உங்கள் வருகைக்கு நன்றி...

Tuesday, August 24, 2010

வடமாநிலச் சுற்றுலா - 8



உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு என்பார்கள் அது எங்களுக்கும் உண்டானது. களைப்பை தீர்க்க எங்களின் கைடு ஜெய்மஹாலை காட்டினார். பெரிய ஏரியின் நடுவில் ஜெய்மஹால் அமைந்திருந்தது. இது மன்னர் பீம்சிங்கின் உல்லாச மஹால் இதனுல் அரச பெண்கள் அதாவது பீம்சிங்கின் குடும்பப் பெண்கள் உள்ளே அனுமதி இல்லை இந்த மஹால் முழுக்க முழுக்க மன்னருக்கு மற்றும் ஆண்களுக்கு உல்லாசத்தை கொடுப்பதற்காக வடிவமைத்திருக்கிறார்.


ஜெய்பூர் இளம் சிவப்பு நகர மையத்தில் ஜெய்மஹால் அமைந்திருக்கிறது. மாலை நேரங்களில் ஜெய்பூர் வாசிகள் இங்கு குழுமி உரையாடுகிறார்கள் நடைபயில்கிறார்கள். இவர்களின் வாய்களுக்கு ருசிபார்க்க பலதரப்பட்ட பலகாரங்கள் தள்ளுவண்டியில் தள்ளி விற்கிறார்கள்.

டெம்போவில் அமர்ந்தபடியே கைடு வாயாலயே படம் காட்டினார். இளம் சிவப்பு நகரத்திற்குள் டெம்போ நுழைந்தது. அந்த நகரம் முழுக்க வணிகக் கடைகள். உணவு விடுதி வாசல்களில் வரிசையாக அமர்ந்திருந்த ஏழை பசிக்காரர்கள்;. தினமும் யாராவது ஏதாவது ஒரு நேர்த்திகடனை நிறைவேற்றினால் தான் இவர்களின் பசி தீரும் இல்லையெனில் ஐயோ பாவம் என யாராவது பணம் வைத்திருப்பவர் இரக்கப்பட்டால் அவர்களின் வயிற்றில் உணவு இறங்கும் அவர்களுக்காக இவர்கள் காத்திருக்கிறார்கள்.


கால்நடைகளுக்கு இளம்சிவப்பு நகரத்தில் முழு சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது. மனிதர்களோடு அவைகளும் நடக்கின்றன கழிக்கின்றன. சுத்தத்தை பற்றி மனிதர்களே கவலைப்படாத போது கால்நடைகளுக்கு எதற்கு கவலை.

இளம் சிவப்பு நகரத்திற்குள் மியுசியம் இருக்கிறது அதில் மன்னர் அணிந்த உடைகள் உபயோகித்த பொருட்கள் என பலபொருட்களை சிறை வைத்திருந்தார்கள்.

அரண்மனைக்குள் செல்வதற்கு அதிகத் தொகை என பயமூட்டினார் கைடு.பரவாயில்லை மூன்று தினங்கள் ஜெய்பூரில்தான் தங்குவோம் அப்போது பார்த்துக் கொள்கிறோம் என்றேன்.

நகரத்தை சுற்றிவிட்டு டெல்லிக்கு நகர்வதற்கு ஆயத்தமானது டெம்போ எங்களை இங்கேயே இறக்கி விடுங்கள் தங்கும் விடுதிக்கு செல்கிறோம் என்றதும் முகவரி கேட்டு ஆட்டோவில் அமர்த்தி அனுப்பி வைத்தார்கள்.

இளம் சிவப்பு நகரத்தின் காட்கேட்டில் உள்ள தங்கும் விடுதியில் முன்பதிவு செய்து வைத்திருந்தார் அப்துல்காதர். இவர் எனது உறவினரின் வணிக நண்பர் என்றாலும் எங்களை காண்பதற்காக தூரத்தை கடந்து வந்திருந்தார்.

இவர் ஜெய்பூர்வாசி ஒலிபெருக்கி தொழிலிற்சாலை வைத்துள்ளார். இருநூறு பணியாளர்களுக்கு இவர் ஒரே முதலாழி என்றாலும் தொழிலாளியாக இருந்து முன்னுக்கு வந்த முதலாழி. எங்களை ஓய்வு எடுக்கசொல்லி விட்டு நாளை சந்திப்பதாக கூறிச் சென்றார். சொன்னதுபோலவே மறுதினம் வந்து இரவு உணவை தன்னுடன் சேர்ந்து உண்கவேண்டும் என கட்டாயப்படுத்தினார். எனக்கு வியப்பாக இருந்தது. முன்பின் அறிமுகமில்லாத இவர் எங்களுக்காக தங்கும்விடுதியை முன்பதிவு செய்துவிட்டு அத்துடன் நகர்ந்துவிடலாம் ஆனால் விருந்து போடுமளவு அவரின் நெருக்கம் என்மனதிற்கு இருக்கத்தை கொடுத்தது. வேண்டாம் என்று கூறியும் விடுவதாக இல்லை நானும் நண்பர் ஹாஜாவும் அவருடன் சென்றோம். தரமான உணவகத்தில் அவருடன் உணவருந்தினோம் அவரின் கடந்தகால கஸ்டங்களை வார்த்தைகளாக்கினார்.

அவைகள் என் மனதிற்கு உரங்களாகியது நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். உற்சாகமாக இருந்தது கீழ்மட்டத்திலிருந்து புறப்பட்டவர் மனிதனை நேசிக்க கற்றுக் கொண்டவர் அவரிடம் அந்த நிமிடங்களில் நிறைய கற்றுக் கொண்டேன். பயன்களை முன்வைத்து பழகும் மனிதர்களிடையே இப்படிப்பட்ட பூரண மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் அவரின் வாழ்க்கை தரம் இன்னும் மென்மேலும் உயரும்.

மாலை ஆறுமணிக்கு விடுதிக்குள் வந்ததினால் சிலமணிகள் ஓய்வு எடுத்துக் கொண்டு கடைத்தெரு சென்றோம். கல்பதித்த புடவைகள் சுடிதார் துணிகள் என பலவண்ணங்களில் பெண்களின் எண்ணங்களில் நிழலாடிய ஆடைகளை ஆசை ஆசையாய் அள்ளினார்கள். விலை கொடுக்கும்போது மட்டும் நாங்கள் தலைகாட்ட வழக்கம்போல் பேரம்தான்.

விடுதியுடன் சேர்ந்த உணவகத்திலிருந்து எங்களின் அறைகளுக்கே உணவுகள் பறிமாறினார்கள். அசதிக்கு சந்தோசம் இதுவும் வசதியாகத்தான் இருந்தது.

மறுதினம் காலையில் அஜ்மீர் செல்வதற்கு ஆயத்தமானோம் அதற்கு இனோவா வாகனத்தை விடுதியில் ஏற்பாடு செய்து தந்தார்கள். கிலோமீட்டருக்கு 7.50 என விலை நிர்ணயித்தார்கள்.

ஜெய்பூர் இளம் சிவப்பு நகரத்திலிருந்து சுமார் 130 கி.மீ தூரம் அஜ்மீர். நாங்கள் புறப்பட்டபோது எங்களுடன் மேகங்களும் புறப்பட்டது எங்கள் வருகையில் ஆனந்த கண்ணீரை மழையாய் பொழிந்து எங்களுக்கு ஆனந்தத்தை கொடுத்தது சந்தோசமாக பயணமானோம்.

சந்தோசப் பயணம் தொடரும்..

4 comments:

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

புகைப்படங்கள் அருமை. தொடருட்டும் உங்கள் அனுபவத்தொடர்கள்.

கிளியனூர் இஸ்மத் said...

க.நா.சாந்திலெட்சுமணன்....உங்கள் வருகைக்கு நன்றி.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நானும் தொடர்ந்து வருகிறேன்.
சுவையான வர்ணனைகள்!

கிளியனூர் இஸ்மத் said...

வாங்க நிஜாம் ரமலான் எப்படி போகுது....நன்றி

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....