உங்கள் வருகைக்கு நன்றி...

Monday, February 1, 2010

பங்குச் சந்தை உஷார்


பங்கு சந்தையைப் பற்றிய செய்திகளும், பல நூல்களும் தற்போது மிகையாக வெளிவந்துக் கொண்டிருக்கிறது.அன்று படித்தவர்கள் கூட இதைப்பற்றிய விளக்கங்களை அறிவுகளை பெறாமல் காலத்தை கடத்தினார்கள்.இன்று சாதாரனமானவர்களும் பங்கு சந்தையில் நுழைந்து சம்பாதிக்க ஆரம்பித்துள்ளார்கள்; என்றால் நம் நாட்டின் வளர்ச்சிப் பாதையை ஒரு கனம் திரும்பிப்பார்க்க வைக்கிறது.

இன்று பலரும் பங்கு சந்தையைப் பற்றி அறிவதற்கு மிகுந்த ஆவல் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்.தொலைசாட்சியிலும் கூட தனி நிகச்சியாக பங்கு சந்தையைப் பற்றிய விபரங்களை நிபுணர்களை வைத்து வாதிக்கிறார்கள்.

பல நிபுணர்கள் பல மாவட்டங்களில் பங்கு சந்தை விழிப்புணர்வு கூட்டங்களை நிகழ்த்திக் கொண்டு வருகிறார்கள். பல நகரங்களில் சப் புரோக்கர்கள் அலுவலகங்கள் அமைத்து இணையதளம் மூலம் தினசரி வர்த்தகங்களையும் செய்யுமளவு பங்கு சந்தையின் வளர்ச்சி விரிவடைந்து கொண்டிருக்கிறது.

பெரும்பாலோர் ஏஜண்ட்டுகளை நம்பியே தங்களின் முதலீடுகளை செய்து வருகிறார்கள்.பலருக்கும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆவலும், ஆசையும் அதிகம் இருக்கிறது அதே நேரத்தில் நாம் செய்யக் கூடிய முதலீடுகள் நல்ல கம்பெனியில் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை தன்னால் உறுதியாக சொல்லமுடியாமல் ஏஜண்டுகளின் வாய்மொழிகளை நம்பியே செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

பலரை நான் கைக்காட்டுவதை விட என்னையே இங்கு உதரணத்திற்கு எடுத்துக்கொள்ளலாம்.
பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்கு மித்த ஆர்வம் என்னிடம் இருக்கிறது.
2007-ல் ஒரு ஏஜண்ட் என்னை அனுகினார்.இன்சுரன்ஸ்சுடன் நீங்கள் முதலீடு செய்தால் உங்கள் பணத்திற்கு முழுபாதுகாப்பு என்று கூறி யூலிப் என்ற ஸ்கீமை கூறினார்.

மூன்று வருடம் மட்டும் நீங்கள் தொகை செலுத்தினால் போதும் நான்காவது வருடம் உங்களுக்கு இரண்டுமடங்காக உங்கள் தொகை உங்களுக்கு கிடைக்கும் என்றார்.நானும் ஆர்வத்துடன் யூலிப் ஸ்கீமில்(ULIP) சேர்ந்தேன்.

பங்கு சந்தையைப் பற்றிய நூல்களை வாங்கி படிக்க ஆரம்பித்தேன் அதன் பின் தொலைக்காட்சிகளில் பங்கு சந்தைப்பற்றிய செய்திகளை கேட்க ஆரம்பித்தேன்.

முதலீடு செய்த யூலிப்பைப் பற்றிய விபரங்களை அறிய ஆரம்பித்தேன் சந்தையில் மூன்றாண்டில் எவ்வளவு வளர்ந்திருக்கிறது என்று மனிக்கண்ரோல் என்ற இணையதள முகவரியல் ஆய்தேன்.

அதிர்ச்சியாக இருந்தது.மூன்றாண்டில் ஆண்டுக்கு ஒரு லட்சம் வீதம் 3 லட்சம் கட்டிருந்தேன். இந்த 3 ஆண்டில் அதன் வளர்ச்சி என்பது ஒன்றுமே இல்லை.
நான் கட்டிய தொகையிலிருந்து 30 சதவிகிதம் குறைவாகவே இருந்தது.
பங்கு சந்தையில் பலரும் பணம் பார்ப்பதாக கூறுகிறார்கள் ஆனால் நமக்கு ஏன் இப்படி குறைவாக இருக்கிறது என்று அலசினால் பல செய்திகள் வெளிவருகிறது.

யூலிப் என்ற இன்சூரன்சுடன் கட்டக்கூடிய ஸ்கீம் பத்து ஆண்டுகளுக்கு தொடந்து கட்டினால் இந்த 10 ஆண்டில் நம் பங்கு வளர்ந்து நல்ல நிலையில் இருக்கும். 4 வதுஆண்டில் இரு மடங்கு கூடும் என்பது ஏஜண்ட் கூறும் மாயை வார்த்தைகள். காரணம் யூலிப் ஸ்கீமில் கட்டக்கூடிய முதல் பிரிமியத்தில் ஏஜண்ட் கமிஷன் சுமார் 40 சதவிகிதம் கழித்து மீதி உள்ள 60 சதம் மட்டுமே முதலீட்டு செய்யப்படுகிறது.அதுமட்டுமல்ல அதில் நாம் எடுத்திருக்கும் இன்சூரன்ஸ் பாலிசிக்கும் ஒரு குறிப்பிட்ட தொகை கழிவு போகும்.இந்த விபரங்களை எல்லாம் ஏஜண்ட் நம்மிடம் கூறமாட்டார்.அதில் கட்டக்கூடிய இன்சூரன்சில் நம் முதலீட்டிற்கு பாதுகாப்பு அல்ல.கட்டக்கூடியவர்களுக்கு ஏதும் நேர்ந்தால் நாமினியாளர்கள் கட்டியத் தொகையை வசூலிக்க முடியும் அவ்வளவுதான்.

ஆனால் பல அப்பாவிகள் (என்னைப்போன்றவர்கள்) இதில் மாட்டிக் கொண்டு பங்கு சந்தையைப் பற்றி தவறான ஒரு எண்ணத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள்.அதனால் நாம் முதலீடு செய்யப்போகும் ஸ்கீமைப்பற்றி நிபுணர்களிடம் கேட்டு தெளிந்து பணத்தை போடுவது சிறந்தது.

பங்கு சந்தை முதலீடு என்பது ஒரே ஒரு ஸ்கீமில் மட்டுமல்ல.அது கடலைப் போன்றது.அதை முழுமையாக அறிவதென்பது கொஞ்சம் கடினமாக இருந்தாலும் தினமும் அதை பார்வையிட்டு வந்தால் அதைப்பற்றிய விபரங்களை தெரிந்துக் கொள்ள முடியும்.

யூலிப் ஸ்கீமில் முதலீடு செய்வதைவிட மீச்சுவல் பண்ட்(MUTUAL FUNDS) மிகச்சிறந்தது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.(இதிலும் சிறு முதலீட்டை செய்து பலன் சொன்னமாதிரியே கிடைத்தது.)அதில் அதிகமான கமிஷன் யாருக்கும் செல்லுவதில்லை.நம்முடைய தொகை முழுவதும் முதலீடாகும்.

இன்னும் வங்கியில் டிமேட்(DEMAT) கணக்கை திறந்துக் கொண்டு நாம் நேரடியாகவே STOCK பங்குகளை வாங்கி நம் கணக்கில் வைத்துக் கொள்ளலாம்.இதனால் லாபமும் அதிகம் காணலாம், கண்கானித்து வந்தால் நஷ்டத்தை தவிர்க்கலாம்.இதெல்லாம் செய்வதற்கு முன் பங்குசந்தையைப்பற்றிய அடிப்படையான விசயங்களை தெரிந்துக் கொண்டு இறங்குவது முதலீடு செய்வது சாலச்சிறந்தது.

பங்கு சந்தையில் பணம் பார்த்தவர்களும் உண்டு பணத்தை பறிகொடுத்தவர்களும் உண்டு அதனால் மிக கவனமாக நிதானமாக முதலீடு செய்ய வேண்டும்.

5 comments:

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

சரியான பொழுதில் மிகச்சரியான பதிவு.

வடுவூர் குமார் said...

அழ‌காக‌,எளிமையாக‌வும் ம‌ற்றும் விவ‌ர‌மாக‌வும் சொல்லியிருக்கிறீர்க‌ள்.

ஸாதிகா said...

நல்ல அலசல்,அருமையான தகவல்.

துபாய் ராஜா said...

நல்லதொரு பதிவு. அனுபவபகிர்வுகள் தொடரட்டும் அண்ணாச்சி.

கிளியனூர் இஸ்மத் said...

க.நா.சாந்தி லெட்சுமணன்,
வடுவூர் குமார்,
ஸாதிகா,
துபாய் ராஜா,

மற்றும் மின்னஞ்சல் மூலம் கருத்துக்களை வழங்கிய ஷேக் சிந்தாமதர், ராஜாகமால், லாரன்ஸ், நியாஸ்

அனைவருக்கு மிக்க நன்றி

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....