உங்கள் வருகைக்கு நன்றி...

Thursday, April 15, 2010

சந்திச்சாச்சு....அமீரகப்பதிவர்கள்


நீண்ட இடைவெளிக்கு பிறகு அமீரகப்பதிவர்கள் சந்திக்கலாம் என ஒரு மனதாக இமெயிலில் முடிவெடுத்தாலும் அதில் உள்குத்து, வெளிகுத்து என்று பல குத்துக்கள் இருந்தது.

அதென்ன இத்தனை குத்துன்னு கேட்கிறீங்களா விசயம் இருக்கு...

கராமா பூங்காவில் இரவு 8.00 மணிக்கு சந்திக்க நாள், நேரம் குறித்தாச்சு. நான் அங்கே செல்லும் போது 8.30 மணி.(நாம எப்போங்க சரியான நேரத்துக்கு போயிருக்கோம்)


பெரிய கூட்டம் இருக்கும்னு கற்பனையில போனே... ஆமாங்க சென்றமுறை குறும்படம் வெளியீட்டோம் இல்லீங்களா... அதை பார்த்துட்டு பலபேர் வலைப்பூ ஆரம்பிச்சதா அரச புரசல கேள்விப்பட்டேன்.அதனால் என்னுடைய எதிர்பார்ப்பு கொஞ்சம் ஏத்தமா இருந்தது.ஆனா அங்க பத்து பன்னிரெண்டு பேர்தான் இருந்தாங்க...

கீழைராஸா பேசிக்கிட்டு இருந்தாரு அவரைச்சுற்றி வட்டமா கொலகொலைக்கா மந்திரிக்கா நரியநரிய சுத்திவா மாதிரி உட்காந்திருந்தாங்க.

ஏற்கனவே பதிவர்களுடன் அறிமுகம் ஆகிவிட்டதினால குசலம் கொஞ்சம் ஜாஸ்தியா இருந்துச்சு.

சென்ஷி பக்கதுல உட்காரச்சொன்னாரு அவரு ஆசைக்கி அங்கேயே உட்காந்தேன்.

அண்ணாச்சிய காணும்மேன்னு கீழைராஸாவிடம் கேட்க அரைமணிநேரத்துல வந்துடுவாருன்னு கூறினார்.சொன்னா மாதிரியே 20 நிமிஷத்துல அண்ணாச்சியும் பெண்பதிவரான ஜெஸிலாவும் வந்தார்கள்.
பதிவர்கள் சங்கம் நாம எப்போது ஆரம்பிப்பது என்று சென்ஷி கேட்க அண்ணாச்சி முறைக்க இப்பவும் இது சங்கம்தான்டோய் தனியா என்னவேண்டிக்கிடக்கு என்றதும்
கீழைராஸா அமீரகத்துல இருக்குற எல்லா சங்கத்துலயேயும் தலைய கொடுத்துட்டு வாலைத் தேடிக்கிட்டிருக்கோம் இதுக்கு மேலயும் சங்கம் தேவையா?ன்னு முற்று புள்ளி வைத்தார்.

வந்தவர்கள்
1.அண்ணாச்சி
2.ஆஸாத்
3.கீழைராஸா
4.செந்தில்வேலன்
5.சுந்தர்
6.சென்ஷி
7.அகமது சுபைர்
8.முத்துக்குமரன்
9.கலையரசன்
10.நாஞ்சில் பிரதாப்
11.முதுவை முகில்
12.ரியாஸ்
13.சபிர்
14.நான்

நிறையப்பேரைக் காணுமேன்னு சுபைர்ரிடம் கேட்டேன்
நல்லா சிரித்துக் கொண்டு பேசியவர் சட்டென முகத்தை மாற்றிக் கொண்டார் காரணம் அப்போது விளங்கவில்லை.ஆனாலும் இந்த சந்திப்புல சுபைர் ரொம்ப சந்தோசமா இருந்தாரு.

அந்த சந்தோசத்துக்கு காரணம் (கடாவை பழிகொடுக்கபோறாங்க) அவருக்கு அடுத்தமாசம் கல்யாணம்.


சில பதிவர்கள் தாயகம் செல்வதனாலயும், பல தமிழ் அமைப்புகளில் விடுமுறை நாட்களில் விழாக்கள் நடத்துவதனாலயும், பதிவர் சந்திப்பு விடுமுறைநாளுக்கு விடுமுறை கொடுத்துவிட்டு இப்படி திடுதிப்புன்னு ஏற்பாடு செய்திருக்காங்கன்னு நெனச்சிங்கன்னா தப்பு தப்பு...
இது விருந்துக்காகவே கூடிய சந்திப்புன்னு நான் இங்க எழுதல...அதனாலதான் உள்குத்து வெளிகுத்துன்னு சொன்னேன்.


ஆமாங்க... சுபைரும் செந்தில்வேலனும் வந்தவர்களுக்கு மட்டும் ட்ரீட்டு வச்சாங்க.அதனால தான் என்னப் பார்த்து முறைச்சாரு.எல்லா பதிவரும் வந்து கலந்திருந்தா அனேகமா சுபைர் வந்திருக்க மாட்டாருன்னு குசும்பன் சொல்வது காதில் விழுகிறது.

சுபைரு ட்ரீட்டு கொடுத்தது தான் பழியாவதற்கு

செந்தில்வேலன் கொடுத்தது தான் பழியாகி பழிவாங்க வந்தவருக்கு (குழந்தை பிறந்ததற்காக) கொடுத்தாரு...


அண்ணாச்சி நல்ல உணவகமாக பார்த்து அழைச்சுட்டுப் போவதற்கு முன்னாடியே ஜெஸிலா கிளம்பிட்டாங்க சுபைருக்கு ரொம்ப சந்தோசம் ஒரு தல குறைஞ்சுடுச்சு.

கொஞ்ச தூரம் நடப்பாட்டியே அண்ணாச்சி அழைச்சுக்கிட்டு போனதின் இரகசியம் நல்லா சாப்பிடுவோம்னு மட்டுமல்ல தரமான உணவகத்தை தேர்தெடுப்பதற்கு என்று சாப்பிட்ட போது விளங்கிக்கிட்டோம்.
சுpக்கன் மட்டன் பிரியாணி சிக்கன் கபாப் சிக்கன்65 சிக்கன் டிக்கா இப்படி சிக்கு சிக்குன்னு பல ஐட்டங்கள்
(பதிவர் சந்திப்புக்கு வராத அமீரகப் பதிவர்களே வயிற்றெரிச்சல் படவேண்டாம். சுபைரு கல்யாண முடிச்சதும் இன்னொரு விருந்தும் கொடுப்பாரு)

எல்லாம் முடிஞ்சு வெளியில வந்தோம் ... ஒரு நிமிசம் என்று கூறி சுபைர் பாத்ரூம் போனாரு போய் ரொம்ப நேரமாச்சு ஆளைக் காணும்.

சுபைரிடம் ஏம்பா இவ்வளவு நேரம் என்று கேட்க
உடனே முகில் பாத்ரூமில் அழுதுவிட்டு வராரு...என்று கூறி புன்னகையுடன் எல்லோரும் விடைபெறுவதற்கு முன்

உதவிக்கரம் நீட்டியவருக்கு மருத்துவ உதவிக்காக அண்ணாச்சி பண்ட் கலெக்ட் செய்தார்.பலரும் பங்கெடுத்தோம்.

கடைசியா ஒருவார்த்தை கீழைராஸா சொன்னார்

இந்த நிகழ்ச்சிய யாரும் பதிவிடவேண்டாம்ன்னார்.அவரு சொன்னதை எல்லாரிடமும் சொல்லனுங்குறதுனால தான் இந்த பதிவு.


மொத்தத்துல கூட்டம் குறைவா இருந்ததுனால மொக்கையும் குறைவா இருந்துச்சு...வராத பதிவர்களை நினைத்து சுபைருக்கு சந்தோசம் எங்களுக்கு வருத்தம்.

Wednesday, April 14, 2010

பூஜியமாகும் சூனியம்


சில தினங்களுக்கு முன் எனது ஆன்மீக ஆசிரியரின் சொற்பொழிவைக் கேட்க சென்றிருந்தேன்.
ஆண்டுக்கு ஒருமுறை பத்து அல்லது பதினைந்து தினங்களுக்கு துபாயில் சொற்பொழிவாற்றுவார்கள்.

பலதரபட்ட கேள்விகள் பலரும் கேட்பார்கள்.எல்லாவற்றிற்கும் பதில் கிடைக்கும்.ஆனால் கேட்கப்படும் கேள்வியை விளங்கி கேட்கப்படும்போது அதற்கான பதிலும் நம் மனதில் பதியும் இருள் விலகி அறிவுத் தெளியும்.
எல்லோரும் கேட்கிறார்கள் என்று நாமும் எதையாவது கேட்டால் பதில் கிடைக்கும் ஆனால் அந்த பதில் நம் மனதில் தரிபடாது.

ஏத்தனையோ நூற்களை நாம் வாசிக்கின்றோம் எழுதப்பட்டிருக்கும் ஒவ்வொரு நூலும் ஒரு அறிவுதான்.ஆனால் அந்த நூற்கள் அறிவின் பூரணத்தை விளக்குவதில்லை.ஏட்டுக்கல்வியினால் எல்லாவற்றையும் விளக்க முடியாது.
விளக்கம் கொடுப்பதற்கு ஒரு ஆசான் தேவை.விளக்கமில்லாத படிப்பு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை.

ஞானிகளிடம் பூரணத்தை கேட்டு தெளியலாம்.கேட்கப்படும் நம்மிடம் தேடல் இருக்கவேண்டும்.இல்லையெனில் எந்த பதிலும் நம்மை திருப்தி படுத்தாது.
எல்லாவற்றிகும் ஒரு வழி இருக்கிறது.அந்த வழியில் தான் எதையும் பெறவேண்டும்.வழிமாறினால் வாழ்க்கையும் மாறிவிடும் சிந்தனையும் மாறிவிடும்.

இது அவசரக்காலம் எதையும் அவசரமாக செய்யப் பழகுகிறோம்.இந்த அவசரம் மனிதனை போட்டி மனப்பான்மையை உண்டாக்கி பொறாமைகளை வளர்த்து வருகிறது.

இந்த பொறாமை ஒரு மனிதனை இன்னொரு மனிதன் அழிப்பதற்கும் அவனைக் கெடுப்பதற்கும் பல யுக்திகளை கையாளுகிறான்.
அப்படிப்பட்ட யுக்திகளில் ஒன்று தான் செய்வினை செய்வதும் சூனியம் வைப்பதும்.இதில் பெரும்பாலும் பெண்கள் கவரப்படுகிறார்கள் நம்பிக்கை கொள்கிறார்கள்.

உண்மையில் ஒரு மனிதனுக்கு சூனியமோ செய்வினையோ செய்யமுடியுமா? அப்படி செய்வதினால் அதில் மனிதன் பாதிக்கப்படுகிறானா?

இந்த கேள்விகள் என் ஆன்மீக ஆசிரியரிடம் கேட்கப்பட்டது.

ஒரு கதை மூலம் விளக்கம் அளித்தார்கள்.

ஒரு சாலை ஓரத்தில் இருவர் எதிர் எதிரே ஒரேவிதமான கடை வைத்திருந்தார்கள்.ஒருவருக்கு நல்லவியாபாரம் அவர் நியாயமான விலையில் விற்பனை செய்துக் கொண்டிருந்தார்.மற்றவருக்கோ அந்தளவு வியாபாரமில்லை.எதிர் கடைக்காரனைக் கண்டு அவர் பொறாமைக் கொண்டார்.

ஒரு நாள் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது.உன்னை என்ன செய்கிறேன் பார் உனக்கு சூனியம் வைக்கிறேன் என்று வியாபாரம் இல்லதவர் கூற உன்னால் முடிந்ததை செய் என்றார் நியாயக் கடைக்காரர்.

மறுதினம் காலையில் கடைத் திறக்க வந்தவருக்கு அதிர்ச்சி.அவர் கடை வாசலில் கருப்பாக மணி உதிர்ந்து கிடைப்பதைப் போல கடுகு கிடைப்பதைக் கண்டதும் பொறாமை கடைக்காரர் ஏதோ சூனியம் செய்வினை வைத்துவிட்டார் என்று இவரே ஒரு பிரம்மையை ஏற்படுத்திக் கொண்டு கவலையடைந்தார்.அந்த கவலை வியாபார சிந்தனையிலிருந்து அவரை திசைத்திருப்பியது.அவருக்கு வியாபாரம் மந்தமானது அவர் உடல் நிலையும் மோசமானது.

இவரின் நண்பர் இவரைக்காண வந்தபோது தனக்கும் தனது எதிரி கடைக்காரனுக்கும் நடந்த பிரச்சனையை கூறி அவர்தான் எனக்கு செய்வினை செய்துவிட்டார்.என்னுடைய வியாபாரமும் உடல் நிலையும் பாதிக்கப்பட்டிருக்கிறது. என்று அவர் கூறியதும் அந்த நண்பர் கூறினார்
உன்னுடைய எதிரையை பார்த்துவிட்டுதான் உன்னைக்காண வந்துள்ளேன்.
அவர் உனக்கு செய்வினையோ சூனியமோ வைக்கவில்லை. ஆனால் ஒரு ஐம்பது கிராம் கடுகை மட்டும் உன் கடை வாசலில் கொட்டிஇருக்கிறார் அதைக்கண்ட உனக்கு பயம் உண்டாகி நீயே உனக்கு சூனியத்தை செய்வினையை வைத்துக் கொண்டுள்ளாய் என்றார்.
இப்படித்தான் பலர் தங்களுக்கு தாங்களே சூனியம் வைத்துக் கொள்கிறார்கள்.என்ற கதையை ஆன்மீக ஆசிரியர் கூறினார்கள்.

பல பெண்களிடம் சூனியத்தின் நம்பிக்கை நிறைந்திருக்கிறது.எளிதாக ஏமாற்றப்படுகிறார்கள்.சூனியம் என்றாலே ஒன்றும் இல்லை என்பதுதானே பொருள்.ஒன்றுமில்லத ஒன்றினால் என்ன செய்ய முடியும். ஆனால் நம்பிக்கை எதையும் செய்யும்.
இறைவன் ஆதியில் சூனியமாக இருந்ததை அமாவாக இருந்தேன் என்கிறான்.ஒன்றுமில்லா ஒன்றுதான் இந்த பிரபஞ்சமாக இருக்கிறது.

செய் என்றால் செயல்பாடு
வினை என்றாலும் செயல்பாடுதான்; செய்வினை என்ற சொற்சொடருக்கு செயல் என்பதுதான் பொருளாக இருக்கிறது.

செய்வினை சூனியம் என்பது மனிதர்களை முட்டாளாக்குவதற்கும் பொருளை அபகரிப்பதற்கும் ஏற்படுத்தப்பட்ட ஏமாற்று கண்கட்டு வித்தை.
சூனியம் மூலம் ஒருவரை பழிவாங்க முடியுமென்றால் நம்நாட்டு அரசியல்வாதிகளை எண்ணிப்பாருங்கள்.
சூனியம் வைத்தே ஒட்டையும் ஆட்சியையும் பிடித்துவிடுவார்கள் எதிர்கட்சி என்பதே இல்லாமலாகிவிடும்.எதிர்ப்பனுக்கெல்லாம் சூனியம்தான்.
இது சாத்தியமா?

சில இல்லங்களில் மாமியார் மருமகள் பிரச்சனை கூட சூனியம் என்ற பாட்டையில்தான் நடைப்பெறுகிறது.

இந்த நம்பிக்கையை பேணக்கூடியவர்களுக்கு சூனியம் எல்லாமும் செய்யும் இதை ஏற்காதவர்களுக்கு சூனியம் தனக்கே சூனியமாக்கிக் கொள்ளும்.

நம்பிக்கை என்பது மனிதன் தெளிவுவடைவதற்குதானே தவிர மூடநம்பிக்கையை வளர்ப்பதற்கல்ல.!