உங்கள் வருகைக்கு நன்றி...

Monday, July 27, 2009

மனம் கவர்ந்த மலேசியா...6

சந்தோசா ஐலாண்டிற்கு உள்ளே செல்வதற்கு இரண்டு வழிகள்…
1. கேபிள் கார் வழியாக செல்லலாம்
2. பிரிஜ் (பாலம்) வழியாகவும் செல்லலாம்
புதிதாக வரக்கூடிய சுற்றுலா பயணிகள் கேபிள் கார் வழியாக போவதற்கு மிகவும் ஆர்வம் கொள்வார்கள்… கேபிள் காரில் மட்டும் செல்வதற்கு ஒரு நபருக்கு 19 சிங்கை டாலர்… ( துபாய் கிரிக் பார்க்கில் உள்ள கேபிள் காருக்கு ஒரு நபருக்கு 25 திரஹம் ) குழந்தைகளுக்கு 15 டாலர்…குழந்தைகள் இந்த கேபிள் காரில் போனாங்கன்னா…நல்லா ஜாலியா சந்தோசப்படுவாங்க…
பிரிஜ் வழியா உள்ள வருவதற்கு சந்தோசா நிறுவனம் தனியாக இலவசமாக பஸ் வசதி செய்திருக்கிறார்கள்…அதுமட்டுமல்ல இரயில் வசதியும் உண்டு…
தங்களின் சொந்த வாகனங்களில் வருபவர்களுக்கு 2 டாலர் நூழைவுக் கட்டணம் செலுத்தவேண்டும்…
அதை சுற்றிப் பார்ப்பதற்கு ஒரு நாள் முழுசா வேணும்…ஞாயிற்றுகிழமைப் போனால்தான் ஒரளவு கூட்டத்தைப்பார்க்கலாம்…

அங்கேயே பீச்சும் இருக்கிறது…குளிக்கின்ற மாதிரி ஏற்பாட்டுடன் சென்றால் இன்னும் ஜாலியா இருக்கும் ( குளிக்கின்றவர்களுக்கு மட்டும்தாங்க பயப்புடவேண்டாம் )…

எங்க உறவினர்கள் ஒருபட்டாளம் காரில் வந்தங்க…நாங்க கேபில் கார்லபோனோம்…இந்த இடத்துல மலேசியா லங்காவி கேபில் காரை கம்பேர் பண்ணும்போது இது ஒன்றும் பெரிசா தெரியலை…மலேசியா போகாமல் சிங்கையை மட்டும் சுற்றி பார்க்க வந்தவங்களுக்கு இந்த கேபில்kaர் ஒகேங்க…
நாங்க போனநேரம் வானிலை நல்ல சூடுங்க…சூடா இருக்குன்னுதான் பீச்சுல குளிச்சேன்…இல்லென்னா…வேணாங்க ரகசியத்தையெல்லாம் சொல்லப்படாது

குளிச்சுட்டு சாப்பிட ரெடியானோம்…நல்லபசி…இவ்வளவு கூட்டத்துக்கும் ஹோட்டல்ல வாங்கினா கொண்டுவந்த காசு காலியாகிடும்னு…சூப்பர் பிரியாணி ரெடி பண்ணிருந்தாங்க…பெரிய பண்டாரி ஆக்கினது…அவர் ரொம்பபேமஸானஆளுன்னாங்க…பேருக்கூடஏதோ சொன்னாங்க…ம்…ஞாபகம் வந்திடுச்சிஇஸ்மத்...ன்னாங்க…என்ன அப்படிபாக்குறீங்க…சாச்சாத்…நானேதான்…
(நம்ம கீழைராஸா சாப்பிட்டுட்டு நாளுநாளா படுக்கையை விட்டு எழுந்திருக்கலேண்ணா பார்த்துக்கோங்க…அவ்வளவு மோசமான்னு கேக்கிறீங்களா… சாப்பிட்டா நான் சமைச்ச பிரியாணிதான் சாப்பிடுவேன் இல்லைன்னா எனக்கு சாப்பாடே வேணான்னுட்டார்…)
சுhப்பாட்டு வேலை முடிஞ்சுது…மீண்டும் சுற்ற ஆரம்பித்தோம்…அங்கு நிறைய்ய நிகழ்ச்சிகள் செய்யிறாங்க…அதெல்லாம் மாலை நேரத்துல…
கிளிசைக்கிள் ஒட்டுகிறது…பிஸ் அக்குவாரியம்…இது துபாயில் அட்லாண்டிக் ஹோட்டல்ல உள்ள அக்குவாரியத்தை விட சின்னதுதான் ஆனால் துபாய்க்கு முன்னால் இவங்கதான் முதலில் அதை பிரகடணம் படுத்திருக்காங்க…


சந்தோசாவுல பெரிய சிங்கம் இருக்கு…அதன் உள்ளே போவதற்கு 18 டாலர் வாங்குறாங்க…இது கொஞ்சம் கொல்லையடிக்கிற மாதிரி தெரியுதுங்க…லிப்டில் ஏறிபார்ப்பதற்கு இவ்வளவு காசு கொடுக்க கொஞ்சம் கஸ்டமாதான் இருந்துச்சு…

இதெல்லாம் பார்த்துக் கொண்டு இருக்கின்றப்ப…எனது மைத்துனர் போன்போட்டு மலேசியாவுக்கு உடனே கிளம்ப உத்தரவு போட்டாரு…
நாளைகிளம்பலாம்னு யோசனை பண்ணினேன்…

உறவுக்காரங்ககிட்டே கேட்டேன் பஸ்ல போகலாமா…அல்லது இரயிலில் போகலாமா…?ன்னு…
நீங்க பினாங்கு போறதுனால…பஸ்ல போங்க…இரயிலில் போனால் காலையில 7.15க்கு புறப்பட்டு இரவு 9.45க்கு போய் சேரும்…அவ்ளோ பாஸ்ட்…அதனால பஸ்ல போவது சிறந்தது..ன்னு சான்றிதழ் கொடுத்தாங்க…


டிக்கேட் எப்போ எங்கே எடுப்பதுன்னு கேட்டேன்…சந்தோசா முடிச்சுட்டு நேரா பஸ்புக்கிங் செய்துடலாம்ன்னாங்க ( ஆள் காலியான சரிதான்ன்னு…ச்சீச்சீ அப்படில்லாம் இல்ல…அவங்க ரொம்ம்ம்ப நல்லவங்க)

சந்தோசா சுற்றின களைப்புடன் நேரா… சாப்பாட்டுகடைக்கு அழைச்சுகிட்டு போனாங்க…(இது தான் கடைசி சாப்பாடு…இதோட இவனை ஒழிச்சடனும்ன்னு) மீங்கோரி நியூடல்ஸ், நாசிகுவைத்தி ,நாசிலாமா…eப்படி பல பெயர்களில்…எல்லாமே கருவாட்டு வாடையுடன்…விடுவேனா…ஒருகட்டு கட்டினே…(பாவி பாவி…போறநேரத்திலேயும் இப்படி திங்கிறானேன்னு நினைச்சுறுப்பாங்க தானே…அவங்க நனெச்சாஎன்ன…வயத்துக்கு வஞ்சனை செய்யக்கூடாதில்ல)
சாப்பாட்டை முடிச்சுட்டு…பஸ்புக்கிங்…

சிங்கையிலிருந்து கோலலம்பூர் போவதற்கு நிறைய்ய பஸ் இருக்கு ஆனால் பினாங்கு போவதற்கு காலையில் 7.30 மணிக்கும் இரவு 10 மணிக்கும் மட்டும் தான் இருக்கு…
காலைபஸ்சுல புக் பண்ணினோம்…ஒரு நபருக்கு 55 டாலர்…இதையே ஜொஹ_ர்பாரில் எடுத்தால் மலேசியா ரிங்கிட் 55 தான்…சிங்கை டாலர் இரண்டரைமடங்கு மலேசியாவை விட அதிகம்.
பிள்ளை குட்டிகளுடன்…(குட்டின்னதும் வேறமாதிரி நினைச்சுட வேண்டாம்)
போறதுனால சிங்கையிலிருந்தே கிளம்பிடலாம் ஜொஹ_ர் வேண்டாம்ன்னு டிக்கேட் எடுத்திட்டேன்…
டிக்கேட் எடுக்கும் போது இரவு மணி 10…காலையில் 7.30க்கு பஸ்சுல இருக்கனும்…இல்லேன்னா…

220 டாலர் டா..டா…காண்பிச்சுட்டு போயிடும்…அதனால நான் தூங்க போறேன்…மிச்சத்தை நாளைக்கு பேசிக்கலாம்…!

1 comment:

மலர்வனம் said...

இனிய தோழருக்கு…
பிரபலபதிவர் கீழைராஜா மட்டும்தான் உங்க பிரியாணிக்கு ரசிகர் கிடையாது.

போனவாரம் ஜீமைரா பார்க்கில் நாம் சந்தித்தபோது…

உங்க சுவையான பிரியாணியை அதிகம் சாப்பிட்டு சாதனை படைத்தவன் நான்தான்னு இங்கே தன்னடக்கத்துடன் சொல்ல விரும்புகிறேன்.

அந்த பிரியாணியில் நீங்க நெய்யை மட்டும் கலக்கவில்லை. அன்பையும் கலந்து செய்ததால் சுவையோ சுவை. பிpரியாணின்னா அது இஸ்மத்பாய் செய்த பிரியாணிதான்… ரொம்ப நன்னா இருந்துச்சு!

சிநேகத்துடன்…

சையது முஸ்தபா

துபாய் இஸ்மத்பாய் பிரியாணி சங்கத்தலைவர்.

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....