உங்கள் வருகைக்கு நன்றி...

Thursday, July 29, 2010

வடஇந்திய சுற்றுலா-3




ஆக்ரா கோட்டையிலிருந்து தாஜ்மஹாலுக்கு இரண்டரை கி.மீ தூரம்.அங்கிருந்து தாஜ்மஹாலுக்குச் செல்ல குதிரை வண்டி, ஓட்டக வண்டி, சைக்கிள் ரிக்ஷா, ஆட்டோ இப்படி பலவிதமான வாகனங்கள் நிற்கின்றன.

யமுனை ஆற்றங் கரையோரம் தாஜ்மஹால் அமைந்திருக்கிறது.
தாஜ்மஹாலுக்குள் செல்ல இரு வழி அமைத்து சோதனைகள் செய்து போலிஸ்காரர்கள் ஒவ்வொரு பார்வையாளர்களையும் அனுப்புகிறார்கள் தினமும் காதல் சின்னத்தை காண்பதற்கு பலஆயிரம் காதலர்கள் வந்துக்கொண்டு இருக்கிறார்கள்.கூட்டம் அதிகமாகவே இருந்தது.சோதனைக்கூடத்திற்கு முன் பலவிதமான கடைகள் அமைத்து பலபொருட்களை விற்பனை செய்கிறார்கள் சொன்ன விலைக்கு அங்கு வாங்கக்கூடாது பொருட்கள் மட்டும் அல்ல தங்கும் விடுதிக்கும் தான்.
எல்லாமே பேரம் பேசப்படுமளவிற்கு தான் விலைகள் வைத்துள்ளார்கள்.பேச்சு திறமை உள்ளவர்களுக்கு ஆக்ரா சரியான சவாலாக இருக்கும்.

நவீன இயந்திரங்கள் வைத்து நம் உடம்பில் ஏதேனும் தடைசெய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்கிறோமா என்பதை கண்டறிய வைத்துள்ளார்கள் அது இருந்தாலும் அதையும் நம்பாமல் நம் உடம்பை தடவியும் பார்க்கிறார்கள்.

வெற்றிலைப் பாக்கு, சுவிங்கம், பான் வாயில் மென்று துப்பக்கூடிய பொருட்களை தடைசெய்துள்ளார்கள்.அதே போன்று பெண்களின் கை பேக்குகளை சோதனை செய்கிறார்கள். எனது நண்பர் ஹாஜாவிடம் ஆறு சுவிங்கம் பாக்ஸ் இருந்தது அதை அனுமதிக்கவில்லை நம் கையில் கொடுத்து நீங்களே எரிந்து விடுங்கள் என்று கொடுத்தபோது எரிவதற்கு மனமின்றி வெளியில் சென்று யாரிடமோ கொடுத்துவிட்டு வந்தார்.

இவைகளை யெல்லாம் எரிந்துவிட்டு காதல் சின்னத்தை காண்பதற்கு உள்ளே நுழைந்தால் பிரமாண்டமான நூழைவாயில் தாஜ்மஹாலை காண்பதற்கு தடையாக நிற்கிறது.இது ஷாஜகானின் பிரித்தியோக மூளை தனது காதல் சின்னத்தை வெறும் கட்டிடமாக அவர் நினைக்கவில்லை அந்த மஹாலில் மும்தாஜ் இன்னும் வாழ்ந்துக் கொண்டிருப்பதைப்போன்ற உணர்வுக் கொண்டிருந்துள்ளார்.

மூன்று பிரமாண்ட நுழைவாயிழை பாதுக்காவலாக அமைத்து நடுவில் தனது காதல் சின்னத்தை உருவாக்கி இருக்கிறார்.கட்டிடக் கலையில் மிகவும் ஆர்வம் கொண்டவராக ஷாஜகான் திகழ்ந்துள்ளார்.அவருடைய ஆட்சிக்காலத்தில்தான் முகலாய கலை நயமிக்கதாய் உச்சநிலை அடைந்துள்ளதாக சரித்திர ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

ஷாஜகானின் கட்டிடக்கலை படைப்புகள் தாஜ்மஹால் மட்டுமல்ல ஏராளம்.
இன்னும் அவருடைய கலைகளில் மிச்சமிருப்பவை டெல்லியிலுள்ள செங்கோட்டை ஜூம்மா மஸ்ஜித் லாகூரின் ஷாலிமார் தோட்டங்கள் லாகூர் கோட்டையின் சில பிரிவுகள் (ஷீஸ் மஹால் மற்றும் நௌலாகா பெவிலியன் போன்றவை) அவருடைய தந்தையின் அடக்கஸ்தளம் இன்னும் ஆக்ராகோட்டையின் உட்புற வடிவங்களை தனது 16 வது வயதிலேயே தனது இஸ்டத்திற்கு மாற்றங்களை செய்து தனது தந்தையிடம் நற்பெயரைப் பெற்றவர் என்பது வரலாறு.

தாஜ்மஹால் உள்ளே செல்வதற்கு முன் அதைப்பற்றி ஒரு சிறிய குறிப்பை இங்கு பதிவு செய்யவிரும்புகிறேன்.

முகலாயர்களைப் பற்றி சரித்திரம் எழுதியவர்கள் தங்களின் விருப்பத்திற்கு எழுதியிருக்கிறார்கள்.ஷாஜகானைப் பற்றியும் அப்படிதான் எழுதப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் ஐந்தாவது மன்னராக வாழ்ந்தவர் ஷாஜகான்.இவர் லாகூரில் 1592-ல் பிறந்துள்ளார்.

தனது முதல் மனைவியான மும்தாஜ் மீது அவர்கொண்டிருந்த அன்பு காதல் வேறு எந்த மனைவியின் இடத்திலும் அவர் வைத்திருக்கவில்லை.14 பிள்ளைகளை பெற்றெடுத்த அந்த அம்மணி மிகவும் அடக்கமான, அமைதியான, அரசாட்சியில் தலையிடாமல், குடும்பப் பொறுப்புடன், தனது கணவருக்கு எல்லாக் கட்டத்திலும் நல்ல மனைவியாக நடந்துள்ளார் இறுதிவரையில் அவர்களுக்கிடையிலான உறவு வலுவானதாக இருந்தது என்று இணையத்தில் சரித்திரத்தை பதிவு செய்து வைத்திருக்கும் விக்கிப்பீடியா கூறுகிறது.

தாஜ்மஹாலை கட்டுவதற்கு 22 வருடங்கள் ஆகியிருக்கிறது; அதை 23 ஆயிரம்பேர்கள் கட்டியிருக்கிறார்கள். தாஜ்மஹாலை கட்டி முடித்தவுடன் அதன் பணியாளர்களின் கைகளை துண்டித்ததாக சில சரித்திர ஆசிரியர்கள் கதை கட்டி இருக்கிறார்கள். விக்கிமீடியாவில் அதற்கு ஆதாரம் இல்லை என்று பதிவு செய்திருக்கிறார்கள்.
ஐரோப்பியர்கள் அங்காடி வதந்திகளை வைத்தே சரித்திரத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.

ஷாஜகானின் 19 ஆம் நூற்றாண்டு வரைபடம்

ஷாஜகான் மரணிக்கும் தருவாயில் கலிமா மற்றும் திருக்குர்ஆனை ஒதியவராகவே மரணித்துள்ளார்.அவருடைய இறுதி ஊர்வலத்தில் மேம்பட்ட பிரபுக்கள் தூக்கிச்செல்லவும் அவர்களைப் பின்தொடர்ந்து ஆக்ராவின் முக்கிய குடிமக்களும், ஏழைகள் மற்றும் தேவைப்படுபவர்களுக்குக் காசுகளை இறைத்து வர அவர்களின் பின்னால் அதிகாரிகள் ஊர்வலமாக கொண்டு செல்வதுடன் தேசிய மரியாதைக்கும் ஜஹானாரா (ஷாஜகானின் மூத்தமகள்) திட்டமிட்டிருந்தார்.ஒளரங்கசீப் அத்தகைய பகட்டு ஆரவாரங்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை அவருடைய உடல் இஸ்லாமிய முறைப்படி கழுகப்பட்டு ஒரு சந்தன சவப்பெட்டியில் தாஜ்மஹால் வரையில் ஆற்றில் கொண்டுச் செல்லப்பட்டது. அங்கு அவருடைய பிரியத்திற்குரிய மனைவி மும்தாஜ் மஹாலின் உடலுக்கு அடுத்து புதைக்கப்பட்டார்.

ஷாஜகான் மும்தாஜ் அடக்கஸ்தளம்

ஷாஜகான் மும்தாஜ் இருவர்களை தாங்கி அவர்களின் உண்மையான காதலை இவ்வுலகிற்கு ஒரு எடுத்துக்காட்டாக அதிசிய சின்னமாக நம் எல்லோர் எண்ணத்திலும் திண்ணமாக அழகுக்கு அழகுசேர்த்து யமுனை ஆற்றங்கரையோரம் தாஜ்மஹால் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது.

நுழைவாயிலுக்குள் நுழைந்ததுமே அந்த வாயிலை ஒருகணம் நிமிர்ந்து பார்த்தேன்.அந்த வாயிலில் அரபு எழுத்துக்கள் எழுதப்பட்டிருக்கிறது அந்த எழுத்துக்கள் வெறும் கவிதைகள் அல்ல திருக்குர்ஆனின் இறைவசனங்கள்.
அந்த வசனங்கள் வருபவர்களை வரவேற்றுக் கொண்டே அதன் பொருள் தெரிந்தவர்களுக்கு அருளளித்துக் கொண்டிருக்கிறது.

இதோ தாஜ்மஹாலை என் கண்களால் காணப்போகிறேன் அந்த அழகை என் கண்கள் இரசிக்கப் போகிறது புகைப்படங்களிலும் திரைப்படங்களிலும் கண்ட தாஜ்மஹால் இதோ என் கண்முன்னால் நிஜமாக என்னை வரவேற்கிறது.

அன்று பெய்த வெய்யிலில் நனைந்து உடல் உலர்ந்த நிலையில் நுழைந்த எங்களை ஒரு நொடியில் உடலுக்கும் உள்ளத்திற்கும் தாஜ்மஹால் உரம் ஊட்டியது உள்ளத்தில் மகிழ்வூட்டியது.

அந்த அழகை நீங்களும் ரசிக்க வேண்டும்

ரசனைத் தொடரும்...

5 comments:

அப்துல்மாலிக் said...

ஆம் சரித்திரவாதிகளே நிறைய கதை கட்டிவிட்டிருக்கிறார்கள், குறிப்பாக ஒளரங்கசீப் பற்றி கொஞ்சம் ஓவராகவே....

Prathap Kumar S. said...

இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்,,,புகைப்படைங்களுடன்...

கிளியனூர் இஸ்மத் said...

நன்றி மாலிக்............

நாஞ்சில்..........இன்னும் இன்னும்னு சொல்லியே ரொம்ப உசுப்பேத்துறீங்க.........நன்றி

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

தொடரில் தாஜ்மஹால் பற்றிய வர்ணனைகள்
படிக்கும்போது, பல ஆண்டுகளுக்குமுன்
நான் தாஜ்மஹாலைப் பார்த்த அந்த
நினைவுகள் மனதில் வந்து
சென்றன. தொடருங்கள்!

கிளியனூர் இஸ்மத் said...

நன்றி.....நிஜாம்...!

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....