உங்கள் வருகைக்கு நன்றி...

Saturday, August 29, 2009

ஷார்ஜாவில் அமீரகப் பதிவர்களின் இப்தார் நிகழ்ச்சி

பதிவர்களின் இப்தார் நிகழ்ச்சி ஷார்ஜாவில் அண்ணாச்சி (ஆசிப்மீரான்) வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இப்தார் (நோன்பு திறக்கும்) நேரம் மாலை 6.45 மணிக்கு. ஆனால் 4மணிக்கே கீழைராஸா கிளம்பனும்னாரு… நான் அவசரமா கிளம்பினேன். என் கை வண்ணத்தில் செய்த கலவை காய்கறிகள் (சேலட்) தூக்கிக் கொண்டு கிளம்பினோம்.
போகின்ற வழியில் ஹரீஸ் (கறிக்களி) அரபிகளின் விஷேச உணவு…வாங்கிக் கொண்டு முக்கியமான ஐட்டம் பிரியாணி, நோன்பு கஞ்சி , சம்புசா இவைகளுடன் வாஹித், சிம்மபாரதி ராஜாகமால் (நாசர்), கீழைகீர்போட அதில் நானும் அமர்ந்து கிளம்பினோம்.
போற வழியில ஒரே புலம்பல்…
என்னான்னே…
கட்லெட் கிடைக்கலயாம்…
எதையும் முறையாக செய்யனும்னு கீழைராஸா ஒரு கொள்கை வச்சிருக்காரு…அந்த கொள்கைக்கு மாற்றமா எது நடந்தாலும் ஆளு பரதநாட்டியம்தான்.

கோகில் மேப்பை கையில் வைத்துக்கொண்டு ஷார்ஜாவிற்கு வாஹித் வழித்தேட கீழை சொன்னாரு …
கோகில்மேப்பை பார்த்தா உமக்கு என்னாத் தெரியும் வழிச்சொல்ற மெயிலை படிய்யான்னாரு… மடி நிறைய சாமான்களோடு திணரிக்கொண்டிருந்த வாஹித்து அடுத்த தாளை சிரமத்தோடு எடுத்து கீழைக்கிட்ட காண்பிக்க …
இது கொஞ்சம் ஒவரயில்ல … நான்தான் காரு ஓட்டுறேனில்ல படிச்சு சொல்லுப்பா…! என்றதும்
வாஹித் பட்டிமன்ற தோரணையில் வாசிக்க ஆரம்பித்தார்…
போதும் நிறுத்துன்னாரு…
யான்… வாஹித் கேட்க…
பட்டிமன்ற டயலாக்கெல்லாம் வேணாம்னு அந்த தாளை பிடிங்கி சிம்மபாரதிக்கிட்ட கொடுக்கப்பட்டதும்…
அவர் ஒருமாதிரியா உருமிக்கிட்டே படிச்சு இடத்தை கண்டுப்பிடிச்சு காரையும் சரியான இடத்தில் நிறுத்தி ஆளுக்கொரு சாமான்கள் என்று கணக்குபோட்டு கையில எடுத்து போய் சேர்ந்தோம்.

அண்ணாச்சி வாசல்லயே காத்து நின்னாரு
அட…இன்னா பாசம்டா மனுசனுக்கு வாசல்லயே நிக்கிறாரேன்னு நினைச்சேன்.
பிரியாணி, நோன்பு கஞ்சியெல்லாம் வந்துச்சான்னாரு…
அப்பத்தான் எனக்கு பாசம் புரிஞ்சது.
கத்திரிக்காய் பச்சடின்னா அண்ணாச்சிக்கு ரொம்ப பிடிக்குமாம்…
கையில அல்வாவை வைத்துக் கொண்டு இது என்ன அல்வாவான்னாரு… அல்வாவை அல்வான்னு சொல்வது பெரிய விசயமா…?
நான் சொன்னேன் இது கத்தரிக்கா பச்சடின்னு…
அண்ணாச்சிக்கு சந்தேகம்… முகந்துவேற பார்த்து இது அல்வாதான்னு முடிவுக்கு வந்தாரு…
அண்ணாச்சி வீடு பெருசு அவரு மனசு மாதிரிதான் இருந்துச்சு…
நோன்பு கஞ்சியை நான் ஊற்றிக் கொண்டிருக்கும்போது ஜெசிலா வந்தாங்க… அடுக்கலையில் என்னைப் பார்த்து விட்டு … எழுந்திறிங்கண்ணா நான் செய்யிறேன்னு சொன்னதும்
இல்லமா… நானே செய்யிறேன்னு சொன்னதும் அவங்க பழங்கள் நறுக்க சென்றுவிட்டார்கள்.
ஆனா அண்ணாச்சி மட்டும் என்மேல ரொம்ப பாசமா இருந்தாரு …

சூட்டுல நின்னு ஏன் கஸ்டப்படுறீங்க … ஹாலில் ஏஸியில் வைத்து செய்யுங்களேன் என்றார்.(இதுல உள்குத்து ஏதும் இருக்குமான்னு தெரியல)
கீழைராஸா மட்டும் சரியா ஒவ்வொன்னையும் புகைப்படம் எடுத்துக்கிட்டு நின்னாரு…ஒரு சின்ன வித்தியாசம். சென்ற பதிவர் கூட்டத்தில் அமைதியாக அமர்ந்திருந்த கீழை…இங்கே அமைதியிழந்திருந்தாரு.
ஒவ்வொருவராக வந்து சேர்ந்தார்கள்…

முதல்ல இப்தாரை முடிச்சுக்குவோம்…அப்புறம் அறிமுகம்…
6.45க்கு வந்தவங்க எல்லாரும் நோம்பு வைத்தவர்களுடன் கலந்து நோன்பு திறப்பு…சுறுசுறுப்பாக நடந்தது.
பின் அங்கேயே மஹரிப் தொழுகை நடத்தப்பட்டது… தொழுகைக்கு பின் அனைவரும் வட்டமாக அமர…

நடுமத்தியில் அண்ணாச்சி அமர்ந்து ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்து வைத்தார்.
சென்ற பதிவர் நிகழ்ச்சிக்கு வராத சிலர் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள்.
அதில் நண்பன் மற்றும் முத்துக்குமரன் ராஜாகமால் மற்றபடி எல்லோரும் பழைய முகம்தான்னு நினைக்கிறேன்.
இந்த நிகழ்ச்சியில் பெண்பதிவர்களும் கலந்துக் கொண்டார்கள்.ஜெசிலா....படகு...

ராஜாகமாலின் பூத்து மகிழும் பூக்கள் - என்ற கவிதை நூல் அங்கு வெளியிடப்பட்டது.
முதல் பிரதியை நண்பன் பெற அதைத் தொடர்ந்து அண்ணாச்சி சுல்தான் பாய் ஜெசிலா அவ்வளவுதான்...!

அறிமுகமும் நூல் வெளியிடும் முடிந்ததும் சிங்கை நாதனுக்கு உதவி செய்த அத்தனை உள்ளங்களையும் நன்றி பாராட்டினார்…
ஜெகபர் என்ற முகம்தெரியாத நபர் அண்ணாச்சி வங்கி கணக்கில் 2000 திரஹம் செலுத்தியிருந்தது நெகிழ்வை தந்தது . மெயில் வந்த செய்தியை மட்டும் படித்துவிட்டு உதவி செய்த அந்த மனிதர் உண்மையில் மாமனிதர்தான்.
ஏதோ ஒரு நாட்டில் வாழ்கின்ற ஒரு பதிவருக்கு உயிர் பிரச்சனை என்றதும் கூடுமானவரை பல பதிவர்கள் அந்த உயிருக்கு உயிர்கொடுக்க எழுந்தருளி நின்றார்களே நிற்கின்றார்களே… அவர்களை எந்த வார்த்தையாலும் வாழ்த்த முடியாது… பதிவர்களில் மனிதர்களை பார்க்க முடிகிறது…
முழு முயற்சி எடுத்து தொகைகளை வசூல் செய்து அனுப்பி அவ்வபோது சிங்கை நாதனின் தகவலை எத்திவைத்துக் கொண்டிருக்கும் அண்ணாச்சி அவர்களுக்கு அமீரக பதிவர்கள் சார்பாக பாராட்டும் நன்றியும் சமர்பிக்கின்றோம்.

சினிமா உரையாடலை பலரும் ஆரம்பிக்க பலவிதமான விமர்சனங்கள் காரம் சாரமாக நடைப்பெற்றது. இது ஒரு ஒன்றுக்கூடல் நிகழ்ச்சி என்றாலும் இன்னும் நாம் கல்யாண வீட்டு விருந்தினராகத்தானிருக்கிறோம்.
இன்னும் எவ்வளோ விசயங்கள் எவ்வளவோ கருத்துக்கள் கலத்திற்குள் வராமலேயே காத்திருக்கிறது…!

அண்ணாச்சி வீட்டு புத்தக அலமாரி மீது ஒரு கண்ணு... இந்த தபா தப்பிசுடுச்சு... அடத்ததபா....ம்...சொல்லுற பழக்கம் நம்மகிட்ட கிடையாதுங்க...

இப்தாரில் கலந்துக் கொள்ள பெயர் தெரிவித்தவர்கள்.
1)ஆசிப் மீரான்
2)ராசாகான்
3) செந்தில்வேலன்
4)முத்துகுமரன்
5)நாஞ்சில் பிரதாப்
6)கலையரசன்
7)கிளியனூர் இஸ்மத்
8)சரவணன்
9)சுபைர்
10)ஆசாத்
11)சுல்தான்
12)ஆதவன்
13)கோபி
14)சென்ஷி
15)லியோ
16) ராஜாகமால் (நாசர் )
17)நரசிம்மராசா (சிம்மபாரதி)
18)அப்துல் வாஹித
19) ராட் மாதவ்
20) தினேஷ்
21)ஜெசிலா+ ரியாஸ்
23)நௌஃபல் + ஜஸீலா
25) சஃபீனா + பாபு
26) கார்த்திகேயன்
27) நண்பன் ஷாஜி
28) சுந்தர் குடும்பத்துடன்
29)சிவராமன்
30)சுரேஷ்
ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் கலந்துக் கொண்டார்கள்.

இந்த பதிவர் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி முடிக்க பெரிதும் பாடுபட்ட கிழக்கில் உதித்தலும் சூரியன் சூரியன்தான் கீழக்கரையில் உருவானாலும் கீழைராஸா ராஸாதான்…(ரொம்ப வச்சுட்டேனோ) அவரின் ஏற்பாட்டில் மிக சிறப்பாக இந்த நிகழ்வு நடந்தேறியது…

23 comments:

ஆயில்யன் said...

அமீரகத்தில் இருந்திருந்தால் இனிய மகிழ்ச்சியளிக்கும் ஒரு அனுபவமாக இருந்திருக்கும் என்று எண்ண வைத்தது !

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அழகா தொகுத்திட்டீங்க இஃப்தார் விருந்தை!!

விருந்திற்கு ஏற்பாடு செய்த அன்பர்களுக்கும், கலந்து கொண்டு சிறப்பித்த அன்பர்களுக்கும் நன்றி! மறக்க முடியாத மாலைப் பொழுதாக அமைந்தது.

Unknown said...

அனைவரையும் ஒன்றாய் சேர்ந்து பார்ப்பது அழகாக இருக்கு.
இப்தார் நிகழ்ச்சி அடுத்த வாரம் யாரு வீட்டில்?

கிளியனூர் இஸ்மத் said...

அக்கா ...நீங்க அழைச்சிகன்னா...நாங்க வர ரெடி....!

Unknown said...

கலந்துக்கொள்ள முடியவில்லையே என்ற வருத்தம் தான்.

Unknown said...

சென்னையில் நீங்கள் இருந்தால் கட்டாயம் நம்ம வீட்டில் தான்..

கிளியனூர் இஸ்மத் said...

தூரம் அதிகமில்லை....உங்க நல்ல மனசுக்கு வாழ்த்துக்கள்...

Jazeela said...

இரண்டாம் முறையாக இஃப்தார் கலந்துக் கொண்ட நிறைவு. நல்ல பதிவு.

கலையரசன் said...

இஃப்தார் நிகழ்ச்சியை கண்முன்னே கொண்டுவரும் நிறைவான பதிவு...

//கீழைராஸா ஒரு கொள்கை வச்சிருக்காரு…அந்த கொள்கைக்கு மாற்றமா எது நடந்தாலும் ஆளு பரதநாட்டியம்தான்.//

'ஆனந்த தாண்டவம்' ஆடுவாரா? இல்ல...'ருத்ர தாண்டவம்' ஆடுவாரா?
ஏன்பா... அவருக்கு டென்ஷனை கூட்டி துபாய்ல நிலநடுக்கம் கொண்டு வர பாக்குறீங்க?

துபாய் ராஜா said...

அண்ணாச்சி,விருந்தை அழகாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள்.தற்சமயம் அமீரகத்தில் இல்லாதது வருத்தம்தான் என்றாலும் விருந்து சிறப்பாக நடந்தது குறித்து பெரு மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.

வெற்றி-[க்]-கதிரவன் said...

வைரமுத்து எல்லாம் வந்துகிராறு -:)))))))))

கோபிநாத் said...

\எதையும் முறையாக செய்யனும்னு கீழைராஸா ஒரு கொள்கை வச்சிருக்காரு…அந்த கொள்கைக்கு மாற்றமா எது நடந்தாலும் ஆளு பரதநாட்டியம்தான்.\\

ஒஒ..நாங்க வரும் போது ஆடிக்கிட்டு இருந்தாரே அதுதான் பரதநாட்டியமா!!..;))))

அருமையாக தொகுத்து இருக்கிங்க தல ;)

geethappriyan said...

அருமை கிஸ்மத் பாய்
ரொம்ப அருமையாக இப்தார் நோம்பு நிகழ்ச்சியை கன்முண்ணே கொண்டு வந்தமைக்கு நன்றி.
அருமையான படைப்பு
ஒட்டு போட்டாச்சு

குசும்பன் said...

சூப்பர், கீழைராசா பரதநாட்டியம் ஆடினாரா? அவ்வ்வ்வ்வ் என்ன கொடுமை இது!

நல்லவேளை மலேசியாவில் நடந்த சிறப்பான இப்தார் என்று தலைப்பு வைக்காமல் போனீங்களே:)))

நட்புடன் ஜமால் said...

நான் சொல்ல நினைத்து வந்ததை ஆயில்ஸ் சொல்லிட்டார்.

கீழை ராசாவுக்கு ----- சரி சரி வேறு சந்தர்ப்பம் அமையட்டும் ...

Anonymous said...

www.puthumai .weebly .com
இலவசமாக மூன்று மாதங்களுக்கு விளம்பரம் செய்ய முடியும்
உங்கள் விளம்பர அளவு
170 pix x 100 pix
GIF Image or JPEG Image
எமக்கு அனுப்புங்கள் உங்களது விளம்பரம் இணைக்கப்படும்
puthumai@ymail.com

கீழை ராஸா said...

என்ன இஸ்மத் பாய் இப்ப சந்தோசமா...?

எப்படா சந்தர்ப்பம் கிடைக்கும் என்பது போல் மூச்சு திணற திணற நண்பர்கள் களத்தில் குதிச்சீட்டாங்க...( என் மீது உள்ள பாசத்திற்கும் (??) துபாயில் பூகம்பம் வந்துவிடக்கூடாதென்ற உங்கள் நல்லெண்ணத்திற்கும் நன்றி கலை, குசும்பு, கோபி...நியூட்டனின் மூன்றாவது விதியை விரைவில் பதிவில் காணலாம்)

தொகுப்பு அருமை நண்பரே...( என்னை வம்பிற்கு இழுத்ததைத்தவிர...)

அது ஒரு கனாக் காலம் said...

உங்களை எல்லாம் சந்தித்ததில் மிக்க மகழ்ச்சி .....

அது ஒரு கனாக் காலம் said...

உங்களை எல்லாம் சந்தித்ததில் மிக்க மகழ்ச்சி ..... விருந்து சூப்பரா இருந்தது

நட்புடன் ஜமால் said...

அழகாய் இருக்கு பார்க்க

இப்படி பல இடங்களில் நடந்தால் ஒரு சந்திப்பும் இருக்கும் ஒரு அறிமுகமும் செய்துவிடலாம் ...

கிளியனூர் இஸ்மத் said...

அன்பு பதிவர்களே....உங்கள் வருகைக்கும் பின்னூட்த்திற்கும் நன்றிங்க....இப்படி அடிக்கடி வாங்க...மறந்திடாதீங்க....

கீழை ராஸா said...

வந்துட்டோம்...

சென்ஷி said...

சூப்பர் :)

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....