உங்கள் வருகைக்கு நன்றி...

Sunday, August 2, 2009

மனம் கவர்ந்த மலேசியா...10

இப்படி கேள்வியா கேட்டுகிட்டு போன பதிலை யார் சொல்வதுன்னு கேக்கிறீங்களா…? கண்டிப்பா பதில் கிடைக்குமுங்க…
நேத்து பின்னூட்டத்துல மதிப்பிற்குரிய ஐயா சுப. நற்குணன் அவர்கள் பினாங்குக்கு தமிழில் பொருள் பாக்கு என்று விளக்கத்தை தந்துள்ளார்…ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி…!

மறுநாள் பைசி கார்டன் போகலாம்னு முடிவு பண்ணினோம்…எல்லாமே மதியத்துக்கு பிறகு தான் கிளம்புனும்னு என் மைத்துனர் ஆர்டர்…காலை நேரத்துல அவர் கடையின் அலுவல்களை பார்ப்பதினால் இந்த முடிவு…
மதியம் புறப்பட்டோம்…
கடற்கரையோரம் உள்ள மலைப்பகுதியில் கார்டன் அமைந்திருக்கிறது. பைசிகார்டனில் நடப்பதற்கு தான் கால்வேண்டும்…வயசு ஆகிடுச்சுன்னு நினைக்கவேண்டாம்…நான் என்னச் சொல்லிக்கல…நான் சின்ன பையன்தானே…
மலையின் மீது ஏறுதற்கு வசதியாக சாலை அமைத்துள்ளார்கள்… சாலைதான் ஏற்றமும் இறக்கமும் வாழ்க்கயைப்போல இருந்துச்சு…மூச்சு வாங்கிடுச்சு…( என் கூட வந்தவங்களுக்கு) அந்த கார்டன் உள்ளே பட்டை ஏலக்காய் ஜாதிக்காய் மிளகாய் பூண்டு இப்படி மசால சம்பந்தப்பட்ட செடி கொடிகள் இருக்கின்றன…அதுமட்டுமல்ல அங்கே ஒரு டீகடை இருக்கு அருமையான மசால டீ போட்டு தராங்க…குடிச்சேன் நல்ல உரைப்பாக (காரமாக) இருந்துச்சு…
என் மைத்துனர் சொன்னார் …. மச்சான் இந்த கார்டன் உள்ள நீங்க ஆச்சிரியபடுகிற மாதிரி ஒரு விசயம் இருக்கு…கண்டுபிடிங்கன்னா…?
டேய்…வேணாம்…என்ன உசுப்பேத்தாதே ஏற்கனவே கேட்ட கேள்விக்கு பதில் வரலை…இப்ப என்ன வச்சு நையாண்டி பண்றியான்னே…
இல்ல மச்சான் உண்மையாதான் சொல்றேன்னார்…
நான் ஆச்சிரியப்படுகிற மாதிரி என்ன இருக்குன்னு யோசனை பண்ணிக் கொண்டிருந்தேன்…ஒன்னும் புலப்படல…அப்படியே கார்டனை சுற்றி வரும்போது இங்கே ஒரு சின்ன மியூசியம் இருந்துச்சு அது உள்ளே சென்றோம்.

சென்றதும் ஆச்சிரியப்பட்டேன்…என் மனைவி சந்தோசப்பட்டார்…என் குழந்தைகள் மாமா…மாமா…ன்னு கூக்குரலிட்டாங்க…அப்படி என்ன விசயம்…?

மியூசியத்தில் என் மைத்துனரின் புகைப்படம்


அந்த மியூசியத்திலே எனது மைத்துனரின் புகைப்படமும் அவர் கடையின் வரலாறும் அங்கு வைக்கப்பட்டிருந்தது.
கேட்டேன் எப்படிப்பா இப்படியெல்லாம்ன்னு…
நாங்க பைசி (மசாலா) வியாபாரம் தான் பண்றோம் எங்க கடை பொருள்களை இந்த மியூசியத்திற்காக இலவசமாக கொடுத்திருக்கிறோம் மார்கெட்டுல நாம்ம கடை மிக பழமையானது. அதனால நம்முடைய விபரங்களை இங்கு வைச்சுருக்காங்கன்னு. இதைப் பார்த்திட்டு பல டூரிஸ்டுகள் நம் கடைக்கு வராங்கன்னார்…

உண்மையில் இது எனக்கு ஆச்சிரியமாதான் இருந்தது…வாழ்த்துக்கள் கூறி விட்டு நடந்தேன்…

போற வழியில ஒரு நீர்வீழ்ச்சி இருக்கு அதுல குளிப்போமான்னார்…குளிக்கிறதுன்னா நமக்கு குலாப்சான் சாப்பிடுறமாதிரி …ம் குளிப்போன்னே…
காரை மலைப்பாதையில் ஒட்டிச் சென்றார்… கார் போய் கொண்டிருந்தது.
திடீரென்று என் மனைவி காரை நிறுத்து நிறுத்துங்க என்று கூச்சலிட்டார்… நான் பதறிப்போய் ஏன் என்னாச்சு என்று கேட்க நிறுத்த சொல்லுங்கன்னு திரும்பவும் கத்தினார் அதற்குள் காரை நிறுத்தினார்.



ஏன் என்ன…? என்று கேட்கும் போது கையை வெளியில் நீட்டி
அங்க பாருங்கன்னா…
கைக் காட்டிய இடத்தில் பார்த்தால் ரம்புத்தான் பழமரம்…
நிறைய்ய காய்ச்சி தொங்குது… இதைப்பார்த்ததும் என் மனைவியை விட எனக்கு ஆர்வம் அதிகமாச்சி…
அடஅடஅட… என்னம்மா காய்ச்சி தொங்குது… இந்த பழம் பத்து பீசை வச்சிகிட்டு துபாயில 15திரஹம் விக்கிறானுங்க இங்க சீண்டுவதற்கு ஆள் இல்லாம கிடக்கே மனசுகடந்து அடிச்சுக்கிச்சு…
பெரும்பாலோர் தங்கள் வீட்டு வாசல்களில் இந்த மரத்தை வளர்கிறார்கள்…

காரைவிட்டு இறங்கினோம் கிளைகளையும் கொப்புகளையும் இழுத்து பழங்களை பறிக்கத்தொடங்கினோம் எறும்புகள் அதிகம் இருந்தன… ஆனால அது கடிக்கல… என் சிட்டுகள் பையை பிடித்துக்கொண்டு டேடி பறிச்சு போடுங்கன்னு உற்சாக படுத்தினாங்க… அவங்களுக்கு ரொம்பவும் பிடித்த பழம் இது…
ஒரு பத்துபழம் தான் பறிச்சுரப்போம் காய் முய்னு சத்தம் வந்தது… திரும்பி பார்த்தால் அந்த மரத்தோட சொந்தக்காரன் இல்ல சொந்தக்காரி பத்தரக்காளி மாதிரி நின்னா… ஐயோ குடும்பத்தோட மாட்டினோம்டான்னு பக்பக்குன்னு நின்னே…
அவள் ஏதோ மலாய்ல பேச… என் மைத்துனர் ஏதோ சொல்ல புலியா வந்தவள் பூனையா போயிட்டா…
மைத்துனர்கிட்ட கேட்டேன்… அவள் என்ன சொன்னா நீ என்ன சொன்னே பேசாம போயிட்டாளேன்னு…
இவங்க திருடர்கள் இல்ல டூரிஸ்டு … பிரியப்படுறாங்க காசுவேணுன்னா வாங்கிக்கன்னு சொன்னேன்…
இல்ல வேண்டாம் பறிச்சிக்க சொல்லுன்னு… சொன்னாங்க…!

எவ்வளவு பெரிய மனசு… இதுவே நம் நாடாக இருந்தால் கட்டிவச்சு தோல உறிச்சுருப்பாங்க… அவசரபட்டுட்டோமே அவங்களிடம் அனுமதி கேட்டு பறிச்சிருக்கலாமேன்னு புத்தி… பின்னாடி சொல்லிச்சு…

வா… அவங்களிடம் மன்னிப்பு கேட்கலாம்னே… அதெல்லாம் வேண்டாம் நாம கிளம்பலாம் வாங்கன்னு அழைத்துப் போய்விட்டார்…

எவ்வளவு ஆசையாக பறிச்சமோ … பிறகு அந்த பழத்தை சாப்பிட யாருக்கும் மனசு வரலை… குழந்தைகளுக்கு முன்னாடி இப்படி நாம செஞ்சிருக்கக் கூடாது.
உற்சாகத்துல செய்திட்டோமேன்னு என் மனைவியிடத்தில் கூறி வருந்தினேன்…

நாம செய்யக்கூடிய ஒவ்வொரு செயலையும் குழந்தைகள் உன்னிப்பாக கவனிக்கிறார்கள். விளையாட்டாக நாம செய்யக்கூடிய சில தவறுகளை குழந்தைகள் கால போக்கில் தவறையே விளையாட்டாக ஆக்கிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு தவறாகவே தெரிவதில்லை.

சமீபத்தில் நான் படித்த பெ. தூரனின் நூலில்

பெற்றோருடைய பேச்சு நடத்தை எல்லாம் குழந்தைக்கு முன்மாதிரியாக இருக்கின்றனவாதலால் அவற்றிலெல்லாம் அவர்கள் மிக எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். குழந்தையை நன்கு வளர்க்க ஆவல் கொண்டிருக்கும் பெற்றோர்கள் தங்கள் நடத்தையையே ஏன் வாழ்க்கையையே அதற்கேற்றபடி அமைத்துக் கொள்ள வேண்டும். களைய முடியாத குறைபாடுகளைக் குறைந்த பட்சம் குழந்தைக்குத் தெரியாதவாறாக மறைத்துக் கொள்ள வேண்டும்.-என்று கூறியிருக்கிறார்… இந்த வாசகங்களை மனதில் நிறுத்திக் கொண்டேன்… இனி இப்படி ஒரு சம்பவம் நம் வாழ்க்கையில் நடக்கக் கூடாது…!

2 comments:

மலர்வனம் said...

இனிய நண்பரே!


வணக்கம்.


குழந்தைகளுக்குமுன் பெற்றோர்கள் எப்படி இருக்க வேண்டும் அட்வைஸ் பயனுள்ள ஒன்று! பெ.தூரனின் கருத்து அருமை!



சிநேகத்துடன்

திருச்சி சையது

Antenna Installation Davie said...

Nice posst thanks for sharing

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....