தெரிந்தது.

“என்ன பாய் புண்ணு அதிகமா தெரியுதே ஒழுங்கா மருந்து சாப்பிட்டீங்களா? மருந்து போட்டீங்களா?” ஏன்று கேட்க... பாசித் முந்திக் கொண்டு வேலாவேலைக்கி சரியா நான்தான் சார் மருந்து கொடுக்கிறேன் என்றான்.

உஸ்மானைப் பார்த்து “பாய் கவலைப் படாதீங்க எப்படியும் குணப்படுத்திடுறேன் அடுத்தமாசம் பெங்களுருல பெரிய ஆஸ்பட்டலுக்கு பல நாட்டிலிருந்து டாக்டர்கள் வர்றாங்க நானும் போறேன் நீங்களும் வந்தீங்கன்னா மற்ற டாக்டர்களோடு கலந்து சரிபண்ணிடலாம்” என்று டாக்டர் கூறியதும்

பாசித் உடனே ‘நிச்சயமா கூட்டிவாரேன்’ என்றான்.

உஸ்மான் சிரித்துக் கொண்டே ‘அதெல்லாம் சரி வராது வேண்டாம்’ என்றார்.

“நோயாளி ஒத்துழைச்சாத்தான் நோயை குணப்படுத்த முடியும்” என்று டாக்டர் கூறியபோது

“குணமாகக் கூடிய நோயாக இருந்தா எப்பவோ குணமாகி இருக்கும் இது குணமாகாது சார் என்காலோடு போட்டி போட்டு உங்க நம்பிக்கையை கெடுத்துக்காதீங்க... வேண்டாம்னு சொன்னாலும் என் பேரனும் விடமாட்டேங்குறான்” என்றார்.

“தாத்த ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க டாக்டர் எப்படியும் குணப்படுத்திவிடுவார்” என்று நம்பிக்கை குரல் கொடுத்தான் பாசித்.

ஆஸ்பட்டலைவிட்டு புறப்பட்டனர்.

மூதாட்டியை சைக்கிள் ரிக்ஷாவில் அமரவைத்து அழைத்துவந்தவர் சைக்கிளை மிதிக்கலானார்.

அதைக் கண்ட உஸ்மான் கண்களில் கண்ணீர் கரைபுரண்டது

'தாத்தா ஏன் அழறீங்க' பதட்டத்துடன் பாசித்கேட்க

'தூசிப்பா' என்று கண்களை துடைத்தபடி குனிந்து நடந்தார்.

பேரன் என்மேல் வைத்திருக்கும் அன்பைப் போல் என்தாயிடம் நான் வைத்திருந்தால் எனக்கு இந்த நிலமை வந்திருக்குமா? கட்டியவளின் கட்டளைக்கா பத்துமாசம் சுமந்த வயிற்றை எட்டி உதைத்த கால்களுக்கு இந்த தண்டனை சிறியதுதான்.
ஏத்தனை டாக்டர்கள் பார்த்தாலும் மருந்துகள் கொடுத்தலும் இந்த நோய் தீராது என்தாய் மன்னிக்காதவரையில்.

Monday, February 1, 2010

பங்குச் சந்தை உஷார்


பங்கு சந்தையைப் பற்றிய செய்திகளும், பல நூல்களும் தற்போது மிகையாக வெளிவந்துக் கொண்டிருக்கிறது.அன்று படித்தவர்கள் கூட இதைப்பற்றிய விளக்கங்களை அறிவுகளை பெறாமல் காலத்தை கடத்தினார்கள்.இன்று சாதாரனமானவர்களும் பங்கு சந்தையில் நுழைந்து சம்பாதிக்க ஆரம்பித்துள்ளார்கள்; என்றால் நம் நாட்டின் வளர்ச்சிப் பாதையை ஒரு கனம் திரும்பிப்பார்க்க வைக்கிறது.

இன்று பலரும் பங்கு சந்தையைப் பற்றி அறிவதற்கு மிகுந்த ஆவல் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்.தொலைசாட்சியிலும் கூட தனி நிகச்சியாக பங்கு சந்தையைப் பற்றிய விபரங்களை நிபுணர்களை வைத்து வாதிக்கிறார்கள்.

பல நிபுணர்கள் பல மாவட்டங்களில் பங்கு சந்தை விழிப்புணர்வு கூட்டங்களை நிகழ்த்திக் கொண்டு வருகிறார்கள். பல நகரங்களில் சப் புரோக்கர்கள் அலுவலகங்கள் அமைத்து இணையதளம் மூலம் தினசரி வர்த்தகங்களையும் செய்யுமளவு பங்கு சந்தையின் வளர்ச்சி விரிவடைந்து கொண்டிருக்கிறது.

பெரும்பாலோர் ஏஜண்ட்டுகளை நம்பியே தங்களின் முதலீடுகளை செய்து வருகிறார்கள்.பலருக்கும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆவலும், ஆசையும் அதிகம் இருக்கிறது அதே நேரத்தில் நாம் செய்யக் கூடிய முதலீடுகள் நல்ல கம்பெனியில் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை தன்னால் உறுதியாக சொல்லமுடியாமல் ஏஜண்டுகளின் வாய்மொழிகளை நம்பியே செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

பலரை நான் கைக்காட்டுவதை விட என்னையே இங்கு உதரணத்திற்கு எடுத்துக்கொள்ளலாம்.
பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்கு மித்த ஆர்வம் என்னிடம் இருக்கிறது.
2007-ல் ஒரு ஏஜண்ட் என்னை அனுகினார்.இன்சுரன்ஸ்சுடன் நீங்கள் முதலீடு செய்தால் உங்கள் பணத்திற்கு முழுபாதுகாப்பு என்று கூறி யூலிப் என்ற ஸ்கீமை கூறினார்.

மூன்று வருடம் மட்டும் நீங்கள் தொகை செலுத்தினால் போதும் நான்காவது வருடம் உங்களுக்கு இரண்டுமடங்காக உங்கள் தொகை உங்களுக்கு கிடைக்கும் என்றார்.நானும் ஆர்வத்துடன் யூலிப் ஸ்கீமில்(ULIP) சேர்ந்தேன்.

பங்கு சந்தையைப் பற்றிய நூல்களை வாங்கி படிக்க ஆரம்பித்தேன் அதன் பின் தொலைக்காட்சிகளில் பங்கு சந்தைப்பற்றிய செய்திகளை கேட்க ஆரம்பித்தேன்.

முதலீடு செய்த யூலிப்பைப் பற்றிய விபரங்களை அறிய ஆரம்பித்தேன் சந்தையில் மூன்றாண்டில் எவ்வளவு வளர்ந்திருக்கிறது என்று மனிக்கண்ரோல் என்ற இணையதள முகவரியல் ஆய்தேன்.

அதிர்ச்சியாக இருந்தது.மூன்றாண்டில் ஆண்டுக்கு ஒரு லட்சம் வீதம் 3 லட்சம் கட்டிருந்தேன். இந்த 3 ஆண்டில் அதன் வளர்ச்சி என்பது ஒன்றுமே இல்லை.
நான் கட்டிய தொகையிலிருந்து 30 சதவிகிதம் குறைவாகவே இருந்தது.
பங்கு சந்தையில் பலரும் பணம் பார்ப்பதாக கூறுகிறார்கள் ஆனால் நமக்கு ஏன் இப்படி குறைவாக இருக்கிறது என்று அலசினால் பல செய்திகள் வெளிவருகிறது.

யூலிப் என்ற இன்சூரன்சுடன் கட்டக்கூடிய ஸ்கீம் பத்து ஆண்டுகளுக்கு தொடந்து கட்டினால் இந்த 10 ஆண்டில் நம் பங்கு வளர்ந்து நல்ல நிலையில் இருக்கும். 4 வதுஆண்டில் இரு மடங்கு கூடும் என்பது ஏஜண்ட் கூறும் மாயை வார்த்தைகள். காரணம் யூலிப் ஸ்கீமில் கட்டக்கூடிய முதல் பிரிமியத்தில் ஏஜண்ட் கமிஷன் சுமார் 40 சதவிகிதம் கழித்து மீதி உள்ள 60 சதம் மட்டுமே முதலீட்டு செய்யப்படுகிறது.அதுமட்டுமல்ல அதில் நாம் எடுத்திருக்கும் இன்சூரன்ஸ் பாலிசிக்கும் ஒரு குறிப்பிட்ட தொகை கழிவு போகும்.இந்த விபரங்களை எல்லாம் ஏஜண்ட் நம்மிடம் கூறமாட்டார்.அதில் கட்டக்கூடிய இன்சூரன்சில் நம் முதலீட்டிற்கு பாதுகாப்பு அல்ல.கட்டக்கூடியவர்களுக்கு ஏதும் நேர்ந்தால் நாமினியாளர்கள் கட்டியத் தொகையை வசூலிக்க முடியும் அவ்வளவுதான்.

ஆனால் பல அப்பாவிகள் (என்னைப்போன்றவர்கள்) இதில் மாட்டிக் கொண்டு பங்கு சந்தையைப் பற்றி தவறான ஒரு எண்ணத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள்.அதனால் நாம் முதலீடு செய்யப்போகும் ஸ்கீமைப்பற்றி நிபுணர்களிடம் கேட்டு தெளிந்து பணத்தை போடுவது சிறந்தது.

பங்கு சந்தை முதலீடு என்பது ஒரே ஒரு ஸ்கீமில் மட்டுமல்ல.அது கடலைப் போன்றது.அதை முழுமையாக அறிவதென்பது கொஞ்சம் கடினமாக இருந்தாலும் தினமும் அதை பார்வையிட்டு வந்தால் அதைப்பற்றிய விபரங்களை தெரிந்துக் கொள்ள முடியும்.

யூலிப் ஸ்கீமில் முதலீடு செய்வதைவிட மீச்சுவல் பண்ட்(MUTUAL FUNDS) மிகச்சிறந்தது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.(இதிலும் சிறு முதலீட்டை செய்து பலன் சொன்னமாதிரியே கிடைத்தது.)அதில் அதிகமான கமிஷன் யாருக்கும் செல்லுவதில்லை.நம்முடைய தொகை முழுவதும் முதலீடாகும்.

இன்னும் வங்கியில் டிமேட்(DEMAT) கணக்கை திறந்துக் கொண்டு நாம் நேரடியாகவே STOCK பங்குகளை வாங்கி நம் கணக்கில் வைத்துக் கொள்ளலாம்.இதனால் லாபமும் அதிகம் காணலாம், கண்கானித்து வந்தால் நஷ்டத்தை தவிர்க்கலாம்.இதெல்லாம் செய்வதற்கு முன் பங்குசந்தையைப்பற்றிய அடிப்படையான விசயங்களை தெரிந்துக் கொண்டு இறங்குவது முதலீடு செய்வது சாலச்சிறந்தது.

பங்கு சந்தையில் பணம் பார்த்தவர்களும் உண்டு பணத்தை பறிகொடுத்தவர்களும் உண்டு அதனால் மிக கவனமாக நிதானமாக முதலீடு செய்ய வேண்டும்.