உங்கள் வருகைக்கு நன்றி...

Thursday, April 15, 2010

சந்திச்சாச்சு....அமீரகப்பதிவர்கள்


நீண்ட இடைவெளிக்கு பிறகு அமீரகப்பதிவர்கள் சந்திக்கலாம் என ஒரு மனதாக இமெயிலில் முடிவெடுத்தாலும் அதில் உள்குத்து, வெளிகுத்து என்று பல குத்துக்கள் இருந்தது.

அதென்ன இத்தனை குத்துன்னு கேட்கிறீங்களா விசயம் இருக்கு...

கராமா பூங்காவில் இரவு 8.00 மணிக்கு சந்திக்க நாள், நேரம் குறித்தாச்சு. நான் அங்கே செல்லும் போது 8.30 மணி.(நாம எப்போங்க சரியான நேரத்துக்கு போயிருக்கோம்)


பெரிய கூட்டம் இருக்கும்னு கற்பனையில போனே... ஆமாங்க சென்றமுறை குறும்படம் வெளியீட்டோம் இல்லீங்களா... அதை பார்த்துட்டு பலபேர் வலைப்பூ ஆரம்பிச்சதா அரச புரசல கேள்விப்பட்டேன்.அதனால் என்னுடைய எதிர்பார்ப்பு கொஞ்சம் ஏத்தமா இருந்தது.ஆனா அங்க பத்து பன்னிரெண்டு பேர்தான் இருந்தாங்க...

கீழைராஸா பேசிக்கிட்டு இருந்தாரு அவரைச்சுற்றி வட்டமா கொலகொலைக்கா மந்திரிக்கா நரியநரிய சுத்திவா மாதிரி உட்காந்திருந்தாங்க.

ஏற்கனவே பதிவர்களுடன் அறிமுகம் ஆகிவிட்டதினால குசலம் கொஞ்சம் ஜாஸ்தியா இருந்துச்சு.

சென்ஷி பக்கதுல உட்காரச்சொன்னாரு அவரு ஆசைக்கி அங்கேயே உட்காந்தேன்.

அண்ணாச்சிய காணும்மேன்னு கீழைராஸாவிடம் கேட்க அரைமணிநேரத்துல வந்துடுவாருன்னு கூறினார்.சொன்னா மாதிரியே 20 நிமிஷத்துல அண்ணாச்சியும் பெண்பதிவரான ஜெஸிலாவும் வந்தார்கள்.
பதிவர்கள் சங்கம் நாம எப்போது ஆரம்பிப்பது என்று சென்ஷி கேட்க அண்ணாச்சி முறைக்க இப்பவும் இது சங்கம்தான்டோய் தனியா என்னவேண்டிக்கிடக்கு என்றதும்
கீழைராஸா அமீரகத்துல இருக்குற எல்லா சங்கத்துலயேயும் தலைய கொடுத்துட்டு வாலைத் தேடிக்கிட்டிருக்கோம் இதுக்கு மேலயும் சங்கம் தேவையா?ன்னு முற்று புள்ளி வைத்தார்.

வந்தவர்கள்
1.அண்ணாச்சி
2.ஆஸாத்
3.கீழைராஸா
4.செந்தில்வேலன்
5.சுந்தர்
6.சென்ஷி
7.அகமது சுபைர்
8.முத்துக்குமரன்
9.கலையரசன்
10.நாஞ்சில் பிரதாப்
11.முதுவை முகில்
12.ரியாஸ்
13.சபிர்
14.நான்

நிறையப்பேரைக் காணுமேன்னு சுபைர்ரிடம் கேட்டேன்
நல்லா சிரித்துக் கொண்டு பேசியவர் சட்டென முகத்தை மாற்றிக் கொண்டார் காரணம் அப்போது விளங்கவில்லை.ஆனாலும் இந்த சந்திப்புல சுபைர் ரொம்ப சந்தோசமா இருந்தாரு.

அந்த சந்தோசத்துக்கு காரணம் (கடாவை பழிகொடுக்கபோறாங்க) அவருக்கு அடுத்தமாசம் கல்யாணம்.


சில பதிவர்கள் தாயகம் செல்வதனாலயும், பல தமிழ் அமைப்புகளில் விடுமுறை நாட்களில் விழாக்கள் நடத்துவதனாலயும், பதிவர் சந்திப்பு விடுமுறைநாளுக்கு விடுமுறை கொடுத்துவிட்டு இப்படி திடுதிப்புன்னு ஏற்பாடு செய்திருக்காங்கன்னு நெனச்சிங்கன்னா தப்பு தப்பு...
இது விருந்துக்காகவே கூடிய சந்திப்புன்னு நான் இங்க எழுதல...அதனாலதான் உள்குத்து வெளிகுத்துன்னு சொன்னேன்.


ஆமாங்க... சுபைரும் செந்தில்வேலனும் வந்தவர்களுக்கு மட்டும் ட்ரீட்டு வச்சாங்க.அதனால தான் என்னப் பார்த்து முறைச்சாரு.எல்லா பதிவரும் வந்து கலந்திருந்தா அனேகமா சுபைர் வந்திருக்க மாட்டாருன்னு குசும்பன் சொல்வது காதில் விழுகிறது.

சுபைரு ட்ரீட்டு கொடுத்தது தான் பழியாவதற்கு

செந்தில்வேலன் கொடுத்தது தான் பழியாகி பழிவாங்க வந்தவருக்கு (குழந்தை பிறந்ததற்காக) கொடுத்தாரு...


அண்ணாச்சி நல்ல உணவகமாக பார்த்து அழைச்சுட்டுப் போவதற்கு முன்னாடியே ஜெஸிலா கிளம்பிட்டாங்க சுபைருக்கு ரொம்ப சந்தோசம் ஒரு தல குறைஞ்சுடுச்சு.

கொஞ்ச தூரம் நடப்பாட்டியே அண்ணாச்சி அழைச்சுக்கிட்டு போனதின் இரகசியம் நல்லா சாப்பிடுவோம்னு மட்டுமல்ல தரமான உணவகத்தை தேர்தெடுப்பதற்கு என்று சாப்பிட்ட போது விளங்கிக்கிட்டோம்.
சுpக்கன் மட்டன் பிரியாணி சிக்கன் கபாப் சிக்கன்65 சிக்கன் டிக்கா இப்படி சிக்கு சிக்குன்னு பல ஐட்டங்கள்
(பதிவர் சந்திப்புக்கு வராத அமீரகப் பதிவர்களே வயிற்றெரிச்சல் படவேண்டாம். சுபைரு கல்யாண முடிச்சதும் இன்னொரு விருந்தும் கொடுப்பாரு)

எல்லாம் முடிஞ்சு வெளியில வந்தோம் ... ஒரு நிமிசம் என்று கூறி சுபைர் பாத்ரூம் போனாரு போய் ரொம்ப நேரமாச்சு ஆளைக் காணும்.

சுபைரிடம் ஏம்பா இவ்வளவு நேரம் என்று கேட்க
உடனே முகில் பாத்ரூமில் அழுதுவிட்டு வராரு...என்று கூறி புன்னகையுடன் எல்லோரும் விடைபெறுவதற்கு முன்

உதவிக்கரம் நீட்டியவருக்கு மருத்துவ உதவிக்காக அண்ணாச்சி பண்ட் கலெக்ட் செய்தார்.பலரும் பங்கெடுத்தோம்.

கடைசியா ஒருவார்த்தை கீழைராஸா சொன்னார்

இந்த நிகழ்ச்சிய யாரும் பதிவிடவேண்டாம்ன்னார்.அவரு சொன்னதை எல்லாரிடமும் சொல்லனுங்குறதுனால தான் இந்த பதிவு.


மொத்தத்துல கூட்டம் குறைவா இருந்ததுனால மொக்கையும் குறைவா இருந்துச்சு...வராத பதிவர்களை நினைத்து சுபைருக்கு சந்தோசம் எங்களுக்கு வருத்தம்.

3 comments:

அப்துல்மாலிக் said...

//எல்லாம் முடிஞ்சு வெளியில வந்தோம் ... ஒரு நிமிசம் என்று கூறி சுபைர் பாத்ரூம் போனாரு போய் ரொம்ப நேரமாச்சு ஆளைக் காணும்.//

ஏந்தான் இந்த குழுமத்திற்கு கல்யாணப்பத்திரிக்கை அனுப்பினோம்னு நினைச்சிருப்பாரு???

அருமையான திடீர் சந்திப்பு....

வேலைப்பழுவினால் கலந்துக்கொள்ளமுடியவில்லை

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

உள்ளேன் ஐயா :)

துபாய் ராஜா said...

அருமையான பகிர்வு அண்ணாச்சி...

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....