உங்கள் வருகைக்கு நன்றி...

Tuesday, July 28, 2009

மனம் கவர்ந்த மலேசியா....7

காலை நான்குமணிக்கே விழித்துக் கொண்டேன்…6.45 மணிக்கெல்லாம் பஸ்டாண்டு வந்திட்டோம்…பஸ்சும் ரெடியாக நின்றுக் கொண்டிருந்தது…சாமான்களை உரிய இடத்தில் வைத்துவிட்டு பஸ்சினுல் ஏறி அமர்ந்தேன்…
என்கண்ணையே என்னால் நம்ப முடியவில்லை… எனக்கு ஒரு சந்தேகம்… நாம எமிரெட்ஸ் பிளைட்டில் பஸ்ட்கிளாஸ் டிக்கேட் ஏதும் புக்பண்ணிட்டோமா…இது பஸ்சுதானா…? அல்லது பிளைட்டா…? பிளைட்டில் கூட இவ்வளவு பெரிய வசதி இருக்காதே…ன்னு தோனிச்சு…
பில்டப் ஏதும் நான் போடலைங்க…ஏதோ பஸ் ஒனரு என்னை ஒசியில அழைச்சுட்டு போறேன் உன் பிளாக்குல என்னைப்பற்றி ஒகோன்னு எழுதுன்னு சொன்னா மாதிரில பாக்குறீங்க…

அந்த பஸ்சுல மொத்த இருக்கையே 18 தாங்க… ஒவ்வொரு சீட்டுக்கும் இடைவெளி அதிகம் இருக்கைகள் அனைத்தும் எலக்ட்ரானிக் சிஸ்டம் … இதுல ஒவ்வொரு இருக்கையிலும் டிவிவேற…அதுல தமிழ் படம் பாடல்கள் கேம் இப்படி பல பொழுதுபொக்கு விளையாட்டுகள்…இந்தமாதிரி வசதிய பார்த்ததும் அட நாம கொடுக்குற காசு கொஞ்சமுன்னு மனசுல பட்டுச்சு… துபாயில இப்படியொரு பஸ்சை நான் பாக்கல…இந்த பெருமை சிங்கைக்கும் மலேசியாவுக்கும் மட்டும் தான்…
சொன்னபடி சரியா 7.30 மணிக்கு பஸ்புறப்பட்டுச்சு… சிங்கையிலிருந்து விடைபெறுவதற்கு முன்னால ஒருசில வார்த்தைகள்…

சிங்கை
என்சிந்தைக்கு
விருந்தளித்த
மங்கை…

தூய்மை உன்னிடம்
தாய்மையாய்
கண்டேன்…

உன்னைப் போல்தான்
உன் மக்களும்
தூய்மையானவர்கள்…

தமிழ் மீது
நீ கொண்டிருக்கும் பாசம்
தமையனாய் என்னை
எண்ணவைத்தது…

அவர்களிடம்
பலமத நம்பிக்கையிருந்தாலும்
உன்னைப் பற்றிய
அவநம்பிக்கை இல்லை…

மதங்களைக் காரணம் காண்பித்து
தங்களுக்குள்
மதம்பிடித்துக் கொள்ளவில்லை…

இனம் வேறுபட்டாலும்
மனம் அவர்களிடம்
ஒன்றுதான்
சிங்கைவாசிகள்
சித்திர மனிதர்கள்
சல்யூட்
சிங்கப்பூர்…!

பஸ் புறப்பட்டு சென்றுக் கொண்டிருக்கிறது…ஒரு மணிநேரத்தில் மலேசியா பார்டர்ரான ஜொஹர்பார் வந்தது…
அனைவரும் இறங்கி சிங்கை இமிக்கிரேசனில் எக்ஸிட் பண்ணினோம்… அப்போது சின்ன சிக்கல் எனக்கு ஏற்பட்டது…
சிங்கைக்கு நான் வந்தபோது விமான நிலைய இமிக்கிரேசனில் 30 நாட்கள் தங்குவதற்கு அனுமதித்து ஒரு வெள்ளை அட்டையில் ஸ்டாம் பண்ணி கொடுத்தாங்க…அதை நான் அலட்சியமாய் பாஸ்போர்ட்டுடன் வைக்காமல் அது தேவையில்லையென ஏதோ ஒரு பேக்கில் வைத்துவிட்டேன்…இப்போது எக்ஸ்ஸிடில் அதை கேட்டார்கள்…
அது பேக்கில் உள்ளது… பேக் பஸ்சில் உள்ளது என்றதும்… அந்த வெள்ளை அட்டை மிக அவசியம் நீங்கள் சிங்கப்பூரில் வெளியில் செல்லும் போது அதை வைத்திருக்க வேண்டும்…யாரும் சோதனைகள் செய்தால் அந்த அட்டையை காண்பித்தால் போதும்… அது உங்களின் அடையாள அட்டைஎன்று இமிக்கிரேசன் அதிகாரி கூற நான் பேந்த பேந்த முழிக்க…எங்க டேடி எப்பவும் இப்படித்தான்னு என்மகள் கருத்துச் சொல்ல…சில வினாடிகளில் டென்சனாகி அதிகாரியிடம் எஸ்க்கியூஸ் கேட்டு நான் மட்டும் பஸ்சுக்கு போய் பேக்கை எல்லாம் திறந்து கண்டுபிடிச்சதும் தான்…அப்பாடா..ன்னு பெருமூச்சு விட்டேன்…
அதிகாரி அந்த அட்டையை பெற்றபின்தான் எக்ஸிட் ஸ்டாம்பே குத்தினாரு…அசடுவலிய அவரைப்பார்த்து நன்றி சொன்னதும்…அவரு என்ன ஒருமாதிரியா பார்த்தாரு…அந்த பார்வையில இப்படி வெண்ணையா மலேசியாவுலேயும் இருக்காதேன்னு சொல்றாமாதிரி இருந்துச்சு…

இது முடிச்சதும் அடுத்த 10 நிமிடத்தில் மலேசியா எல்லை வந்தது… அங்கே இமிக்கிரேசனில் 30 தினங்கள் தங்குவதற்கு விசா கொடுத்தார்கள்… சிங்கையில் கொடுத்த அதேபோல அட்டையும் தந்தார்கள்…இந்தமுறை ரொம்ப கவனமாக இருக்கனும்னு யோசிப்பதற்குள்ளயே என் மனைவி என்னிடமிருந்து எல்லாத்தையும் வாங்கிட்டாங்க… என்ன…உங்கள யெல்லாம் இவ்வளவு தூரம் பத்திரமா அழைச்சுகிட்டு வந்திருக்கேன் இதை பத்திரமா என்னால வெச்சுக்க முடியாதான்னு கேட்டேன்…உடனே பதில் வந்துச்சு… வெச்சிகிட்ட லெட்சணத்தை தான் பாத்தோமேன்னு…

மீண்டும் பஸ்புறப்பட்டது பொற வழியில் காலை சிற்றுண்டி கழிக்க ஒரு ஹோட்டலில் பஸ்சை நிறுத்தினார்கள்… என்ன சாப்பிடுவதுன்னு ஒரே குழப்பம் எல்லாமே சீன மலாய் உணவுதான்…
ஒருகடையில் முட்டை வைத்திருந்தார்கள் அதைபார்த்ததும் எனக்குள் சந்தோசம்…முட்டைசேண்டுவீச் சாப்பிடலாம்னு கைசாடை காண்பித்து ஒரு முட்டை சேண்டுவீச்சும் பக்கத்தில் வைத்திருந்த பர்கரை காண்பித்து ஒரு பர்கரும் கொடுங்கன்னே…
உட்கார சொன்னாங்க…5 நிமிசத்துல ரெண்டு சாண்டுவீச் மொத்தமா கொடுத்தாங்க… இவ்வளவு பெரிசா இருக்கே…முட்டை சின்னதாக தானே இருந்துச்சுன்னு பிரிச்சு பார்த்தா …முட்டையும் பர்கரும் ஒரே பண்னில் வைத்து சேண்டுவீச் பண்ணிருக்காங்க…
என்பிள்ளைகள் அதைப் பார்த்ததுமே வேண்டாம்னு சொல்லிட்டாங்க…என் மனைவிக்கு கொடுத்தேன்…ம்…ஒரு சேண்டுவீச் ஒழுங்கா ஆர்டர் பண்ணத் தெரியுதான்னூங்க… ஹி…ஹி…உன்னை கல்யாணம் பண்ணுவதற்கு முன்னடி ஒழுங்காத்தான் ஆர்டர் பண்ணுனே…இப்போ கொஞ்சநாளா இப்படி ஆயிட்டேன்னு சொல்லலாம்னு நினைச்சேன்…அப்புறம் இன்பசுற்றுலா துன்பசுற்றுலாவா மாறிடோம்னு சொல்லல…

மீண்டும் பஸ் புறப்பட்டது…தசவதாரம் படம் பஸ்சுல பார்த்தேன்…என் பிள்ளைகள் கேம் விளையாடினாங்க…பகல் 12.45க்கு கோலாலம்பூர் வந்தது… சிலர் இறங்கினங்க சிலர் ஏறினார்கள் … 10 நிமிடத்திலேயே பஸ்புறப்பட்டது…


ஹைவே இருபக்கமும் தென்னைமரம்போல நிறைய்ய மரங்கள்…அந்த தென்னை மரத்தில் கொடிகள் பின்னி இருந்தது… தேங்காயோ அல்லது குடும்பையோ அந்த மரங்களில் இல்லை…
“என்னங்க தென்னைமரம் இப்படி இருக்குன்னு” மனைவிகேட்டாங்க…
“இதுவா மலேசியா தென்னை மரமெல்லாம் இப்படிதான் இருக்கும்னு” பதில் சொன்னேன்…
“தேங்காய காணுமே”ன்னு கேட்டாங்க…
“இது என்ன கேள்வி…? வேர்பலா மாதிரி வேர்ல தேங்கா மொலைக்கலாம்…இப்படியெல்லாம் கேள்வி கேட்டு என்ன சங்கடப்படுத்தக் கூடாது”ன்னு சமாளித்தேன்…
“தெரியலைன்னா தெரியலைன்னு சொல்ல வேண்டியது தானே…அதுக்கு ஏன் இப்படி”ன்னாங்க…
நான் விடுவேனா…என் மைத்துனருக்கு போன் போட்டேன்…
ஏம்ப்பா…வழிநெடுவுலயும் தென்னமரம் மாதிரி இருக்கே அது என்ன மரம்ப்பான்னு கேட்டேன்…
பினாங்குதானே வந்துகிட்டு இருக்கீங்க…அதுக்குள்ள என்ன அவசரம்…? சந்தேகத்தெல்லாம் தாள்ல எழுதிவச்சுக்குங்க வந்ததும் சொல்றேன்னு போனை கட்பண்ணிட்டார்(ன்)…
அடப்பாவி நான் என்ன ஐயேஎஸ் பரிச்சை எழுதுறத்துக்கா சந்தேகம் கேட்டேன்…இப்படி பதில் சொல்றானே…ன்னு என்மனைவியை பாத்தேன்…
அந்த பார்வையை புரிஞ்சுக்கிட்டு நீங்க நினைக்கிற மாதிரி எங்க குடும்பம் ஒன்னும் இல்ல…
அதெப்படி மனசுல உள்ளத அப்படியே சொல்லி….டா…பொம்பளைங்களே இப்படித்தான் … மனசுல உள்ளத ஈஸியா புரிஞ்சுக்குவாங்க ஆனா புரியாத மாதிரி நடிப்பாங்க…!(இதுக்கு மேல சொன்னா...உருட்டுக்கட்டை நிச்சம்)

அது போகட்டும்… தென்னமரம் என்னமரம்…?

நாளைக்கு விடை கிடைச்சுடுங்க…

3 comments:

மலர்வனம் said...

இப்படி வெண்ணையா மலேசியாவுல?
வெச்சுக்கிட்ட லெட்சணத்தைதான் பாத்தோமே…?
இன்பச்சுற்றுலா துன்பச்சுற்றுலாவாகிடக்கூடாது?
தெரியலைன்னா தெரியலைன்னு சொல்ல வேண்டியதுதானே..?


வரிகளை ரசிச்சேன்.



சிநேகத்துடன்…

திருச்சி சையது

சி தயாளன் said...

வணக்கம்..இன்றுதான் உங்கள் பதிவுகளை படித்தேன்..

அந்த வெள்ளை அட்டை மிக முக்கியம். நம்மவர்கள் பலர் இப்படி கவனக்குறைவாக அதனை தொலைப்பது வழமை...சிங்கையிலாவது கதைத்து தப்பிவிடலாம்..மலேசியாவில்...?

உங்கள் விடுமுறை இனிதாக கழிந்திருக்கும் என்று நம்புகிறேன்...:-)

Anonymous said...

நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....