உங்கள் வருகைக்கு நன்றி...

Friday, July 24, 2009

மனம் கவர்ந்த மலேசியா....5

சனி ஞாயிறு என்றாலே சிங்கை மக்களுக்கு கொண்டாட்டம் தான்…விடுமுறை நாள் அல்லவா…! குடும்பத்தோடு நண்பர்களோடு உறவினர்களோடு சந்தோசமா விடுமுறையை கழிக்கிறாங்க…
பல தமிழர்களைத் தவிர…
நம்ம ஆளுங்க நல்லாவேலைப் பார்ப்பாங்க நல்லா சாப்பிடுவாங்க நல்லாத் தூங்குவாங்க…விடுமுறைன்னா சினிமாவுக்கு போவாங்க…அவ்வளவு தான்…


வெளியில் சுற்றினால் சிலவாகுமேன்னு சிலர் குடும்பத்துக்கு கொடுக்கனும்னு தன்னுடைய சந்தோசத்தை சுருக்கிக்கிறாங்க…( நைனா…துபாய்லியும் அப்படித்தான் கீராங்க…ம்…தெரியும்… தெரியும் ) சொந்த தொழில் வைத்திருப்பவர்களும் ஞாயிருக் கூட சிலர் விடுமுறை விடுவதில்லை…
ஆனால் அங்கு வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்துக் கொண்டிருப்பது சீனர்களும் மலாயர்களும் தான்…!
நாம மூன்று வேலை சாப்பிடுவதை அவர்கள் அதை ஐந்து வேலையாக சாப்பிடுகிறார்கள்… உண்பது அவர்களுக்கு ஒரு கலை…அதனால்தான் சிங்கையில் எங்குப் பார்த்தாலும் அதிகமான உணவகங்கள்…!
அவர்களை மூலமாக வைத்து தான் நம்மவர்கள் முதலீட்டுகிறார்கள்...

எனது தந்தையைப் பற்றி இந்த இடத்துல நான் சொல்லியாகனும்…
அவர் சிங்கப்பூர் பிரஜை…55 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வாழ்ந்தவர்…

"காத்தோன்"- என்ற இடத்தில் 5அடிகடை வைத்திருந்தார்… 5அடி கடையென்றால் பில்டிங்கின் நடைபாதையில் 5அடிக்குள் செவிற்றில் ராக்கைகள் அடித்து அதில் பொருள்களை வைத்து சுமார் 45 ஆண்டுகள் அதில் வாழ்ந்தவர்…

ஏழு பிள்ளைகளுக்கு தந்தை… அதனால் அவர் எங்களுக்கு ஆலமரமாக இருந்து எங்களுக்கு நிழல் கொடுத்தவர்…இவருக்கு சிங்கையில் தெரிந்த இடம் மூன்று மட்டும் தான்.
ஏர்போர்ட்,இவர் தங்கியிருக்கும் வீடு,கடை எங்கும் செல்ல மாட்டார் உறவினர்கள் கூட இவரை வந்துதான் பார்ப்பார்கள்…
இறுதியாக சக்கரை நோயினால் காலில் புண் ஏற்பட்டு பக்கத்து கடைக்காரரகள்; இவரை வழுகட்டாயமாக அழைத்து போய் ஆஸ்பட்டலில் சேர்த்தார்கள்…டாக்டர்கள் அவர் காலை வெட்டி எடுக்கவேண்டும் என்று நாள் குறித்தார்கள்.

என் உறவினர்களின் தொலைபேசியின் செய்தியறிந்து பதற்றத்துடன் 2002-ல் சிங்கை சென்றேன்…அனாதையாக ஆஸ்பட்டலில் அவர் படுத்திருந்ததைப் பார்த்ததும்…அழுதேன்…இப்போது கூட என்னால் இந்த வாசகத்தை டைப் செய்யமுடியவில்லை…கண்ணீர் துளிகள் எழுத்துக்களை மறைக்கிறது.……………
எங்கள் குடும்பத்துக்காக இவரின் தியாகம் கொஞ்சமல்ல…ஏழு பிள்ளைகளுக்கும் தனித்தனி வீடு கட்டிகொடுத்தவர்…ஆனால் தன்னுடன் வேலைபார்ப்பவரை வீட்டுக்கு அனுப்பி விட்டு இவர் மழையின் சாரலில் சாக்கடைக்கும் அருகில்தான் இவரின் இரவு உறக்கம்…



என் தந்தை ஹாஜி ஜே.கமாலுதீன்

ஒரே இரவில் 45ஆண்டுகள் உணவளித்த அந்தக் கடையை காலி செய்த போது என் மனம் ரனமானது…எனக்கே இப்படி என்றால் அதில் வாழ்ந்த என் தந்தைக்கு எப்படி இருந்திருக்கும் பக்கத்து கடைக்காரர்களெல்லாம் அனுதாபத்தோடு பார்த்தார்கள். அந்த தருணத்தில் என் உறவினர் மச்சான் ஜெகபர் அலி நிஜாமுதீன் அண்ணன் அவர்களின் உதவி பெரிதாக இருந்தது…என்றும் மறக்க முடியாதது…
சிங்கப்பூர் வாழ்க்கையை பற்றி சிங்கை மினிஸ்டர் மாண்புமிகு நாதன் அவர்கள் எழுதிய நூலில் என்தந்தையின் புகைப்படத்தையும் கடையையும் பற்றி குறிப்பிட்டிருந்தார்…

கால் ஆப்ரேசன் செய்யாமல் அவரை ஊறுக்கு அழைத்துக் கொண்டு போய்…நாகையில் டாக்டர் அன்சாரி என்பவரிடம் காண்பித்து வெட்டவேண்டிய காலின் புண்ணை குணமாக்கி என் தந்தையை நடக்க வைத்தார்…டாக்டர் அன்சாரி அவர்களுக்கு இந்த நிமிடத்திலும் என் நன்றியை சமர்ப்பிக்கின்றேன்…

2004-ல் என் தந்தை காலமாகி விட்டார்…அப்போது வயது 67….45ஆண்டு வெளிநாட்டு வாழ்க்கையில் தன் குடும்பத்தாரோடு எத்தனை ஆண்டுகள் வாழ்திருப்பார்…இரண்டாண்டுக்கு ஒருமுறை தாயகம் செல்லும் அவர் அதிகபட்சம் 4 மாதங்கள் மட்டுமே தங்கிருப்பார்…என் தந்தையின் மரணத்திற்கு பின் தான் அவர் சேர்த்து வைத்திருந்த பலகோடி சொத்தின் மதிப்பு எனக்கு தெரிந்தது…குடும்பம் குடும்பம் என்றே தன் வாழ்க்கையை தானம் செய்தவர்…
என் தந்தையைப் போன்று இன்னும் பலரின் தந்தைகள் இப்படித்தான் சிங்கையில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றார்கள்…பொருளீட்டுகிறார்கள்.
இப்படி ஒயாமல் சம்பாதிப்பே வாழ்க்கை என்று வாழ்பவர்கள் மனஉலைச்சலையும் சக்கரைநோய்யையும் இரத்த அழுத்தத்தையும் கூடுவே
சம்பாதித்துக் கொள்கிறார்கள்…வாழ்க்கையை திட்டமிடுதல் என்பது பலருக்கு புரியாததாகவே இருந்துக் கொண்டிருக்கிறது…

விடுமுறை நாட்களில் வெளியில் செல்வது மன உலைச்சலை குறைக்கும்; நடைகிடைக்கும் அதனால் உடலும்,மனமும் சீர்பெறும்…இன்னும் நகைச்சுவை உணர்வுமிக்க நண்பர்களுடன் சென்றால் நம்மை மறந்து சிரித்து மகிழலாம்…

எனது இலக்கியநண்பர் துபாயில் பல ஆண்டுகளாக பணிபுரிகிறார். அவர் தான் உண்டு தன் வேலையுண்டு என்று வாழ்பவர். வெளியில் எங்கும் செல்வதில்லை… இந்த வாரம் தான் என் இலக்கிய சகாக்களுடன் பூங்காவிற்கு அழைத்துச் சென்றோம்… மிகவும் சந்தோசப்பட்டார்…
நமக்கு அமையும் நண்பர்களை பொருத்து தான் நம் பழக்கமும்.
நல்ல பழக்கங்களுடைய நண்பர்களை நாம் அமைத்துக் கொள்வதை பொருத்தே நம் உடலுக்கும், உள்ளத்திற்கும்,ஆரோக்கியமும்,அமைதியும் நமக்கு கிடைக்கும்…

இது அறிவுரை அல்ல வாழ்க்கையின் எதார்த்தம்…என்று நீங்கள் எடுத்துக் கொண்டால்…………இந்தப் பகுதியும் சுற்றுலாதான்…!

சிந்திப்போம்… மீண்டும் சந்திப்போம்…!

9 comments:

அது ஒரு கனாக் காலம் said...

மிகவும் நெகழ்ச்சியாக இருந்தது பதிவை படிக்கும் பொழுது, உங்கள் தந்தை செய்த தியாகம் கொஞ்ச நஞ்சமல்ல .... அடுத்த முறை சந்திக்கும் பொழுது, திரு நாதன் எழுதிய புஸ்தகம் இருந்தால் காண்பிக்கவும்

கிளியனூர் இஸ்மத் said...

உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே...சந்திக்கும்போது...காண்பிக்கின்றேன்...
அது ஒரு கனாக் காலம்

buruhani said...

நல்ல பதிவு

மலர்வனம் said...

உங்கள் தந்தையின் தியாகமும், பாசமும் கண்களை குளமாக்கியது!


- திருச்சி சையது

கலையரசன் said...

நெகிழ்ச்சியான பதிவு..
நீங்கள் துபாயில் குடும்பத்துடன் வசிக்கிறீர்களா?

கிளியனூர் இஸ்மத் said...

நன்றி.............ஆம் கலையரசன்...

Unknown said...

valuable minutes to think ourselves

you...made it...

thanks

rgds
syedalimoulana

மலர்வனம் said...

We are waiting for next part?
Trichy Syed

கீழை ராஸா said...

காமடியாக எழுதிவந்து மனதை உருக்கி விட்டீர்கள்...
இந்தப்பகுதி இன்னொரு "தவமாய் தவமிருந்து"

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....