உங்கள் வருகைக்கு நன்றி...

Sunday, March 18, 2012

“கின்னஸ் புத்தகத்திற்கு கிடைத்த கின்னஸ் ரிக்காட்”

அகிலத்தின் அருட்கொடை அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்கள் செய்த சாதனையைப் போல் யாரும் செய்தது இல்லை என்பது இந்த உலகத்தின் பல நாடுகளில் வாழும் பல அறிஞர்களின் கருத்தாகும்.
மனித குலத்திற்கு விடிவெள்ளியாக மனித நேயத்திற்கு மாணிக்கமாகத் திகழ்ந்த கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு புதையலாகவே இருக்கிறார்கள். அவர்களைப்பற்றி அறிந்துக் கொள்ளவதற்கு செய்யப்படும் ஆய்வுகள் அதிகமதிகம். அந்த ஆய்வுகளில் கிடைத்த முடிவுகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருந்தது இல்லை என்பதே உண்மை.
தினம் பல்லாயிரம் கோடி மக்களால் அதிகமாக உச்சரிக்கப்படும் ஒரே பெயர் “முஹம்மத்”(ஸல்) அவர்கள். அந்தளவு மக்களின் அன்பையும் மக்களின் ஆர்வத்தையும் பெற்றிருக்கிறார்கள்.
அவர்களின் பெயரில் செய்யப்படும் ஒவ்வொரு வெளியீடும் அந்த வெளியீட்டாளருக்கே அல்லாஹ் கண்ணியத்தையும் கௌரவத்தையும் தந்துக் கொண்டிருக்கிறான்.

அந்த வகையிலே ஐக்கிய அரபு அமீரகம் பதினோரு மில்லியன் திரஹம் சிலவில் (இந்திய ரூபாய் மதிப்பு பதிநான்கு கோடியே என்பத்தைந்து லட்சம்) நானூற்று இருபது பக்கங்களில் ஆயிரம் கிலோ கிராம் எடையில் ஐந்து மீட்டர் நீலம் நான்கு மீட்டர் அகலம் கொண்ட இந்த உலகின் மிகப்பெரிய நூல் ஒன்றை அதிகமான செலவில் தயாரித்துள்ளது.
அந்த நூல் அகிலத்தின் அருட்கொடை அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கையைப் பற்றி கூறும் நூலாக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த நூலை ஐக்கிய அரபு அமீரகத்தின் நிதியமைச்சர் ஷேக்ஹம்தான் பின் அல்மக்தூம் அவர்கள் திறந்து வைத்தார் இந்நிகழ்ச்சிக்கு உயர் அரசு அலுவலர்களும் மன்னர் குடும்பத்தினர்களும் மற்றும் பன்னாட்டு தொழிலதிபர்களும் கலந்துக் கொண்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் நிதியமைச்சர் ஷேக்ஹம்தான் பின் அல்மக்தூம் அவர்கள் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் முன்மாதிரியான வாழ்வைப் சமூகம் அறிந்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் ஐம்பதாயிரம் சாதாரன பிரதிகளை தனது சொந்த செலவில் வெளியிடுவதற்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்நூலை வெளியீட்டாளர்களின் கருத்தானது “இஸ்லாத்தின் இறுதி நபியாக முஹம்மத்(ஸல்) அவர்கள் காணப்படுவதுடன்,சர்வதேச மற்றும் மனிதாபிமான ரீதியில் மிகவும் செல்வாக்குவாக்குச் செலுத்தியவர்களாகவும் நபி(ஸல்) அவர்கள் விளங்குகின்றார். நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையை முன்னிலைப் படுத்துவதன் மூலம் இஸ்லாத்தையும்,முஸ்லிம்களையும் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இச்செயல்திட்டத்தின் நோக்கமாகும் என இப்புத்தகத்தின் வெளியீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கின்னஸ் புத்தகம் இந்த உலகத்தில் நடந்த எத்தனையோ விசயங்களை சாதனைகளாக பட்டியலிட்டிருக்கிறது. ஆனால் முதல் முறையாக கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை கின்னஸ் தனது புத்தகத்தில் இடம் பெறச்செய்து தனது புத்தகத்திற்கு கின்னஸ் ரிக்காட்டை தனக்கே ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்று கூறுவதே சாலச் சிறந்தது.

இந்நூலை வெளியீட்டு பெருமானார் (ஸல்) அவர்களின் மீது கொண்டிருக்கும் அன்பை வெளிப்படுத்தி இவ்வுலகிற்கு இஸ்லாமிய நபிநேச விழிப்புணர்வை ஏற்படுத்திய ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசு மற்றும் நூல் குழுவினர்களுக்கு எனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்.