உங்கள் வருகைக்கு நன்றி...

Thursday, July 23, 2009

மனம் கவர்ந்த மலேசியா...4

சனிக்கிழமை விடிந்து விட்டது…இன்று மாலையில் தானே திருமணம்…காலையில் எங்கே போகலம்னு…யோசனை செய்துக்கிட்டு இருக்கின்றப்ப…
“நாங்க ஷாப்பிங் போறோம்…. நீங்களும் வறீகளா சாயங்காலம் போற கல்யாணத்துக்காக ரெஸ்ட் எடுக்கப் போறீங்களா”…ன்னு என்மனைவியார் கேட்டாங்க…
“ரெஸ்டா…அதுக்கா இவ்வளவு சிலவு பண்ணி வந்தோம்…நானும் வாரேன்…ன்னு கிளம்பினேன்”…அந்த சமயத்துல என்மச்சான் (தாய் மாமன் மகன்) டெலிபோன் செய்தான்…
“என்ன மச்சான்…சொல்லு” ன்னே…
“இன்னைக்கு ராத்திரி சிங்கப்பூர் ஏகத்துவ மெஞ்ஞானசபையிலேந்து உன்னை சீப்கெஸ்டா அழைச்சிருக்காங்க…அதனால எங்கயும் போகாத 5 மணிக்கெல்லாம் உன்னை அழைக்க வருவேன”…னு சொன்னா…எனக்கு பகீர்ன்னது…
உடனே நான்… “மச்சான் கல்யாண நிகழ்ச்சி இருக்கேடா”…ன்னு சொன்னேன்…
“கல்யாணத்துக்கு தானே…நம்ப பொம்பளைங்கள போக சொல்லிட்டு நாம சபை நிகழ்ச்சிக்கு போய்டுவோம்”;…ன்னா…
“எது…பொம்பளைங்களை மட்டும் அனுப்புறதா…? நல்லா கதைய கெடுத்த…
நான் போகாட்டி நல்லா இருக்கும்மா… ( என்னமோ…கல்யாணமே நின்னுபோறா மாதிரி…) ச்சேச்சே..அங்க போய்ட்டு பின்னே எங்கே வேண்டுமானாலும் கூப்பிடு வர்றேன்…ன்னே”…( கண்ணுல பிரியாணி தட்டை )
“இப்ப என்ன தான் செய்ய”…ன்னு கேட்டான்…
“நிகழ்ச்சிய எட்டு மணிக்கு வைக்கச் சொல்லு…( என்னம்மோ…பெரிய ஸ்டாருன்னு நெனப்பு ) கல்யாணத்துல தலைய காண்பிச்சுட்டு அங்கிருந்து கிளம்பிடுவோம்”…ன்னு சொன்னதும் ஒகே சொன்னான்…( அப்பா…இன்னைக்கு பிரியாணி இருக்கு…)

மார்கெட்டுக்கு புறப்பட்டோம்…தேகா…இது நமது தமிழர்களின் வியாபார சந்தை…புடவை எடுக்கலாம்னு புடவை கடைக்கு போனோம்… கலெக்ஷன் நிறைய்ய இருந்தது… துணியும் சாப்ட்டாக இருந்தது… துபாயை கம்பேர் பண்ணாம என்னால இருக்க முடியல… எதைப்பார்தாலும் துபாயில என்ன விலை இங்கு என்ன விலை இப்படி பார்த்து பார்த்து தான் ஒவ்வொன்றையும் வாங்கினோம்…
புடவைகளை பொருத்த மட்டில் துபாயை விட சிங்கப்பூரில் விலைக்குறைவு..
துணியும் தரமாக இருந்தது…
என் மனைவிக்காக வேண்டிய சாமான்களை வாங்கி முடிச்சாசு …கிளம்பலாமான்னு கேட்டாங்க…
“ம்… கிளம்பலாம்… ஒரு சம்பர்தாயத்துக்காவது… ஏங்க ஒரு சட்டை வாங்கிக்க ங்களேன்னு ஒரு வார்த்தை சொன்னியா…நீ… பொம்பளைங்களே இப்படித்தானா…?ன்னு தைரியமா கேட்டதும்…கொரா…முரான்னு ஒரு சட்டை எடுத்து கொடுத்தாங்க…ஹி…ஹி…தேங்ஸ்ங்க…ன்னு ஒரு கூல தேங்ஸ் சொல்லிட்டு கிளம்பினோம்… ( நல்ல வேளை என் மனைவி பக்கத்துல இல்ல… ஊருக்கு போயிருக்காங்க… அதனால தைரியமா எழுதலாம்…என்ன அப்படி பாக்குறீங்க நா…நான் பயப்புட மாட்டேன்…ம்…தெரியுமுல்ல)

மாலை 5 மணிக்கு கல்யாணத்துக்கு போவதற்கு தயாரானோம்

மாலை 5 மணிக்கு கல்யாணத்துக்கு போவதற்கு தயாரானோம்…

ஒரு பெரிய ஹால் புக் பண்ணிருந்தாங்க…நாங்க போய் சேருவதற்கு 6 மணி ஆச்சு…ஹாலுக்குள்ள போனதும் புதுமண தம்பதிகளை வாழ்த்தி சிலவரிகள் எழுதனும்னு சொன்னாங்க…அங்கு பழக்கமாம்…வருகிறவர்கள் தங்களுடைய்ய வாழ்த்துக்களை அங்கு வைக்கப்பட்டிருந்த நோட்புத்தகத்தில் எழுதுவார்களாம்…
என்னையும் எழுதச்சொன்ன போது அந்த புத்தகத்தை திருப்பி பார்த்தேன் அனைவரும் ஆங்கில வாசகங்களையே வாழ்த்துச் செய்திகளாய் எழுதியிருந்தங்க…நானும் வாழ்த்தி எழுதினேன்… ஹி….ஹி…தமிழ்ல எழுதினா…எங்கே…கிராமத்தான்னு நினைப்பாங்களோன்னு ஆங்கிலத்துல அப்படியே காப்பி அடிச்சு எழுதிட்டேன்…
என்னை வரவேற்க…பெரிய பட்டாளம் எல்லோரும் என் சொந்தங்கள்…( துபாயிலேந்து வந்திருக்கான்… மொய் பெரிசா வப்பான்னு நினைச்சுரப்பாங்க) நல்லா கவனிச்சாங்க…
வந்து சொந்தங்களை விசாரிப்பதற்கு முன்னாடியே 6.30 மணிக்கெல்லாம் சாப்பாட்டை வச்சிட்டாங்க…உட்காருப்பா… சாப்பிடுப்பான்னு என் மாமா உட்கார வச்சிட்டாரு…( இல்லன்னா… சாப்பிட்ருக்காத மாதிரி)
அந்த சமயத்துல மைக்கில் அலொண்ஸ் பண்ணாங்க…எங்கள் பாசத்திற்குரிய துபாயிலேந்து வந்திருக்கும் மச்சான் இஸ்மத்தை வெறித்தனமா வரவேற்கிறோம்னு… சொன்னதும் எல்லோரும் என்னைப் பார்க்க… நான் கண்டுக்காம பிரியாணி சாப்பிடுறதுல மும்பரமா இருந்தேன்…
பந்திக்கு முந்து படைக்கு பிந்துங்கற மாதிரி…வந்த வேலைய ஒழுங்கா கச்சிதமா முடிச்சேன்…
துபாய்லிருந்து போறவங்க தயவு செய்து மினரல் வாட்டர் பாட்டலை கையில் எடுத்து போங்க…அங்கு சோறு கிடைக்கும் குடிக்க தண்ணிகிடைக்காது…ஆமாங்க…அவங்க வைக்கிற தண்ணி எது தெரியுமா…? பேப்ஸி கொக்கோகோலா…இப்படி உள்ள தண்ணிதான் வைக்கிறாங்க…


ஏகத்துவ மெய்ஞ்ஞானசபைக்கு போவதற்கு தயாரானேன்…
எட்டு மணின்னு சொல்லி 8. 30 க்கு தான் போனோம்…அங்குள்ள சகோதரர்கள் பாசத்தோடு வரவேற்றார்கள்…தமிழகத்தில் பல ஊர்களை சார்ந்தவர்கள்…ஆன்மீகத்தில் உள்ள ஈடுபாட்டால் இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்திருக்கிறார்கள்…எனது ஏகத்துவ மெய்ஞ்ஞானசபை வலைப்பூவை பாhர்த்தால் அதன் விபரங்கள் தெரிந்துக் கொள்ளலாம்…
நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கிளம்புவதற்கு இரவு 11 மணிக்கு மேல் ஆகி விட்டது…
(ரொம்ப மொக்கையா இருக்கோ...)
நாளை ஞாயிறு சந்தோசா என்ற ஓரு ஐலாண்ட் போகப்போறோம்…

5 comments:

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நல்ல பதிவு. உங்கள் அனுபவம் படிப்பவர்களுக்கும் மலேசியாவைப் பற்றி தெரிந்து கொள்ளுமாறு உள்ளது.

கிளியனூர் இஸ்மத் said...

வருகைக்கு நன்றி செந்தில்வேலன்

அது ஒரு கனாக் காலம் said...

நல்லா இருக்கா மலேசியா .... நன்றாக பாருங்கள், நம்ம ஊர் மக்களை, வெளி நாட்டில் பார்ப்பதே சுகம், நீங்கள் அவர்களுடன், விழா, வழிபாடு, விருந்து, .... பூந்து விளையாடுங்க

கீழை ராஸா said...

எதோ த்ரில் கதையை படிக்கிற மாதிரி இருக்கு...நீங்க பிரியாணி சாப்பிடுவீங்களா மாட்டீங்களான்னு மனசு பதைபதைக்குது...

Tariq Mohamed said...

Ismath, i did commented in your first part, feel like i seen u before.. later i read about Katong, Nagai Dr. Ansari, ur dad.. and finally i see the above pic with my uncle Har Yasin Noor Mohamed ...
Hahahha... the world is toooo small..
Am from Singapore Too...

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....