உங்கள் வருகைக்கு நன்றி...

Friday, July 31, 2009

மனம் கவர்ந்த மலேசியா...8

(தென்னைமரத்தைப்பற்றிய விடைக் கிடைக்காமல் சிறுகதை எழுத்தாளர் திருச்சிசையது டெலிபோன் செய்து கேட்டார்… தொடர்ந்து தொடரைப்படித்து வருவதினால் அவருக்குள் பெரிய ஆர்வம்…ம்…கூம் நான் சொல்லலைய்யே… பதிவுல படிங்கன்னு சந்தோசமா சொன்னேன்… என் பிரியாணிய சாப்பிட்டுவிட்டு முப்பத்திமூன்று முறை நல்லா இருக்குன்னு சொன்ன முனைவர் அவருதான்…அதனால நான் சொல்லிருப்பேன்னு நீங்க நினைச்சுட வேண்டாம்…)
மலேசியாவின் அழகே தனி அழகு…எங்குபார்த்தாலும் பசுமைப் புரட்சி…மிதமான சில இடங்களில் கொஞ்சம் அதிகமான வெப்பம்…வெப்பம் அதிகரித்தால் உடனே மழை…பஸ்சில் போகும் போதே வெப்பத்தையும் மழையையும் பார்த்தோம்…பாலைவனத்திலிருந்து வந்த எனக்கு இது சொர்க்க பூமியா தெரிகிறது…எல்லோரும் பஸ்சுல தூங்கினாங்க எனக்கு தூக்கம் வரல

பஸ் பினாங்கை நோக்கி பாய்ந்தது…சரியா சொன்னமாதிரி மாலை ஆறு மணிக்கெல்லாம் பினாங்கு பாலம் வந்தது…இந்த பாலம் “பட்டவர்த்” என்ற இடத்தையும் “பினாங்கு” ஐலாண்டையும் இணைக்க கூடியது. இது 16 கீமீ நீளம் கொண்டது…
இந்த பாலம் இருந்தாலும் இதைக் கட்டுவதற்கு முன் ப்பேரியில் தான் இக்கரைக்கும் அக்கரைக்கும் போக்குவரத்து நடைப்பெற்றது…ஆனால் அது தொடர்ந்து இன்று வரையிலும் நடந்துக் கொண்டு வருகிறது…பேரியில் கார் மோட்டார் சைக்கிள் சைக்கிள் இப்படி அனைத்தும் பயணம் செய்வதற்கு ஏதுவாக வசதிகள் செய்திருக்கிறார்கள்…30 நிமிடங்களில் இக்கரையிலிருந்து அக்கரைக்கு சென்றடைகிறது…மாலை நேரத்தில் பாலம் டிராபிக்னால் தினரும் அந்த சமயங்களில் பலர் ப்பேரியில் பயணம் செய்கிறார்கள்…
மலேசியாவை பொருத்தவரையில் அதிகமான டுவல்கேட் இருக்கிறது…காசை கறந்து விடுகிறார்கள்…காசு கொடுத்தாலும் ரோடு ரொம்ப சூப்பருங்க…நல்ல முறையில கொடுக்கின்ற காசுக்கு வேலை பார்க்கிறார்கள்…(லஞ்சமும் இருக்கு)
பினாங்கு பஸ்டாண்டில் இறங்குவதற்கு முன்னாடியே எனது மைத்துனர் பஸ்சைவிட்டு இறங்கி வெளியில் வரவேண்டாம் டெக்ஸிகாரர்கள் தொல்லை அதிகம் இருக்கும் என்று சிக்னல் கொடுத்தாரு…அதனால பஸ்சை விட்டு இறங்கி அங்கேயே நின்றுக் கொண்டிருந்தோம்…15 நிமிடங்களுக்குள் சென்னை எக்மோர் ஆட்டோகாரர்களை ஞாபகம் படுத்திட்டாங்க பினாங்கு டெக்ஸி ஒட்டுனர்கள்…
ஒரு வழியா அவர்களை சமாளித்தேன். என் மைத்துனர் குடும்பத்தோடு அழைக்க வந்தார். காரில் ஏறி வீடு வந்தோம்…என் மைத்துனரின் மாமனார் வீட்டில்தான் நாங்க தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது…(பலே பார்ட்டிங்க…)
இதுவும் ஸ்டார் ஹோட்டல் மாதிரிதான்…முன்னாடியே சொன்னேன்ல..என் மனசுல அவங்க சூப்பர்ஸ்டார் மாதிரின்னு…(ரொம்ப சாம்ராணி போடாதடா…அப்டிங்கிறீங்களா..?)
14 மாடிக் கட்டிடம்…இவங்க பிளாட் 6வது மாடி…கீழே நீச்சல்குளம்…என்பிள்ளைகளுக்கு அதைப்பார்த்ததும்…ஐய்ய்யா…சந்தோசம் தாங்கல…அப்படியே அவங்க வாயை பொத்திட்டேன்ல…ஏற்கனவே சிங்கப்பூர்ல பட்டது போதும்டா சாமி…!...(இன்னும் வேக்குதே)
எங்களை வீட்டில் விட்டுவிட்டு அவர்கடைக்கு புறப்பட்டார்…இருப்பா நானும் வரேன்னு கூடவே கிளம்பினேன்.ஒய்வு எடுங்களேன்…நாளைக்கு வெளியில போகலாம்ன்னார்…பஸ்சுல ஒய்வாதான் வந்தேன்…எந்த கலைப்பும் தெரியலைன்னு…கொடுத்ததை வாங்கி குடிச்சுட்டு மைத்துனருடன் புறப்பட்டேன்.


“லிட்டில் இந்தியா”-இது இந்தியர்களுக்கான மார்க்கெட் இங்குதான் மைத்துனரின் மாமனாரின் அப்துல்சலாம் மசாலக்கடை இருக்கிறது…சில்லறை வியாபாரமும் மொத்தவியாபாரமும் சுமார் 30 வருடத்திற்கு மேல் செய்து வருகிறார்கள்…இவங்க இந்த மார்க்கெட்டில் நல்ல பெயருடன் வியாபாரம் செய்துவருகிறார்கள்…
மந்திரி பார்வையிடுவது போல நானும் அப்படியே பார்வையிட்டேன்…
சாமான்களையெல்லாம் வேனில் ஏற்றிக் கொண்டு உணவகங்களுக்கு டெலிவரிசெய்ய புறப்பட்டார்… என்னை கடையில் இருக்கும் படி கூறினார்… இல்ல நானும் வாரேன்னு அவர் கூடவே புறப்பட்டேன்…
போறவழியில் பினாங்கின் டிராப்பிக்கை பற்றியும் அங்குள்ள போலீஸ்காரர்களை பற்றியும் (கிட்டதட்ட நம்ம ஊர் போலீஸ்மாதிரி தான்) சொன்னாரு…எல்லாத்துக்கும் ஊம் போட்டேன்…ஆமா…அந்த தென்னமரம் என்ன மரம்ப்பான்னு கேட்டேன்…
சிரித்தார்…ஏன் தென்னமரம் பின்னாடியே நிக்கிறீங்க…?ன்னாரு…
தென்னமரம் மாதிரி இருக்கு ஆனா அது தென்னமரம் இல்ல..அது என்ன மரம் ன்னு தெரிஞ்சுக்கலாம்னு ஆர்வம் தான்…
“மச்சான் போனமாசம் சின்னப்பா பையன் வந்தான் அதுக்கும் முன்னால மாமா மகன் வந்தான்…இப்படி அடிக்கடி யாராவது வந்துபோறாங்க ஆனால் வருவாங்க சுத்தி பார்ப்பாங்க கிளம்பிடுவாங்க…இப்படி கேள்வி கேட்கமாட்டாங்க”…ன்னு சிரிச்சுக்கிட்டே சொன்னார்…
“டேய் அவனா நீ…தென்னமரம் மாதிரி இருக்கே அது என்னமரம்னு கேட்டது தப்பா…? நீயும் என்ன மாதிரிதானா”…? (அந்த புள்ளக்கிட்ட மாட்டிக்கிட்டு என்னப் பாடுபடுறியோ…பதிலைவச்சே கண்டு புடுச்சிடுவோம்ல).
“ஏம்ப்பா…நீ மலேசியா சிட்டிசன் தானே”…?ன்னேன்…
“அதுல என்ன சந்தேகம”;…?


லிட்டில் இந்தியா மார்க்கெட்


இல்ல ஒருதென்னமரத்தை பத்திக் கேட்டா பதில் சொல்லத் தெரியலைய்யே…ன்னே..?
நீங்க போறத்துக்குள்ள யாரிடமாவது விசாரித்து சொல்லிடுகிறேன்…?அதை விடுங்கன்னு…அப்படியே விட்டுட்டு வேற டாப்பிக் பேசிக்கொண்டே வேளைகளை முடித்துவிட்டு வீடு வந்தோம்…
பினாங்கில் பார்க்கவேண்டிய இடங்கள் என்னென்ன இருக்கிறது…எங்கு எப்படி எப்போது போவது என்று பெரிய திட்டமே தயார் ஆனது…10 நாட்கள் பத்தாது…குறைஞ்சது 1மாதமாவது தங்கி எல்லாவற்றையும் பார்க்கனும் …இல்லைன்னா அவசரம் அவசரமா பார்த்துட்டு அரக்குறைய போகிற மாதிரி இருக்கும்ன்னு அட்வைஸ் பண்ணினார்…
இங்கப்பாரு 10 நாள்ல என்ன பார்க்கனுமோ இதை ஒழுங்கா பார்த்தா போதுமன்னு சொன்னேன்…
சரி நாளைக்கி எங்கே போறோம்னு கேட்டேன்…
பினாங்கு ஹில் போறோம்னு சொன்னார் … அதனால… நாளை பினாங்கு ஹில்லில் சந்திப்போம்…!
தென்னமரம் என்ன மரம்ன்னு எப்படியாவது விசாரிச்சுடுறேன்…!

3 comments:

gulf-tamilan said...

நல்லா இருக்கு !!!

வந்தியத்தேவன் said...

பினாங்கு எனக்கு மிகவும் பிடித்த இடம் லங்காவி போனீர்களா?

சி தயாளன் said...

அருமை..:-)

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....