உங்கள் வருகைக்கு நன்றி...

Tuesday, October 19, 2010

தங்கம் விலை இன்னும் ஏறுமா? இறங்குமா?


இந்த கேள்வி பல மக்களிடையே தோன்றிக்கொண்டிருக்கிறது தங்கத்தின் விலை தாறுமாறாக ஏறிக்கொண்டே போகிறது இதன் போக்கு எப்படி இருக்கும் எங்கு முடியும் என்று யாருக்குமே தெரியாமல் மக்கள் திணறிக் கொண்டிருக்கிறார்கள். தங்க மார்கெட்டில் பணிப்புரிவதால் எனக்கு கிடைத்த தகவலின்படி சில செய்திகளை உங்களுடன் பகிர்ந்துக் கொள்வதில் உங்களுக்கு பிரயோஜமாக இருக்கலாம்.

சென்ற ஆண்டு தங்கத்தில் முதலீடு சம்பந்தப்பட்ட தொடர் கட்டுரை எழுதியிருந்தேன் அந்த சமயம் தங்கத்தின் போக்கை சுட்டிக்காட்டி அதில் முதலீடு செய்யலாம் என பரிந்துரையும் செய்திருந்தேன் அதில் யாரேனும் முதலீடு செய்திருந்தார்களேயானால் இன்று அவர்கள் நூறு சதவீதம் லாபத்தை ஈட்டி இருப்பார்கள்.

2008 நவம்பரில் அவுன்ஸ்(31.10 கிராம்) 715 டாலராக விலை குறைந்திருந்தது (இந்திய ரூபாய் 1 கிராம் 1015 சுத்தமான் 24 கேரட் தங்கம்)அச்சமயத்தில் துபாய் தங்கமார்க்கெட்டில் தங்ககட்டிகள் (டிடி பார் 116.64 கிராம்) 24கேரட் தங்கம் ஸ்டாக் இல்லாமல் இருந்தது. பலர் என்னைத் தொடர்புக் கொண்டு வாங்கி கேட்டார்கள் அப்படி கேட்டவர்களுக்கு வாங்கிக் கொடுத்துள்ளேன். இன்று அதை விற்காமல் வைத்திருப்பவர்கள் இன்னும் ஏறுமா? என்று கேட்கிறார்கள்.

முதலீடு என்ற பெயரில் தங்கத்தை வாங்கி வைத்திருப்பவர்கள் அவர்களுக்கு பணம் எப்பொழுது தேவைப்படுகிறதோ அதுவரையில் வைத்திருக்கலாம் தங்கத்தின் தேவை அதிகமாகவே இருக்கிறது ஆனால் தங்கசுரங்கத்தில் தேவைக்கேற்ற தங்கம் கிடைக்கவில்லை. ஆப்பிரிக்காவில் சில சுரங்கங்களை மூடிவிட்டதாக செய்திகள் சொல்கின்றன.

இன்னும் இத்தனை ஆண்டுகளாக சீனா தங்கத்தை ஆன்லைனில் வர்த்தகம் புரியாமல் வைத்திருந்தது ஆனால் சென்ற இரு மாதங்களுக்கு முன் ஆன்லைன் தங்க வர்த்தகத்தை சீனா ஆரம்பித்துள்ளது அதனால் தங்கத்தின் விலை இன்னும் கூடும் என்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கிறது.

பெரிய பணமுதலைகள் தங்களின் முதலீடுகளை அவ்வபோது டாலருக்கும் தங்கத்திற்கும் ஈரோவிற்குமாக மாற்றி மாற்றி சந்தையின் போக்கை அவர்களின் இஸ்டத்திற்கு நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது தங்கத்தின் முதலீடுதான் பாதுகாப்பானது என்று பெரிய முதலைகள் முதலீடுகள் செய்துக்கொண்டே செல்வதால் இன்னும் சில நாட்களுக்கு தங்கம் மேலே ஏறிக்கொண்டே இருக்கும்.

சென்ற பிப்ரவரி மாதத்தில் தங்கசப்ளையர் கூறினார் இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கத்தின் அவுன்ஸ் விலை 2000 டாலரைத் தொடும் என்றார். எனது நிறுவனத்தில் பலர் அவருடைய வாதத்தை ஏற்கவில்லை ஆனால் இன்று கிட்டத்தட்ட அவர் சொன்னது போலவே 1500 டாலரைத் தொட்டுவிடும் தூரத்தில் தான் இருக்கிறது.

தங்க சந்தையை பொருத்தவரையில் கிட்டதட்ட பங்குசந்தையை போலவே இயங்கிறது இந்த சந்தையும் அவ்வபோது ஏறுவதும் இறங்குவதும்மாகவே இருக்கிறது இது சர்கில்முறைதான்.

ஏழு ஆண்டுக்கு ஒருமுறை தங்கத்தின் விலை கடுமையாக சரியும் என்று ஒரு நிபுணர் கூறுகிறார்.அப்படி பார்த்தால் 2003 –ல் ஒரு அவுன்சின் விலை 323 டாலராக இருந்தது இன்று 1370 டாலராக இருக்கிறது சரிவு என்பது பெரிய அளவில் இல்லை என்றாலும் 2008 நவம்பரில் ஒரு சிறிய சரிவு ஏற்பட்டது உண்மையே.

இன்று காலை எனது நண்பர் தங்கத்தில் மூன்று ஆண்டுக்கு முதலீடு செய்யப்போவதாக என்னிடம் ஆலோசனைக் கேட்டார்.ஓ...தராளமாக முதலீடு செய்யுங்கள் என்றேன். 2007- ல் தங்கத்தின் விலை அவுன்ஸ் 650 டாலர் அன்று மூன்று ஆண்டுக்கு முதலீடு செய்தவர்களுக்கு இன்று 110 சதவீதம் லாபத்தை தங்கம் தந்திருக்கிறது.

ஒரு சிறிய சரிவு வரும் சமயத்தில் தங்கம் வாங்கக்கூடியவர்கள் உள்ளே நுழையலாம். துபாயில் ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 155 திரஹம் இன்று விற்பனை ஆகிறது இது தீபாவளிக்குள் 160 திரஹம் வரையில் செல்லலாம் என நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

தங்கத்தில் முதலீடாக செய்யக்கூடியவர்கள் எப்போதுமே ஆபரண நகைகளை வாங்கி முதலீடு செய்யவேண்டாம் அப்படி செய்தால் நஷ்டம் ஏற்படும் அதாவது நகைகள் வாங்கும்போது அதற்கு செய்கூலி சேதாரம் சேர்க்கப்படும் அதை மீண்டும் விற்கும்போது செய்கூலி சேதாரம் கழிக்கப்படும் அதனால் உங்கள் முதலீட்டில் கிடைக்ககூடிய லாபம் செய்கூலியிலும் சேதாரத்திலும் போய்விடும் ஆதலால் தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் 24 கேரட் பிஸ்கட் என்று சொல்லப்படிகின்ற டிடிபார்(டென் தோலா பார் 116.64 கிராம் ) அதை வாங்கி வைத்துக்கொள்ளலாம் தற்போது இந்திய ரூபாயில் அதன் மதிப்பு இரண்டு லட்சத்திற்கும் அதிகம் என்பதினால் இவ்வளவு முடியாதவர்கள் 4 கிராம் அல்லது 8 கிராம் தங்க நாணயங்களை வாங்கி சேமிக்கலாம்.

ஆதலால் தங்கத்தின் விலை ஏறுமா? இறங்குமா? என்று யோசிப்பதைவிட தேவை உடையவர்கள் வாங்குவதே நலன்.!

தங்கத்தைப் பற்றிய முந்தைய பதிவுகள்

1.தங்கத்தில் முதலீடு
2.தங்கத்தில் முதலீடு
3.தங்கத்தில் முதலீடு
4.தங்கத்தில் முதலீடு
5.தங்கத்தில் முதலீடு
6.தங்கத்தில் முதலீடு
7.தங்கத்தில் முதலீடு

12 comments:

Anonymous said...

all are still in confuse, anyway good information - rajakamal

சென்ஷி said...

நல்ல பதிவு இஸ்மத் அண்ணே :))

அப்துல்மாலிக் said...

இது ரொம்ப லேட், இனிமே முதலீடு செய்வது என்பது குதிர கொம்பாவுலே இருக்கு (விலை). 2008 ம் ஆண்டு நல்ல எக்ஸ்பீரியன்ஸ் நபர் 22 காரட் 164 திர்ஹாம் வரைக்கும் போய் அப்படியே நின்னுவிடும் என்று சொன்னார், அதுபோல் நடக்குமோ என்றும் தோன்றுகிற்து

நல்ல பகிர்வு

கிளியனூர் இஸ்மத் said...

ராஜாகமால் பொருளாதார விசயத்தில் இன்னும் நாம் குழம்பிக்கொண்டுதான் இருக்கிறோம் என்பதற்கு அமீரகம் சாட்சி...(பல வருடங்கள் கடந்துவிட்டதே) வருகைக்கு நன்றி

கிளியனூர் இஸ்மத் said...

நன்றி செனஷி.

கிளியனூர் இஸ்மத் said...

அப்துல்மாலிக் ....லேட் லேட்ன்னு சொல்லியே கோட்டவிட்டாச்சி....நான் பதிவு எழுதுன நேரம் இப்ப தங்கம் விலை குறையுது...அதுக்காக தினம் பதிவு கேட்ப்படாது....வருகைக்கு நன்றி.

AzeezR said...

என்னுடைய கணிப்பு, தங்கம் விலை 2012 வருடம் வரை உயர்ந்து கொண்டு ஒரு அவுன்ஸ் USD 1500ஐ தொட்டுவிட்டு அதன் பிறகு மெதுவாக கீழ் இறங்க தொடங்கி USD 1200ல் மெதுவான ஆட்டத்துடன் ஆடிக்கொண்டிருக்கும். What do you say my Friend?

கிளியனூர் இஸ்மத் said...

அஜீஸ் ரஹ்மான் நீ சொல்வதுபோல நடக்கலாம் எல்லாமே ஒரு அனுமானம்தான்...நான் தங்க சந்தையில் நுழையும்போது ஒரு அவுன்சின் விலை 200டாலர் சில தினங்கள் இதற்கும் குறைவாகவும் இறங்கியது இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது மேலே ஏறுமுகமாகவே சென்றுள்ளதே தவிர குறைய வாய்ப்பு மிக அரிதாக தெரிகிறது......நீ சொல்வதைபோல சில ஆண்டுகளுக்குப் பின் இறங்கி அப்படியே நின்றால் நல்லதே....பொறுத்திருந்து பார்ப்போம்....வருகைக்கு நன்றி.

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

அண்ணா! சரியான சமயத்தில் சரியான பதிவு தான். தங்கம் விலை உயர்வைப் பார்த்தால் மயக்கம் வருகிறது. இந்தியாவை விட துபாயில் தங்கம் விலை குறைவு. தரம் அதிகம் என்கிறார்களே உண்மையா?

கிளியனூர் இஸ்மத் said...

தங்கம் விலை இந்தியாவிற்கும் துபாய்க்கும் சிறிய வித்தியாசம் இருக்கிறது ஆனால் தரத்தில் எப்பவும் நம்மநாடு கூவம் நதியைப்போல...(இதை எழுத வெட்கப்படுகிறேன்)

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

Azeez Ahmed M said...

பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்
http://azeezahmed.wordpress.com/

கிளியனூர் இஸ்மத் said...

Azeez Ahmed M
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....