உங்கள் வருகைக்கு நன்றி...

Saturday, August 1, 2009

மனம் கவர்ந்த மலேசியா...9

காலையில் எனது சுட்டிகள் நீச்சல் குளத்தில் குளிப்பதற்கு தயாரானார்கள்…
அவர்களை அழைத்துக்கொண்டு நானும் இறங்கினேன்…
ரொம்பவும் தூய்மையாக இருந்தது. நாங்கள் தங்கிருந்த அந்த கட்டிடத்திற்கு நல்ல பாதுகாப்பும் கொடுத்திருந்தார்கள்…வெளியிலிருந்து யார் வந்தாலும் அவர்கள் யார் எந்த வீட்டுக்கு வருகிறார்கள் போன்ற விபரங்களை கேட்டே அனுமதிக்கிறார்கள் செக்யூரிட்டிகள்…
பெரும்பாலோர் சொந்த வீட்டில் அல்லது பிளாட்டில் தான் வசிக்கிறார்கள். ஒரு லட்சம் ரிங்கிட்டிற்கு இரண்டு அறை கொண்ட பிளாட் விலைக்கு கிடைக்கிறது…வாடகையாக இருந்தால் 500 ரிங்கிட்டுக்கு 3 பெட்ரூம் பிளாட் கிடைக்கிறது.
இதே துபாயில் 200 சதுரஅடி கொண்ட ஸ்டுடியோ பிளாட் பாத்ரூம் மட்டும் தனி இதற்கு ஆண்டுக்கான வாடகையே நாற்பதுஆயிரம் திரஹம்-ரிங்கிட் வசூலிக்கிறார்கள்…அந்த 200 சதுரஅடி பிளாட் மலேசியாவில் 40000 ரிங்கிட்டிற்கு நாம் சொந்தமாக வாங்கியே விடலாம்.
மலேசியாவை பொருத்தவரையில் உணவு தங்குமிடம் மருத்துவம் இவைகளுக்காண சிலவுகள் மிகக்குறைவு…சிங்கப்பூரை இதோடு ஒத்துப் பார்த்தோமேயானால் மலேசியாவுக்கு தான் என் ஒட்டு…
அதேபோல் சம்பளமும் குறைவு என்கிறார்கள்…அது வேலையைப் பொருத்து இருக்கிறது…பெரும்பாலும் இந்தோனேசியா தாய்லாந்து இந்தியா பங்கலாதேஷ் போன்ற நாட்டினர்கள் அதிகமாக வேலைப்பார்க்கிறார்கள்…சம்பளம் குறைவுக்கு இதுவும் ஓரு காரணம்…!



மதியம் பினாங்ஹில் போவதற்கு கிளம்பினோம்…கைடு என் மைத்துனர்தான். அவர் கைடாக மட்டும் வரவில்லை பைனான்சியல் மினிஸ்டராகவே இருந்தாரு. (இப்படி சொன்னாத்தான் இன்னும் நல்லா எனக்கு சிலவு செய்வார்னு…யாரோ சொல்றீங்க) ஒவ்வொரு இடத்திலும் நுழைவுச்சீட்டு பெறுவதற்கு கட்டணம் செலுத்துவதில எனக்கும் அவருக்கும் போட்டியாகவே இருந்தது. தங்குவது தான் ஒசின்னா சுத்திபார்ப்பதிலும் ஒசியான்னு நீங்க கேட்டுடாதிங்க…விடமாட்டேங்குறான்…என் மனைவிக்கு ரொம்ப வருத்தம் என் தம்பி காசிலேயே ஊரை சுத்திறீங்களேன்னு…
சரி…சரி…துபாய் வரும்போது நாம கவனிப்போன்னு ஆறுதலா என் மனைவிகிட்ட ஒரு வார்த்தைக்காக சொன்னே…உடனே ஆமா மச்சான்…அடுத்த வருடம் துபாய் வருவதற்கு புரோகிராம் போட்டிருக்கோம்னு சொன்னாரு…என் மனைவிக்கு ரொம்ப சந்தோசம்…அப்ப எனக்கு…?
பினாங்ஹில் இரயில்வே ஸ்டேசனில் ஒரளவு கூட்டம் இருந்தது…பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நின்றுக் கொண்டிருந்தார்கள் இதில் வளைகுடாவிலிருந்து அரபியர்களின் குடும்பங்கள்; அதிகம். அவர்கள் பினாங்கில்
வீடு வாடகைக்கு எடுத்து இரண்டு மாதம் வரை தங்குவார்களாம்…அவர்கள் தங்கியிருக்கக்கூடிய பகுதியில் விலைகள் கொஞ்சம் அதிகம்…ம்…இருக்காதாபின்னே…பெட்ரோல் காசாச்சே…அதை கரைக்கினுமுல்ல…!


பினாங்கு ஹில் ரெயிலின் அழகு என்னன்னா…ரோடு செங்குத்தாக இருக்கிறது மெதுவாக தான் ஏறுகிறது…இது கீழிருந்து மேலே ஏறும் போது மேலிருந்து கீழே வருவதற்கு அங்கிருந்து ஒரு இரயில் புறப்படுகிறது…ஒன்வே ரோடு தான் …குறிப்பிட்ட தூரத்தில் இரண்டுடேக் இருக்கிறது…இந்த இரண்டு இரயில்களும் சரியான நேரத்தில் அந்த கிராசிங்கை அடையனும்…அப்படித்தான் அடைகிறது…இதில் சின்ன மாற்றம் ஏற்பட்டாலும் விபத்துதான் முடிவாக இருக்கும்.
இந்த இரயில் ஒரு 500 மீட்டர் தூரத்திற்கு செல்கிறது…அதன் பிறகு இங்கு இன்னொரு இரயிலுக்கு நாம் மாறனும்…அதுவும் இதே பார்முலாதான்… இந்த மலையின் உச்சிக்கு சென்றால் குளிர்ருகிறது…முழு பினாங்கு நகரத்தையே நம்மால் பார்க்க முடிகிறது…
அதன் உள்ளே…பறவைகள் பூங்கா இருக்கிறது…கடைகளும் இருக்கிறது…
அதுமட்டுமல்ல…அந்த மலையின் மேல் பள்ளிவாசலும் கோவிலும் மாதாகோவிலும் இருக்கிறது…இதைப் பார்த்ததும் சமய நல்லிணக்க ஒற்றுமையை ஓங்கச் செய்துள்ளதாக தோன்றியது…கோயில்களில் பஜனையும் பள்ளிவாசலில் தொழுகையும் தேவாலயத்தில் பிரார்த்தனையும் நடந்துக் கொண்டிருந்தது…


அங்கு வரக்கூடிய மனிதர்கள் அவரவர்களுக்கு எதுதேவையோ அதை எடுத்துக்கொள்கிறார்கள்…இந்த சூழல் என்மனதை மிகவும் கவர்ந்தது…
என் மைத்துனரின் பையனும் என்குழந்தைகளும் நன்றாக விளையாடினார்கள்…பல வண்ணங்களில் அடைக்கப்பட்டிருந்த பறவைகளுக்கு இந்த குழந்தைகள் அவர்கள் சாப்பிட்ட சிப்சை பறிமாறினார்கள் அந்த பறவைகளும் அதை வாங்கி கொறித்தது அந்த காட்சியைப் பார்த்து நாங்கள் ரசித்தோம்…
சிலமணி நேரங்களை சிலவு செய்து விட்டு கீழே இறங்கினோம்…துரியான் பழத்தின் மரத்தை இரயிலில் வரும்போது பார்த்தோம்ங்க…அதுல துணிகட்டி வச்சுருக்காங்க…அந்த பழத்தில் முட்கள் அதிகம்…அது விழும்போது யார் தலையிலாவது விழுந்தால் அவ்வளவுதான் மியூசிக் வாசிச்சிடுவாங்களாம்…
காட்டுப்பக்கம் போறவங்க கவனமா போங்ககண்ணு…
பினாங்குக்கு இன்னொரு பேரு இருக்குன்னு மைத்துனர் சொன்னாரு… என்னப்பேருன்னே…? … என்னப் பார்த்து சிரித்தார்… அந்த சிரிப்பிலேயே தெரிஞ்சுடுச்சு… அவருக்கு தெரியாதுன்னு…
நான் உன்னுகிட்ட இனிமே எதையும் கேட்கமாட்டேன்… நானாகவே தெரிஞ்சுக்கிறேன்…ன்னே…
ஏன் இவ்வளவு விரக்கதியாயிட்டீங்க…?ன்னாரு


பின்னே என்னப்பா… தென்னமரம் என்னமரம்னு இதுவரைக்கும் சொல்லலையே…ன்னே…!
ஆரம்பிச்சுட்டாரப்பா…?ன்னு என் மனைவிபக்கம் அவன்பார்க்க…
ஏங்க… தென்னமரம் என்னமரம்னு தெரிஞ்சு…இப்ப என்ன கோடிஸ்வரன் நிகழ்ச்சியில் கலந்துக்க போறீங்களா?அவனை கேள்விமேல கேள்வி கேக்குறீங்க… ன்னாங்க.
எங்க… கோடிஸ்வரன் நிகழ்ச்சில கலந்து கோடிய வாங்கிபுடுவேன்னு உங்களுக் கெல்லாம் பொறாமை…?.ன்னு நான் தனியா பொலம்பிக்கொண்டே நடந்தேன்…
இவரு இப்படி தான் நீ கண்டுக்காத தம்பின்னு என் மனைவி மைத்துனர் இடம் சொல்ல…
எப்படிக்கா….துபாயில வச்சு சமாளிக்கிறே… தாங்க முடியலேயே…ன்னு வந்து ரெண்டே நாள்ல புரிஞ்சுக்கிட்டான்…
கூட்டு சேர்ந்துட்டாங்கடா…இனி ஞாக்கிரதையா இருக்கனும்…!

கேள்வி எண்.1. தென்னமரம் என்ன மரம்…?
கேள்வி எண்.2.பினாங்கின் மற்றொரு பெயர் என்ன…?
எழுதி வைச்சுகிட்டேன்… பதிலை கண்டுபிடிச்சுடுவேனில்ல…!

7 comments:

சுப.நற்குணன்,மலேசியா. said...

எங்கள் மலேசியாவுக்கு வந்த பயண அனுபவத்தை நன்கு தொகுத்துள்ளீர்கள். மகிழ்ச்சி.

பினாங்கு என்பது 'பாக்கு' என்ற தமிழ்ச்சொல்லின் மலாய் பெயர்ப்பு. ஒரு காலத்தில் இங்கு பாக்கு அதிகமாக இருந்ததால் 'புலாவ் பினாங்' அதாவது பாக்குத் தீவு என்றார்கள். அதே பெயர் இன்றும் நிலைத்துள்ளது.

தொடர்ந்து எழுதுக!

மலர்வனம் said...

இனிய தோழரே!


உங்க மச்சினன்; வாயிலே சர்க்கரையைத்தான் போடணும்!


‘இவரு இப்படித்தான் தம்பி… கண்டுக்காதே’

உங்க மனைவி உண்மை மட்டும் பேசுவாங்கன்னு நெனக்கிறேன்.



சிநேகத்துடன்…

திருச்சி சையது

தமிழ். சரவணன் said...

தங்கள் சுற்றுலாப்பயணத்தைப்படித்தென் மிகவும் அருமையாண கட்டுரை.... வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்கள் எழுத்து

அன்புடன்,
தமிழ். சரவணன்

RV said...

You are 100% right.. Malaysia is a wonderful place... I stayed there for 12 years and I enjoyed the place very well.. still I feel for it after leaving the place recently...

Usha said...

Malaysia is nice country ...welcome to malaysia

Mohamed Farvees said...

super

Mohamed Farvees said...

very nyc dad....

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....