உங்கள் வருகைக்கு நன்றி...

Monday, August 3, 2009

மனம் கவர்ந்த மலேசியா....11

மலைப்பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு சென்றோம்… மாலை 6 மணியானதால் யாருமே அங்கு இல்லை. சாலையில் காரை நிறுத்திவிட்டு கரடுமுரடான பாறைகளுக்கிடையில் ஏறி இறங்கி நீர்வீழ்ச்சியை அடைந்தோம்.
பால்மாதிரி தண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது தண்ணீரில் காலை வைத்தால் ஐஸ் மாதிரி சில்லுப்பு இதுல எப்படி குளிப்பதுன்னு நான் யோசனை பண்ணிக்கொண்டு நிற்க எனது மைத்துனரும் அவர் பையனும் டமார்னு தண்ணில குதிச்சாங்க அதைப்பாத்து என் மகள்களும் குதிக்க எனக்கு குளிர்வந்துடுச்சு.
நல்ல சுத்தமான தண்ணீர் அந்த அருவியின் அருகிலேயே பெரிய பைப் இருந்தது இந்த தண்ணீரைத்தான் பினாங்கு மக்கள் குடிக்கிறார்கள் என்று விடை கொடுத்தார் மைத்துனர்.
ஏல்லோரும் குளிக்கும் போது நான் மட்டும் சும்மா நின்னா நல்லா இருக்காது இல்லிங்களா அதனால நானும் குதிச்சிட்டேன்.
கொஞ்சநேரம்தான் குளிரு அப்புறம் ஜாலியாத்தான் இருந்துச்சு…
அரைமணிநேரம் குளிச்சுட்டு கரையேறினோம்.


நாங்கள் நிறுத்தியிருந்த காருக்கு அருகில் கடைகள் இருந்தன. ஆந்த கடைக்கு பக்கத்தில் ஒரு கூண்டில் இரண்டு குரங்கு குட்டிகள் விளையாடிக் கொண்டிருக்க எனது சின்ன மகள் ஆசையாய் அந்த குரங்குக்கு சிப்ஸ் கொடுத்தால் அதை வாங்கி தண்ணீரில் நனைத்து குரங்கு சாப்பிட்டது. மீண்டும் சிப்ஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் போது ஒரு குரங்கு எனது மகளின் முடியை பிடித்து இழுக்க மற்றொரு குரங்கும் இழுப்பதற்கு ஆயத்தமானது. நூன் எனது மைத்துனரிடம் பேசிக் கொண்டு நின்றேன் இதை கவனிக்க வில்லை… என் மகள் அலறியபோது தான் நான் ஒடி குரங்குகளிடமிருந்து என் மகளின் முடியை காப்பாற்றினே;.
என் மகள் ரொம்பவும் பயந்து விட்டாள்.
இவ்வளவுக்கும் அந்த குரங்கு கூண்டுக்குள் தான் இருந்தது.
குழந்தைகள் மிக அருகில் சென்று நிற்கக்கூடாது. மிருகங்களை பார்க்கும் போது கொஞ்சம் இடைவெளி விட்டுதான் நிற்கவேண்டும்ன்னு என் மகளுக்கு ஆறுதல் சொல்ல…
இதையெல்லாம் சொல்லுங்க என் பக்கத்துல நீங்க ஏன் நிக்கலன்னு அழுதுக்கொண்டே கூற சாரிமா…ன்னு சமாதானம் படுத்தினேன்.




அங்கிருந்து புறப்பட்டு டாய்ஸ் மியூசியம் சென்றோம்.
உள்ளே சென்றால் உலகத்திலுள்ள அனைத்து பொம்மைகளையும் அழகாக அடுக்கி வைத்திருந்தார்கள்.
கலாச்சாரம் சினிமா அரக்கர்கள் சூப்பர்மேன் ஃபைடர் மேன் குத்துச்சண்டை வீரர்கள் ஆங்கிலப்பட நாயகர்கள் நம்ம காமடி உலக நாயகன் மிஸ்டர் பீன் இப்படி நிறைய்ய விதவிதமான பொம்மைகள்.
இதன் உள்ளே வருவதற்கு ஒரு நபருக்கு 20 ரிங்கிட். இது கொஞ்சம் அதிகமாதான் தெரிஞ்சுது…
30 நிமிடங்களில் அனைத்தையும் பார்த்தாச்சு… இது உலகத்திலேயே பெருசுன்னு போடு போட்டிருந்தாங்க இருந்தாலும் இருக்கலாம்…







மறுதினம் தங்கஆபரணங்கள் செய்யும் பேக்டரிக்கு செல்ல தயாரானோம்…
துபாயில் நான் வேலைபார்க்கும் நகைக் கடைக்கு பினாங்கிலிருந்துதான் நகைகள் செய்து வருகிறது… சப்ளையர்கள் தங்களுடைய நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
அதன் பேரில் சென்றோம் நகைகள் எப்படி செய்கிறார்கள் என்பதை என் துணைவியாருக்கு காண்பித்தேன்.
அதிகமாக இந்தோனேசிய பெண்கள் தான் வேலைப்பார்க்கிறார்கள். வேலையில் மிக கவனமாக இருக்கிறார்கள். ஆனால் சம்பளம் குறைவு.
மலேசியாவிலேயே தங்க தொழிற்சாலை பினாங்கில் தான் அதிகம்.
துபாய்க்கு மிக அதிகமான தங்க இறக்குமதி மலேசியாவிலிருந்து தான் வருகிறது.
இதன் உரிமையாளர்கள் பெரும்பாலோர் சீனர்கள் தான.ஒவ்வொரு வாரமும் ஒரு ஆயிரம் கிலோ துபாய்க்கு இறக்குமதி செய்வார்கள்.
22 கேரட் 21 கேரட் 18 கேரட் இந்த மூன்றுவித தரத்தில் ஆபரணங்கள் செய்கிறார்கள்.
தோழிற்சாலையை முழுவதும் சுற்றி பார்த்து விட்டு கிளம்பும் சமயம் இன்று இரவு டின்னருக்கு எல்லோரும் வரனும்னு சொன்னார்.
சரி வருகிறோம்ன்னு சொன்னேன்… டின்னரை முடிச்சுட்டு மசாஜ் கிளப் வறியான்னு என்னை கேட்டாரு…
ஏம்ப்பா நாங்க சந்தோசமா இருக்குறது உனக்கு பிடிக்கலையா…ன்னே.
இதுல என்ன இருக்குன்னு ரொம்ப அசால்ட்டா சொன்னான்.
டேய் இதுல என் வாழ்க்கையே இருக்குடா… நீபேசுனது என் மனைவி காதுக்கு விழுல… விழுந்திருந்தா அவ்வளவு தான்.
ஏற்கனவே ஒருமுறை கம்பெனி வேலையா நான் மட்டும் பினாங்கு வந்தேன்.
நான் இருக்கும்போதே மசாஜ்க்கு கூப்பிடுகிறாரே நீங்க தனியா வந்தப்ப என்னென்ன பண்ணிருப்பிங்கன்னு தேவையில்லாம அவ கற்பனைக்கு ஆளாகி நான் கர்ப்பம் தரிக்கனுமா…? நான் ஏக பத்தினி விருதன்னு உனக்கு தெரியாதா…?ன்னே.
பரவாயில்லையே உன் மனைவிக்கு நல்லவே பயப்புடுற… நான் மட்டும் தான் அப்படின்னு நனைச்சேன்…ன்னான்.
என்னைவச்சாப்பா உன்னை சோதிக்கனும் … சரி ஆள விடு இதுக்கு மேல நின்னா என்ன நீ வம்புள மாட்டிவிட்டுடுவ… டின்னர் மட்டும் ஏற்பாடு பண்ணு.
நாவாரேன்னு … கிளம்பிட்டேன்.

மாலையில் பினாங்கு கடைத்தெரு சென்று சாமான்கள் வாங்கினோம். இரவு டின்னருக்கு சென்றோம். தமிழ் உணவை சீனர்கள் ருசித்து சாப்பிடுகிறார்கள்.
ஒருவழியா டின்னரை முடிச்சுட்டு பட்டவர்த் போகலாம்னு மைத்துனர சொல்ல புறப்பட்டோம்.
பினாங்கு பாலத்தில் சென்றுக் கொண்டிருக்கும் போது மைத்துனர் இடம் சொன்னேன்.
பினாங்கின் இன்னொரு பெயரை கண்டுபிடிச்சுட்டேன்னு…
எங்க சொல்லுங்க பார்ப்போம்னார்.
சார்ஜ்டவுன் என்றேன்.
எப்படி மச்சான்னா
சைன் போடுதான் போட்டிருக்கே…ன்னே தென்ன மரம் என்ன மரம்னும் கண்டுபிடுச்சிட்டேன்னே…
ஆர்வமாக என் மனைவி என்னமரம்ங்கன்னு கேட்க
சொல்லுங்க மச்சான் தெரிஞ்சுக்கிறோம்னு கேட்க

தென்ன மரம் என்ன மரம் ன்னு நான் திருப்பி சொல்ல
என்ன கிண்டல் பண்றீங்களான்னு அவங்க கேட்க
இல்ல இல்ல
இதை வேகமா கிடுகிடுன்னு சொல்லுங்க
தென்னமரம் என்ன மரம் … தென்னமரம் என்னமரம்
இதிலேயே பதில் இருக்குது
சொல்லி பாருங்க…
ஜூட்…!

3 comments:

Rajakamal said...

சிரிச்சுக்கிட்டே நாங்ளும் உங்களுடன் மலேசியா சிங்கபூர் சுற்றிப் பார்கிறோம்
அழகான அந்த இடங்களைப் பற்றிய படங்கள் கண்களுக்கு விருந்து.
ராஜா கமால்.

மலர்வனம் said...

இனிய நண்பரே!


ரசித்தேன்!

குரங்கை பற்றி சேதி சொல்லிவிட்டு

பொருத்தமாய் போட்டிருந்தீரே

உமது போட்டோவை!


சிநேகத்துடன்

திருச்சி சையது

அது ஒரு கனாக் காலம் said...

Nice one again sir... (tamil font not working)...

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....