உங்கள் வருகைக்கு நன்றி...

Monday, August 17, 2009

மனம் கவர்ந்த மலேசியா....14

உங்களோடு உறையாடுவது மலேசியா லங்காவியைப் பற்றி…
நடந்தோம் ஒடினோம் மேகத்தோடு கலந்தோம். பனியில் நனைந்த மலரைப்போல்
நனைந்தோம். சந்தோச அலையில் பறந்தோம்…
கீழே இறங்க மனமில்லாமல் இறங்கித்தான் ஆகவேண்டும் என்ற சூழ்நிலையில் இறங்கினோம். நாங்கள் கீழே இறங்கினாலும் எங்கள் மனதைவிட்டு ஸ்கைபிரிஜூம் அதை சுற்றியுள்ள இயற்கை சூழலும் இறங்கவில்லை.
இந்த ஸ்கைபிரிஜ்க்கு நம்ம ஆளுங்க அஜித் பிரிஜ்ன்னு பேரு வச்சிருக்காங்கன்னு நம்ம பதிவர் வந்தியத் தேவன் சொன்னாரு…

போகின்ற வழியில் பாம்பை பார்க்க … மலைப்பாம்பு … மஞ்சல் நிறத்தில் கழுத்தில் போட்டு போட்டோ எடுக்க பத்து ரிங்கெட் என்றார்கள். சரின்னு கழுத்தில் இரண்டு பாம்பை போட்டேன் அது என்னான்னா நாக்கால என் விரலை நக்க ஆரம்பித்தது. எனக்கு பயம் வந்துடுச்சி போட்டோவுக்கு போஸ் கொடுத்த எனது குடும்பம் பாம்பு நக்குதுன்னு சொன்னதுமே என்னை தனியே விட்டுட்டு தூரமா ஒடிப் போயிட்டாங்க… நான் கத்த அதுக்குள்ள போட்டோ கிளிக் செய்ய பாம்பை என்னிடமிருந்து வாங்கிட்டாங்க. ஏதோ தைரியமா பாம்பை தோளில் போட்டு போஸ் கொடுப்பதா நினைக்காதிங்க அதுக்கு பின்னாடி இவ்ளோ கதையிருக்கு.


அங்கிருந்து புறப்பட்டு முதலைப் பண்ணை சென்றோம்.
நாங்கள் செல்வதற்கு முன்பாகவே முதலை ஸோ முடிந்து விட்டது… உறங்கிக் கொண்டிருந்த முதலைகளை தட்டி எழுப்பி பார்த்தோம்… ம்கூம் அசைவதாக இல்லை. ஆனால் குழந்தை முதலை முதல் தாத்தா முதலைவரை அங்கு பார்த்தோம்.
கூட்டம் கூட்டமாக அடைத்துவைத்திருக்கிறார்கள். ஒருமணி நேரம் அவைகளோடு உரையாடி விட்டு புறப்பட்டோம்.

சாப்பிங் போகலாம்னு சொன்னாங்க … புறப்பட்டோம் போகின்ற வழியில் பீச் -சை காண்பித்தார் இதில் தான் ஹிந்தி தமிழ் தெலுங்கு இப்படி நிறைய படங்களின் சூட்டிங் நடைபெறுகிறது என்றார்.

மதியம் 3 மணியைத் தாண்டியது . வயிறு பொலம்ப ஆரம்பிச்சது… வேன் டைவரிடம் சொன்னேன்… நல்ல உணவகமா பாருங்கள் சாப்பிடலாம்னு…
சொன்னமாதிரியே நம்ம ராவுத்தர் கடையில நிறுத்தினாரு. இருந்த பசிக்கு கிச்சனில் உள்ள எல்லாத்தையும் சாப்பிடலாம்னு தோனுச்சி அந்த மாதிரியெல்லாம் சாப்பிட முடியுமா என்ன…?

துபாய் உணவகத்துல பாரிக் செட் ஆர்டர் பண்ணிட்டு ஒரு ரவுண்டு முடிஞ்சு அடுத்த ரவுண்டு சாம்பார் ஊத்திட்டு மூனாவது ரவுண்டு ரசம் ஊத்திட்டு நாலாவது ரவுண்டு மோர் கேட்கும் போது தொண்டை முட்டும் டேங் புள்ளாயி அப்பாடான்னு எழுந்திருச்சி கையகலுவி காசு கொடுக்கும் போது எவ்வளவுன்னு கேட்டு ஐந்து திரஹம் கொடுத்துட்டு வருவோமே அது மாதிரி இங்க முடியலைங்க. ஒரு தட்டையில சோத்தை வைத்து அதிலேயே நாம கேக்கிற ஐட்டத்தையும் வச்சு கொடுத்துடுறாங்க மறு சாப்பாட்டு கேட்டா அதுக்கு தனியா காசு கொடுக்கனும். கொடுத்தேன். நீங்க நல்லாருக்கனும் சாமின்னு துபாய் உணவகங்களை வாழ்த்தினேன். நிழலோட அருமை வெயில்ல போகிறவனுக்கு தெரிஞ்சா மாதிரி…!
சாப்பிங் போனோம்…பெரிய பெரிய கொடோன் மாதிரி பெருசு பெருசா கடைகள்… வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கினோம். துபாயில் கிடைக்காத சில ….கிடைக்ககூடிய பொருட்களில் சில… (விலை குறைவு என்பதால்) வாங்கினோம்.
மிலாமின் தட்டை பல வண்ணத்தில் கண்ணை கவரும் விதத்தில் மனதைக் கவரும் விலையில் கிடைத்தது. துபாயில் 7 திரஹத்திற்கு விற்கக்கூடிய ஒரு மிலாமின் தட்டை அங்கு 3திரஹத்திற்கு கிடைக்கிறது.

இப்படி பல பொருட்கள் வாங்கினோம். அத்தோடு கருவாடு… ம்… அதுவும் நெத்திலி கருவாடு… அதிலேயே மூனு விதமாய் வைத்திருக்கிறார்கள்.
அந்த மாதிரி கருவாடு அங்க மட்டும்தான் கிடைக்குமாம்…கருவாடு பிரியர்களுக்கு மலேசியா போனிங்கன்னா மறக்காம ஒரு கிலோவாவது நெத்திலி கருவாடு வாங்கிடுங்க… நல்ல ருசிங்க… தர்க்கு தர்க்குன்னு. சைவ பிரியர்களுக்கு சாரிங்க …
வாங்க வேண்டிய பொருட்களை வாங்கி மூட்டையா கட்டி தூக்கிக்கிட்டு நடந்தோம். இன்னும் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய இருந்தாலும் பேரியை மிஸ்பண்ணிட கூடாதுன்னு சீக்கிரமாவே கிளம்பக் கூடிய கட்டாயம் .மன்னர் மஹாதிருடைய மியூசியம் பார்க்க முடியலையேங்கிற வருத்தத்துடன் வந்தேன்.
லங்காவியை பொருத்தவரையில் குறைந்தது ஒரு நாலு நாட்கள் இங்கு தங்கி சுற்றி பார்க்கனுமுங்க… அப்பத்தான் எல்லாத்தையும் முழுசா பார்க்கலாம்.
கால்ல வெண்ணிரை ஊத்திகிட்டவன் பறக்கின்ற மாதிரி பறந்தா எதையும் முழுசா பார்க்க முடியாது. என் கதை அதுதாங்க…

கஸ்டம்ஸ் வந்தோம் டூட்டி ஆபிஸர் எங்களை மடக்கினார். விசாரணை சாமான்களை திறந்து காண்பிக்க உத்தரவிட்டார். திறந்து காண்பித்தேன். எல்லாத்தையும் பார்திட்டு இதெல்லாம் மலேசியாவற்கா எடுத்துச் செல்கிறீர்கள் என்று கேட்க இல்லை சார்… நாங்க துபாயிலேந்து வந்திருக்கோம். எங்களுடைய சொந்த உபயோகத்திற்காக வாங்கிப் போறோம்னு சொன்னேன்.
ஏன் இதுவெல்லாம் துபாயில கிடைக்காதா ன்னு கேட்க கிடைக்கும் ஆனால் மலேசியா வந்த ஞாபகத்திற்காக வாங்கிப்போறோம்னு சொன்னதும் … இதுக்கு மேல ஏதாவது கேட்டால் இவன் அழுதுடுவான்னு அவர் நினைச்சிறுக்கனும் சரி போன்னு விட்டுட்டார். ஏதோ கடத்தல் பொருளை பதுக்கி வச்சி மாட்டிக்காமல் எடுத்து வந்ததை போல ஒரு உணர்வு ஏற்பட்டது.
ஏழு மணிக்கு கிளம்ப வேண்டிய பேரீ அரைமணிநேரம் தாமதமா புறப்பட்டது. அதுபோற வேகத்தை பார்த்தால் புதியவர்களுக்கு பயம் தான்…ஏதாவது சின்ன அசம்பாவிதம் ஏற்பட்டாலும் சங்குதான்.
இரவு 10 மணிக்கு பேரியிலிருந்து இறங்கி காருக்கு தாவி பினாங்கை நோக்கி … போற வழியில் இரவு உணவை உண்டு நல்லிரவு 12 மணிக்கு பின்தான் வீடு வந்தோம். உறங்குவதற்கு முன்னால மைத்துனர் சொன்னார் காலை ஐந்து மணிக்கெல்லாம் கேமரான் மலைக்கு போகனும் அசந்திடவேண்டாம்னு சொல்ல அவர் சொல்லும் போதே அசதி அழைப்புக் கொடுக்க … படுத்தது தான் தெரியும் உறங்கிப்போனோம்.
நல்ல தூக்கம்னு தூங்குன நான்விழிச்சதுனால சொல்லமுடிஞ்சதுங்க…!
அடுத்து கேமரான் மலையில் சந்திப்போம்…!

No comments:

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....