உங்கள் வருகைக்கு நன்றி...

Saturday, July 18, 2009

இலக்கிய நண்பர்களும் இனிய அறிமுகமும்

1.கீழைராசா 2.சந்திரசேகர் 3.அப்துல்வாஹித் 4.திருச்சிசையது


பழக்க
வழக்கம் என்பது நம்முடைய வாழ்க்கைக்கு மிக முக்கியமுன்னு நிறைய்ய பெரியவர்கள் சொல்லிருக்காங்க…நாம் யாரோட பழகுகிறோம் என்பது அவசியம். நமது அறிமுகம் தான் நட்பாக மாறுகிறது
சிலரிடம் பழகும் போது நம் மனதிற்கு சந்தோசமாக இருக்கும். காரணம் மனம் அவர்களை அங்கிகரிப்பது தான் . அதே தருணம் ஒத்தக் கருத்தை உடையவர்களின் நட்பு ஏற்பட்டுவிட்டால் அவர்களின் நட்பு மிக ஆழமானதாகிவிடும். நல்ல விசயங்களை ஒருவருக் கொருவர் பகிர்ந்துக் கொள்ள வாய்ப்பாக அமையும்.
அந்த வகையில் என்னுடைய அனுபவத்தை கொஞ்சமா சொல்லலாம்னு நினைக்கிறேன்.
சில வாரங்களுக்கு முன் எனக்கு அறிமுகமானவர்கள். கீழை ராசா அப்துல் வாஹித் திருச்சி சையது சந்திர சேகர் இவர்களுடைய அறிமுகம் வானலை வளrத்தமிழ் அமைப்பில் கிடைக்கப்பெற்றது
இவர்கள் அனைவருமே இலக்கிய சிந்தனைவாதிகள்.

கீழைராசா
இவர் இன்ஜினியர் சாருகேசி என்ற பெயரில் இணையத்தில் வலைப்பூ வைத்திருக்கின்றார். கதை கவிதை கட்டுரை எழுதுவதில் திறமை படைத்தவர்
என்று தான் எண்ணியிருந்தேன்… ஆனால் அவைகளையும் தான்டி இவர் நல்ல இயக்குனர் அத்துடன் நடிகர் இவர் நண்பர்களோடு சுற்றுலா சென்றதை “நான் பயந்திட்டேன்” என்ற தலைப்பில் ஒரு லப்டப் படத்தை காண்பித்தார் உண்மையிலேயே திரைப்படம் பார்த்த உணர்வு ஏற்பட்டது இவைகளோடு இவரிடம் மிகைத்திருப்பது நகைச்சுவை உணர்வு. இந்த உணர்வுத்தான் என்னை இவரிடம் ஈர்த்தது.
இவருடைய படைப்புகளை வலைப்பூவில் வாசித்தேன்.
சமுதாய சிந்தனையும் வழிகாட்டல் சிந்தனையும் சீர்திருத்தமும் இவரின் எழுத்துக்களில் மிகைத்திருக்கிறது. கீழைராசா கனமான உருவமாக இருந்தாலும்
பழகுவதற்கு மனமானவர்.

அப்துல்வாஹித்
இவர் அமீரகத்திற்கு புதுமுகம் ஆனால் பல இலக்கியவாதிகளுடனும் ஊடகத்துறையினருடனும் மற்றும் தொழிலதிபர்களுடனும் அறிமுகமானவர்.
பல பட்டிமன்ற மேடைகளை கலக்கியவர். இவர் பேசுவதெல்லாம் காமிடிபோலவே இருக்கும். இவரை பேசவிட்டு நாம் இவருக்கு முன் மௌனமாக இருக்க முடியாது. வயிறு வலிக்க சிரித்துக் கொண்டிருப்போம். இறைவன் இவருக்கு கொடுத்திருக்கும் கொடை இது.
கதை கவிதை கட்டுரை எழுதுவதில் வள்ளவர். சங்கமம் தொலைக் காட்சியில் அடிக்கடி கலக்கிக் கொண்டிருப்பார்.
இவர் நெட்ஒர்க் படித்தவராக இருந்தாலும் பல உள்ளங்களுக்கு சர்வராக இருக்கிறார் நகைச்சுவையில்.

திருச்சிசையது
சிறுவயதிலிருந்தே எழுத்தார்வமிக்கவர் கல்லூரி வாழ்க்கையில் நண்பர்களுடன் இணைந்து சிறுகதை வானில் சிறுகதை நிழலில் அன்பைத்தேடி போன்றநூல்களை வெளியிட்டவர்.
நிழ்ச்சிகளை தொகுத்து வழங்கக் கூடிய ஆற்றலுடையவர் இவருடைய தனிசிறப்பு சிறுகதை எழுதுவதே.
முன்னால் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்களிடமும் மற்றும் தினத்தந்தி ஆசிரியர் வைரமுத்து பட்டுக்கோட்டை பிரபாகர் மற்றும் ஜின்னாஷரிபுத்தீன் போன்ற பெரியவர்களிடம்
தனது எழுத்திற்கு அங்கீகரம் பெற்றவர்.
கவிஞர்கள் கவிதை எழுதி அதை கரைசேர்க்க களம்தேடுவார்கள் ஆனால் இவர் எழுதும் கவிதைகள் கட்டிய மனைவிக்கும் பெற்றபிள்ளைகளுக்கும் மட்டு;மே . வலைப்பூ அமைத்து தன் மனைவிக்கு கவிப்பூ சூட்டிக் கொண்டிருப்பவர் இன்று வரை இவரின் இல்வாழ்க்கை புதுமண தம்பதிகளாய் மலர்ந்துக் கொண்டிருக்கிறது. ஆம் இவரின் பொறுமையான குணமும் அடக்கமும் அமைதியும் பிறரிடம் பணிவும் இவரின் சிறப்பு அம்சங்கள்.
பழகுகின்றவரிடம் உண்மையாக பழகக்கூடியவர்.


சந்திரசேகர்
இவர் இன்ஜினியர் புரஜக்ட் மேனேஜராக அமீரகத்தில் பணிபுரிந்து வருகிறார்
வானலை வளர்த் தமிழ் அமைப்பில் பொருப்பாளராக இருக்கின்றார்.
சங்கமம் தொலைக்காட்சியில் திருக்குறள் விரிவுரை நிகழ்த்தக்கூடியவர். கவிதை எழுதுவதில் ஆர்வமிக்கவர். பலகவிதைகள் எழுதியுள்ளார்.
பழகுவதற்கு இனிமையாளர் நல்ல மனிதர்.

இவர்களை எனது இலக்கிய நண்பர்களாக பெற்றதில் மகிழ்கின்றேன்…
பூவோடு சேர்ந்து நாறும் மணப்பது போல் நானும் மணக்கலாம் தானே…!


இது தொடரும்..............

2 comments:

கீழை ராஸா said...

"பழகலாம் வாங்க" என்று அழைக்கும் போதே அதன் "உள் குத்தலை" யோசித்திருக்கவேண்டும்.ஏன் இந்த கொலை வெறி இஸ்மத் பாய்...?

அப்புறம் டெம்ப்ளேட் கலக்கலா இருக்கு...

கிளியனூர் இஸ்மத் said...

வாங்க ராசா....வாங்க.... கலக்குதுன்னா சும்மாவா....கீழையுடன் கிளி சேந்திருச்சுல்ல இனி கலக்கல் தான்...

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....