உங்கள் வருகைக்கு நன்றி...

Thursday, May 5, 2011

சக்கரை வியாதிக்கு சகசமான வைத்தியம்



இன்று சர்க்கரை வியாதி என்பது சர்வசாதரணமாகி விட்டது யாரைப் பார்த்தாலும் கேட்டாலும் தங்களுக்கு அந்த நோய் இருப்பதாகவே பெரும்பாலோர் கூறுகிறார்கள்.உலகம் முழுவதும் 15 கோடி மக்களுக்கு இந்த வியாதி இருப்பதாக ஒரு செய்தி சொல்கிறது.ஆனால் நம் பாரத நாட்டில் சுமார் இரண்டு கோடி மக்களுக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது என்று ஆய்வறிக்கை கூறுகிறது.

பெரும்பாலோருக்கு தங்களுக்கு சர்க்கரை வியாதி இருப்பதே தெரியாமல் உடம்பை பரிசோதனையும் செய்யாமல் அதைப்பற்றிய விழிப்புணர்வும் இல்லாமல் இந்த வியாதியால் அவதிப்பட்டு வாழ்ந்துக் கொண்டு வருகிறார்கள்.

முதலில் சர்க்கரை வியாதி என்றால் என்ன? என்பதை சுறுக்கமாக தெரிந்துக்கொள்வோம்.
நாம் உட்கொள்ளும் உணவுகளிலிருந்து கிடைக்ககூடிய குளுக்கோஸ் எரிபொருளாக மாறுகிறது. இந்த குளுகோஸ் இரத்தத்திற்குள் சென்று பின்னர் இரத்தத்தின் மூலம் உடலில் உள்ள கோடிக்கணக்கான உடற்செல்களுக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. கணையம் எனும் உடல் உறுப்பு இன்சுலின் எனும் வேதிப்பொருளை உற்பத்தி செய்கிறது. இந்த இன்சுலின் இரத்தத்தின் வழியாக செல்களை சென்றடைகின்றன. அங்கு குளுகோஸ் ஐ சந்தித்து, செல்களானது குளுகோஸ்-ஐ தங்களுக்குள் எடுத்துக் கொள்ளச் செய்கிறது. குளுக்கோஸ்-ஐ செல்கள் எரித்து உடலுக்கு தேவையான சக்தியினை உற்பத்தி செய்து தருகிறது.

இது சர்க்கரை வியாதி இல்லாதவர்களின் உடல் நிலை. ஆனால் அந்த நோய் இருக்கும்போது ஏற்படக்கூடிய மாற்றங்கள்

குளுக்கோஸ்-லிருந்து சக்தியை உற்பத்தி செய்வதை சர்க்கரை நோய் கடினமாக்குகிறது. வயிறு போன்ற ஜீரண உறுப்புகள், உணவினை குளுகோஸ்-ஆக மாறச் செய்கின்றன. அவை இரத்தத்திற்குள் சென்று இரத்தத்தின் வழியாக செல்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் இரத்தத்திலுள்ள குளுக்கோஸ் செல்களுக்குள் செல்ல முடிவதில்லை
ஏனெனில்
1. இன்சுலின் போதுமான அளவு இல்லாதிருக்கலாம்.
2. இன்சுலின் அதிகளவில் இருந்தும், இந்த இன்சுலின் செல் உறையில் உள்ள ரிசப்ட்டார் எனப்படுவதை திறக்க முடியாத நிலை ஏற்படுவதினால் செல்லானது குளுக்கோஸ்-ஐ உட்கொள்ள முடியாத நிலை
3. எல்லா குளுக்கோஸ் துகள்களும் செல்களுக்குள் செல்ல மிகக் குறைந்த அளவே ரிசப்ட்டார்கள் இருக்கலாம்.
எல்லா குளுக்கோஸ் துகள்களும் இரத்தத்திலேயே தங்கியிருக்கும். இதனை ஹைப்பர்கிளைசீமியா (இரத்தத்தில் குளுக்கோஸ் அல்லது சர்க்கரை மிகவும் அதிகளவில் இருப்பது) என்பர். செல்களில் போதிய அளவு குளுக்கோஸ் இல்லாததினால் உடல் நன்கு செயல்பட தேவையான சக்தியினை உற்பத்தி செய்ய முடிவதில்லை.

அதனால் நமது உடம்பில் செயற்கையாக ஆங்கில வைத்திய முறையில் தினம் மாத்திரைகள் அல்லது ஊசிகளின் மூலம் இன்சுலினை செலுத்தி சர்க்கரையை குறைத்துக் கொள்கிறோம்.
இது சர்க்கரை வியாதி உள்ள எல்லோரும் தினம் தினம் செய்துக் கொண்டிருக்ககூடிய நிகழ்வு.

சில தினங்களுக்கு முன் எனது நண்பர் M.E.Sஅபுதாஹிர் பைஜி அவர்கள் சர்க்கரை வியாதியை இயற்கை வைத்தியத்தின் மூலம் ஒருவர் குணப்படுத்துகிறார் என்று ஒரு துண்டு பிரச்சாரத்தை காண்பித்தார்கள்.

படத்தின் மீது கிளிக் செய்தால் பெரிய எழுத்தில் படிக்கலாம்

அதை முழுவதையும் வாசித்துப் பார்த்தேன். “சர்க்கரை நோய்க்கு எளிய இயற்கை மூலிகை மருந்து” - என்று தலைப்பிட்டு விளம்பரப்படுத்தி இருந்தார்கள். இந்த விளம்பரம் நோய்க்கு சிகிச்சை பெற்றவர் கொடுத்திருக்கிறார் என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய விசயம்.

சட்டீஸ்கர் மாநிலத்தில் துர்க் என்ற ஊரில் பாபா ஷேக் இஸ்மாயில் என்பவர் இந்த வைத்தியம் முறையை செய்துவருகிறார்கள்.பல மாநிலத்திலிருந்து மக்கள் அவரைத்தேடிச் சென்று அவர் தரும் மருந்தை உட்கொள்கிறார்கள்.குணம்பெருவதாக கூறுகிறார்கள்.

அந்த மாநிலத்திற்கு நாம் எப்படி செல்ல வேண்டும் என்ற விபரங்களும் துண்டு பிரச்சாரத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த வைத்தியத்தின் சிறப்பு என்ன வென்றால் பாபா தரக்கூடிய சூரண மருந்தை ஓரிருமுறை மட்டுமே சாப்பிட்டால் போதுமானது சர்க்கரை அளவு குறைந்துவிடும்.என்கிறார்.

வைத்தியர் பாபா ஷேக் இஸ்மாயில்

அவர் கூறும் அறிவுரைகள்

1. மருந்து சாப்பிட்டப் பின் தொடர்ந்து நான்கு மணி நேரத்திற்கு தண்ணீர் உணவு புகைத்தல் கண்டிப்பாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

2. நான்கு மணிநேரம் கழித்தப்பின் நீங்கள் ஒதுக்கிவைத்த இனிப்பு சாப்பாடு அனைத்தும் வயிறு நிறைய சாப்பிட வேண்டும்.

3. உணவில் புளி கத்தரிக்காய் மாங்காய் கண்டிப்பாக இரண்டு மாதங்களுக்கு சேர்த்துக் கொள்ளக்கூடாது.

4. மருந்துக் குடித்தப்பின் ஏற்படும் உமிழ்நீர் மற்றும் ஒமட்டலுடன் கூடிய உமிழ்நீர் ஆகியவற்றை கண்டிப்பாக துப்பக்கூடாது.

5. இருமல் ஏற்பட்டு அதனால் வரும் சளியினை துப்பலாம்.

6. வீட்டிற்குச் சென்றப்பின் சர்க்கரை அளவு உயர்வு தெரிந்தால் இரண்டு நாட்களுக்கு மட்டும் நீங்கள் பயன்படுத்தி வந்த சர்க்கரை மாத்திரைகளை உட்கொண்டு அதன் பின் சுத்தமாக சர்க்கரை மாத்திரை சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும்.முப்பது நாட்கள் கழித்து உங்கள் சர்க்கரை அளவை பரிசோதனை செய்துக் கொள்ளவும். பரிசோதனையில் சர்க்கரை நார்மல் அளவிற்கு குறைந்திருப்பதை காண்பீர்கள்.

7. இன்சுலின் பயன்படுத்துபவர்கள் சூரண மருந்தை இரண்டு முறை இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொள்ளவேண்டும்.

8. மாத்திரை மருந்து சாப்பிடக்கூடியவர்கள் ஒருமுறை சூரணமருந்தை எடுத்துக் கொண்டால் போதுமானது.

என்று இப்படி பாபா ஷேக் இஸ்மாயில் அறிவுரைகள் வழங்கி இருக்கிறார்கள்.

இவைகள் எல்லாம் உண்மைதானா?அல்லது பணம் பண்ணும் வழியா? என்ற சந்தேகமும் நமக்கு தோன்றவே செய்தன. வரக்கூடியவர்களிடம் டோக்கன் முறையில் பெயர்களை பதிவு செய்வதற்கு முப்பது ரூபாயும் பாபா கொடுக்கக் கூடிய மருந்துக்கு 120 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. என்று பிரசுரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

நண்பர் அபுதாஹிர் அவர்களுக்கு சர்க்கரை இருப்பதினால் அதற்கான மாத்திரைகள் தினம் சாப்பிட்டு வருகிறார்கள் இந்த துண்டுப் பிரச்சாரத்தைப் பார்த்ததும் சட்டீஸ்கர் சென்று வருதற்கு துபாயிலிருந்து ஆயத்தமானார்கள்.
அப்போது நான் கேட்டுக் கொண்டவிசயம்
வைத்தியர் பாபாவை புகைப்படம் எடுத்துவாருங்கள் சென்று வரக்கூடிய விபரங்களையும் சேகரித்து வாருங்கள் என்று கேட்டுக்கொண்டதற்கினங்க அதற்கும் மேலாகவே சகோதரர் அபுதாஹிர் அவர்கள் தங்கும் விடுதி மற்றும் உணவு விடுதி அதற்கான சிலவுகள் என்று பல விபரங்களையும் சேகரித்து வந்துள்ளார்கள்.

இனி நண்பர் M.E.S.அபுதாஹிர் பைஜி அவர்கள் கூறுவதைக் கேட்போம்.

துபாயிலிருந்து டெல்லி அங்கிருந்து ராய்பூர் விமானம் மூலம் வந்திறங்கினேன்.அங்கிருந்து துர்க் செல்வதற்கு 40 கி.மீ தூரம்.
(தமிழகத்திலிருந்து வரக்கூடியவர்கள் சென்னை சென்ட்ரலிருந்து கோர்பா-6327 எக்ஸ்பிரஸ் இரயிலில் நேரடியாக துர்க் வாரம் இருமுறை செல்கிறது அதில் வரலாம்) புதன்காலையில் துர்க் வந்தடைந்தேன்.

அப்பொழுது என் உடம்பில் சர்க்கரை அளவு 360 இருந்தது.வியாழன்கிழமை அதிகாலை எழுந்து இறைவணக்கத்தை முடித்துக் கொண்டு வெறும் வயிறுடன் தண்ணீர் கூட அருந்தாமல் ஜூம்மா பள்ளிவாசலுக்கு வந்தேன்.பள்ளியில் வைத்துதான் மருந்து தருகிறார்கள்.

பல மாநிலத்திலிருந்து வைத்தியத்திற்காக பலரும் வருகிறார்கள் குறிப்பாக தமிழகத்திலிருந்து இந்த வைத்தியமுறை தெரிந்தவர்கள் வருகிறார்கள். நீண்ட வரிசை நின்றது மற்றவர்களைப் போல நானும் வரிசையில் அமர்ந்து சென்றேன்.

மருந்தை குவளையில் போட்டு கலக்குகிறார் பாபா


பாபா அவர்கள் மூலிகை மருந்தை எடுத்து உள்ளங்கையில் வைத்து குவளையில் பாலுடன் கலந்து கொடுத்தார் அதைக் குடித்தேன் கடுமையான கசப்பும் துவப்பும் இருந்தது.இந்த மருந்தை குடித்த உடன் தண்ணீர் குடிக்கலாம். அதன் பின் சில மணி நேரங்கள் கழித்து இனிப்பு மற்றும் உணவு உண்டேன்.
புளி மாங்காய் கத்தரிக்காய் இவைகள் கலக்காத உணவு அங்கு தயாரித்தும் கொடுக்கிறார்கள்.
நம் வசதிகேற்ப அங்கு தங்கிக் கொள்ளலாம் மூன்று தினங்கள் தங்கி இரண்டு தினங்கள் மட்டும் மருந்து சாப்பிட்டேன் மூன்றாவது தினம் துபாய் புறப்பட்டு விட்டேன். பாபா தரக்கூடிய மருந்து அங்கே மட்டுமே சாப்பிடக் கொடுக்கிறார் மற்றபடி அதை பொட்டலம் போட்டு வீட்டுக்கு எடுத்துப்போக கொடுப்பதில்லை அனுமதியுமில்லை.

அங்கு தங்கிருந்த மூன்று தினங்களில் சர்க்கரையை பரிசோதித்து பார்க்கவில்லை. துபாய் வந்ததும் பரிசோதனை செய்து பார்த்ததில் சர்க்கரை எப்பவும் போல 360 அதிகமாகவே இருந்தது.எப்பவும் சாப்பிடக்கூடிய சர்க்கரை மருந்து ஒருதினம் எடுத்துக் கொண்டேன்.

ஆனால் முன் இருந்ததை போல் அல்லாமல் தற்போது உடலில் சோர்வு இருக்கவில்லை சர்க்கரை அதிகமானால் பல்வலி கோபம் ஏற்படும் அந்த வலியும் இல்லை பதட்டம் கோபம் இருக்கவில்லை மாறாக உடலில் புத்துணர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

இந்த மருந்து சாப்பிட்டு இன்றுடன் பதினைந்து தினங்களுக்கும் அதிகமாகிவிட்டது. இந்த நாட்களில் தினம் உட்கொள்ளவேண்டிய சர்க்கரை மருந்தை ஒருநாள் மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளேன்

நண்பர் M.E.S.அபுதாஹிர் பைஜியுடன் பாபா மற்றும் அவர் நண்பர்கள்

தற்போது பரிசோதித்து பார்த்தவரையில் சர்க்கரை 360 லிருந்து 250க்கு குறைந்திருக்கிறது பலருக்கு நார்மலாக இருப்பதாக கூறுகிறார்கள்; ஆனால் எனது உடல் நிலைக்கு இன்னும் சில தினங்களில் குறைந்துவிடும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. என்று புத்துணர்ச்சியுடன் அபுதாஹிர்பைஜி கூறுகிறார்கள்.

சர்க்கரை வியாதிக்கு பலவிதமான வைத்திய முறைகள் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது ஆனால் இந்த வைத்தியமுறை எளிமையாக இருக்கிறது. பாபா கொடுப்பது மூலிகை மருந்து அதை உட்கொள்வதால் சர்க்கரை வியாதியை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட முடியும் என்று அங்கு சென்று வந்தவர்கள் கூறுகிறார்கள்.

பாபா வசிக்கும் துர்க்கில் நமது நண்பர் உள்ளுர்வாசிகளிடம் பாபாவைப் பற்றி விசாரித்தும் இருக்கிறார்.அவர் வைத்தியத்தைப் பற்றி சிலர் நம்பிக்கையும் சிலர் அவநம்பிக்கையும் கொண்டுள்ளார்கள்.

இன்றுவரையில் பாபா தனது வைத்தியத்தை எதிலும் விளம்பரங்கள் செய்யவில்லை கேள்விஞானத்தில் சென்று அவரைப்பார்த்து மருந்துண்டு குணம் தெரிந்தவர்கள் மற்றவர்களிடம் கூறுவதை வைத்தே பலரும் அங்கு சென்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நண்பர் M.E.S.அபுதாஹிர் பைஜி அவர்களை ஒரு முன்னோட்டம் பார்த்த வரையில் பாபாவின் வைத்தியத்தில் நம்பிக்கை தெரிகிறது.அதனால்தான் இதை மற்றவர்களுக்கும் பிரயோஜனமாக இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் இங்கு பதிவு செய்கிறேன்.

இன்னுமொரு நண்பர் துர்க் செல்வதற்கு ஆயத்தம் மேற்க்கொண்டுள்ளார்.

வேறு ஏதும் விபரம் வேண்டுபவர்கள் நேரடியாக பாபாவிற்கு தொலைபேசி மூலம் தொடர்புக் கொண்டு விவாதிக்கலாம்.

முக்கிய அறிவிப்பு
இங்கு சென்றுவந்த நண்பருக்கு இன்று வரையில் (2013 அக்டோபர்) சர்க்கரை வியாதி குணமாக வில்லை என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

14 comments:

Sankar Gurusamy said...

தகவலுக்கு நன்றி... நிச்சயம் உபயோகப்படும் என்று தோன்றுகிறது.

http://anubhudhi.blogspot.com/

கிளியனூர் இஸ்மத் said...

சங்கர் குருசாமி....இனிப்பு நீர் உள்ளவர்களுக்கு வழிகாட்டுங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

Mohamed Faaique said...

தகவலுக்கு ரொம்ப நன்றி சார். ஆனாலும் இந்த இடம் எமக்கு எட்டாக்கனி’தான்..

கிளியனூர் இஸ்மத் said...

Mohamed Faaique நோயை எண்ணினால் தூரம் அதிகம் இல்லை வருகைக்கு நன்றி.

Anonymous said...

THIS NEWS FROM DINAMAR ALSO.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=186670&Print=1

சர்க்கரை நோய்க்கு சத்திஸ்கர் படையெடுப்பு:நோய் குணமாவதாக மக்கள் நம்பிக்கை

நாமக்கல்:சர்க்கரை நோய்க்கு, சத்திஸ்கர் மாநிலத்தில் உள்ள மசூதி ஒன்றில், மூலிகை மருந்து வழங்கப்படுகிறது. அந்த மருந்தை பெறுவதற்காக நாள்தோறும் தமிழகத்திலிருந்து ஏராளமானோர் அங்கு படையெடுத்து வருகின்றனர்.சீரற்ற உணவுப் பழக்கம், உடற்பயிற்சி இல்லாதது போன்றவற்றால், குறிப்பிட்ட வயதைக் கடந்தநபர்கள், "டயாப்படீஸ்' எனும் சர்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளாகின்றனர். தற்போது இந்நிலை மாறி, இளம் வயதினருக்கும் சர்க்கரை நோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக, மருத்துவ ஆய்வுகள் மூலம் அறியமுடிகிறது.உணவு முறையில் ஏற்பட்ட மாற்றமே, இப்பிரச்னைக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
சர்க்கரை நோயை முழுவதுமாக குணப்படுத்துவது, இயலாத காரியமாக இன்றளவும் உள்ளது.ஆனால், இந்த நோயை மருந்து, மாத்திரை மூலம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என, டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்."இந்த நோயை, மூலிகை வைத்தியம் மூலம் முற்றிலுமாக குணப்படுத்த இயலும்' என, அவ்வப்போது கவர்ச்சி விளம்பரம் வெளியாகிறது. அவற்றை உண்மை என நம்பி மக்கள் செல்கின்றனர். மூலிகை சிகிச்சை அளிக்கும் நபர்கள், முறையாக மருத்துவ பயிற்சி பெறாவிட்டாலும், அவர்களது கவர்ச்சி அறிவிப்பால் மக்கள் ஈர்க்கப்படுகின்றனர்.அந்த வகையில், சத்திஸ்கர் மாநிலம் பிலாய் துர்க் எனும் இடத்தில், மசூதி ஒன்றில், சர்க்கரை நோய்க்கு மூலிகை மருந்து கொடுத்து வருகின்றனர்.ஆண்டுக் கணக்கில் சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தாலும், அவர்கள் அளிக்கும் மூலிகை மருந்து மூலம், நோயிலிருந்து எளிதில் விடுபடுவதாக கூறப்படுகிறது.
சத்திஸ்கருக்கு சிகிச்சைக்கு செல்பவர்களில், 50 சதவீதம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருவதாகவும் தெரிகிறது.நாமக்கல் வழிகாட்டி நலச்சங்கத் தலைவர் சிவகுமார் கூறியதாவது:சர்க்கரை நோய்க்கு, சத்திஸ்கர் மாநிலம் பிலாய் துர்க் எனும் இடத்தில் உள்ள மசூதியில் மருந்து கொடுக்கின்றனர்.அந்த மருந்தை, ஒட்டகப் பாலுடன் கலந்து தருகின்றனர்.
நாள்தோறும், காலை, 6.30 மணி முதல், 11 மணி வரை சிகிச்சை அளிக்கின்றனர்.சர்க்கரை நோய் பாதிப்பு ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்கள், ஒரு முறை மருந்து சாப்பிடுவதன் மூலம் நோய் கட்டுப்பாட்டுக்கு வருவதாக தெரிவிக்கின்றனர். மருந்தை, அங்கேயே தங்கி சாப்பிட்டு திரும்ப வேண்டும்.இதற்காக, குறிப்பிட்ட தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதியிலிருந்தும் அங்கு வருகின்றனர்.ஆண்டு முழுவதும், சர்க்கரை நோய்க்கு மருந்து வழங்குகின்றனர். நூற்றுக்கு, 70 சதவீதம் பேர், அங்கு மருந்து சாப்பிட்டதன் மூலம், நோய் கட்டுப்பாட்டுக்கு வந்ததாக தெரிவிக்கின்றனர். இவ்வாறு சிவகுமார் கூறினார்

கிளியனூர் இஸ்மத் said...

தினமலர் நாளிதழிலும் இந்த செய்தி இடம்பெற்றுள்ளதை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி

Barari said...

இந்த வைத்தியம் எல்லோருக்கும் குணமளிக்கிறது என்று சொல்ல முடியாது.சிலருக்கு குணமாகிறது சிலருக்கு இல்லை.குணமாகாத சிலரில் நானும் ஒருவன்.அந்த பாபா சொல்கிறார் மருந்து சாப்பிட்டு ஒரு மாதம் கழித்து தான் டெஸ்ட் செய்யா சொல்கிறார் அதில் கூடுதலாய் இருந்தால் வழக்கமாய் சாப்பிடும் ஆங்கில மருந்தை இரண்டு நாட்கள் சாப்பிட்டு நிறுத்தி விடவேண்டும் மீண்டும் பத்து நாட்கள் பிறகும் டெஸ்ட் செய்து குறையவில்லை என்றால் மீண்டும் தூர்க் சென்று மருந்து சாப்பிட வேண்டும் இந்சூழின் உபயோகிப்பவர் மட்டும் இரண்டு நாட்கள் தங்கி மருந்து சாப்பிட வேண்டும். குறிப்பாக இங்கு தமிழக்கததை சேர்ந்த ஆட்கள் தான் அதிகம் வருகிறார்கள்.ஒரு தடவை முயற்சித்து பர்ர்பதில் தவறில்லை.

Anonymous said...

எங்கள் நாட்டிற்கு ஒருமுறை ஒரு பாகிஸ்த்தான் காரர் வந்திருந்தார். கன்சர் வியாதியை இஸ்ம்களால் குணமாக்குவேன் என்று பல்லாயிரம்பேர் வேறு வைத்தியத்திற்காகவும் அவரிடம் சென்றனர். ஆங்கில மருந்துகளை நிறுத்தும்படியும் சொன்னார்.முடிவு நம்பியவர்கள்பலர் வாழ்க்கையைத் தொடரவில்லை. இந்தபாபா தருவது சூரணம். அது ஓரு நல்ல மருந்தாகக் கூட இருக்கலாம்.சொல்லுகின்ற வைத்திய முறைகளைப் பார்த்தால் எங்கோஉதைக்கின்றது.மக்கள் நலம் கொண்டவராக இருந்தால் ஏன் இந்த பாபாப இந்த மருந்தை ஆய்வுக்குட்படுத்தி நவீன முறையில் மருந்தாக்கி கோடிக்கணக்கான மனிதவர்க்கத்தைக் காப்பாற்றி சுவனநற்பேறைப் பெறலாமே. தவிரவும் விற்பனை உரிமையைத் தனதாக்கி கோடிக்கணக்கில் பணம் பண்ணலாமே. ஜின்னாஹ்

Anonymous said...

திரு.இஸ்மத் அவர்களுக்கு...

இந்தக் கட்டுரையை may 2011 ல் எழுதியிருகிறீர்கள். கிட்டத்தட்ட ஒருவருடம் ஆகிவிட்டது. இப்போது உங்கள் நண்பருக்கு சர்க்கரை நோய் எப்படி இருக்கிறது? முற்றிலுமாக குணமாகி விட்டதா? என்பதைப் பற்றி அவரிடம் விசாரித்தீர்களா? அதுபற்றிய கூடுதல் தகவல்களையும் பகிர்ந்தால் எலோருக்கும் பயனுள்ளதாக இருக்குமே...!!!

nasar sabiri said...

hai
i am nasar also went thare realy good palace
and medication also best no tayred and sugar going to down slowly

velu said...

திரு.இஸ்மத் அவர்களுக்கு...

இந்தக் கட்டுரையை may 2011 ல் எழுதியிருகிறீர்கள். கிட்டத்தட்ட இருவருடம் ஆகிவிட்டது. இப்போது உங்கள் நண்பருக்கு சர்க்கரை நோய் எப்படி இருக்கிறது? முற்றிலுமாக குணமாகி விட்டதா? என்பதைப் பற்றி அவரிடம் விசாரித்தீர்களா? அதுபற்றிய கூடுதல் தகவல்களையும் பகிர்ந்தால் எலோருக்கும் பயனுள்ளதாக இருக்குமே...!!!

velu said...

இந்த வைத்தியம் எல்லோருக்கும் குணமளிக்கிறதா...?
சர்க்கரை நோய் குணமாகி விட்டதா?????
அதுபற்றிய கூடுதல் தகவல்களையும் பகிர்ந்தால் எலோருக்கும் பயனுள்ளதாக இருக்குமே...!!!

கிளியனூர் இஸ்மத் said...

எனது நண்பருக்கு சர்க்கரை நோய் இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் குணமாகவில்லை.

Unknown said...

இக்கரைக்கு அக்கரை பச்சை. நம் தமிழகத்தில் திருவண்ணாமலை To விழுப்புறம் வழியில் ஒரு ஊரில் (பெயர் நினைவில்லை) மருந்து கொடுப்பதாகவும் அங்கு சென்று வைத்தியம் கால் வழிக்கு வைத்தியசெய்வதாகவும் மற்றும் சர்க்கரைக்கு ஒரு வைத்திய முளையை செய்ததாகவும் அதை செய்து பார்த்ததால் 380-400 அளவானது 90-130 அளவிற்கு சர்க்கரை கட்டுப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அவர்கள் என்ன முறையை பின்பற்றச்சொன்னார்கள் என்று கேட்டதற்கு அந்த வைத்தியமுறையை அவர் எனக்கு சொன்னார்.

ஆவாரம் பூ கேள்விப்பட்டுள்ளீர்களா. கிராமப்புறத்தில் மஞ்சள் நிறத்தில் பூத்திருக்கும். அது செடிவகை.

அந்த பூக்களை பறித்து, நிழலில் நன்கு காயவைத்து பின் பொடிசெய்து வைத்துக்கொண்டு, தினமும் அதிகாலை வெரும் வயிற்றில் ஒரு டேபில் ஸ்பூன் வாயில் போட்டு தண்ணீர் கொண்டு விழுங்கவேண்டும். சாப்பாட்டை நிதானமாக, வாயிலேயே நன்கு அறையும் வண்ணம் மென்று சாப்பிடவேண்டும். சாப்பிட்டு அறைமணி நேரம் கழித்துதான் தண்ணீர் அருந்தவேண்டும்.

இவைதான் அவைகள். செய்து பாருங்கள் ஒரு மாதத்திற்குள் நீங்களே உணருவீர்கள்.

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....