உங்கள் வருகைக்கு நன்றி...

Tuesday, September 29, 2009

சாந்தம் நிறைந்த சலாலாஹ்

புதிய சுற்றுலாவிற்கு போவதற்கு முன் இந்த தொடரை எழுதச் சொன்ன பாசத்திற்குரிய பதிவர்களுக்கு ஒரு சல்யூட் பண்ணிட்டு துவங்குகிறேன்…

சிம்மபாரதி
ச.செந்தில்வேலன்
தமிழ் 144
சென்ஷி
அன்புடன் மலிக்கா

இந்த ஐவரும் அடுத்தசுற்றுலா தொடரை நீங்கள் தொடங்கலாம் என்று தைரியமாக பச்சைக் கொடி காண்பித்து உற்சாகமூட்டிய இளகிய மனசுக்காரங்க…உங்கள் வாழ்த்துக்களை சத்தாக எடுத்துக் கொண்டு இதோ புறப்படுகிறேன்… உங்கள் ஐவருக்கும் … நன்றி.!


சென்ற ஆண்டு விடுமுறையின்போது சுற்றிப்பார்க்க எங்கே போகலாம் என்று யோசித்தேன். இது மலேசியாவுக்கு முன்னால…
ஜூன் மாதம் முழுவதும் எனது விடுமுறை தினங்கள். அமீரகத்தில் ஜூன் கோடைக்காலம்.
வளைகுடா முழுவதும் கோடைதான்.ஆனால் சில வளைகுடா நாடுகளில் கோடையில் குளிரும் இடமும் இருக்கிறது. அது எங்கே.?

ஆம் மஸ்கட் நாட்டில் யெமன் எல்லைக்கு அருகில் உள்ள சல்லல்லாஹ் என்ற நகரம் .ஜூன் இறுதியிலிருந்து செப்டம்பர் வரையில் அங்கு மிதமான மழையும் குளிரும் இருக்கிறது. என்ற செய்தி அறிந்து பயணத்திற்கு தயாரானேன்…
வழக்கம் போல் வீட்டு அம்மணியுடனும் குட்டிஸ்களுடன் தான் .

மஸ்கட் சம்பந்தமான செய்திகளை சேகரித்தேன். அதை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ளலாம்…அது அமீரகத்தில் வாழக்கூடிய தமிழ் அன்பர்களுக்கு பயன் தரலாம்…என்ற ஒரு சின்ன ஆசைங்க… அவ்வளவு தான்…

மலேசியா அமீரகத்திலிருந்து தூரம் .அதனால பெரிய தொடராக சென்றது இது பக்கம் என்பதினால் சின்னதாக முடிக்கலாம்னு ஆசை… ஆசைக்கு அளவில்லை… ஆனால் பேராசையல்ல.

மஸ்கட் அமீரகத்துக்கு பக்கத்து நாடாக இருப்பதால் பலருக்கு விடுமுறைகளை கழிப்பதற்கு ஏற்றதாக இருக்கலாம்.

துபாய் நகரிலிருந்து சல்லல்லாஹ் சுமார் 1600 கிமீ தூரத்தில் இருக்கிறது. இது மஸ்கட் நாட்டைச் சார்ந்தது. இந்த நாட்டுக்குச் செல்ல மஸ்கட் தூதரகத்தில் (எம்பாஸியில்) விசா பெறவேண்டும்.
அமீரகத்தில் பர்துபாயில் கவுன்சிலிங் பகுதியில் நம் இந்திய தூதரத்திற்கு அருகில் மஸ்கட் தூதரகம் உள்ளது.
இந்தியர்கள் மஸ்கட் தூதரகத்தில் விசா பெறவேண்டும். அதற்கான தொகை 30 திரஹம் மட்டும். குழந்தைகளுக்கு இலவசமாக விசா அடித்து தருகிறார்கள். காலைவேலையில் நாம் சென்றால் அரைமணிக்குள் விசா அடித்து தந்துவிடுகிறார்கள். கையில் சில்லரையோடு செல்லுங்கள்.

அமீரகத்திலிருந்து வாகனத்தில் செல்லக்கூடியவர்கள் மஸ்கட் எல்லையில் விசா வாங்கிக் கொள்ளலாம் என்று அலட்சியமாக செல்லவேண்டாம் பலர் திருப்பிவிடப்பட்டிருக்கிறார்கள் . ஆதலால் தூதரகத்திலேயே விசா வாங்கிச் செல்வது டென்ஷனைக் குறைக்கும்.
தங்களின் சொந்த வாகனத்தில் செல்பவர்கள் மஸ்கட்டுக்கான இன்சூரன்ஸை தங்களின் வாகன காப்பீட்டு அலுவலகத்தில் பெற்று செல்லலாம் அல்லது மஸ்கட் எல்லையில் (பார்டர்) காப்பீடு அலுவலகம் உள்ளது அங்கும் பெறலாம். அங்கு பெருவதில் ஒரு வாரத்திற்கு மட்டும் 100 திரஹம் வசூலிக்கிறார்கள்.

நான் சொந்த வாகனத்தில் செல்லவில்லை. துபாய்லிருந்து தினம் மதியம் மூன்று மணிக்கு கல்ப் டிரான்ஸ்போர்ட் கம்பெனியின் பேருந்து புறப்படுகிறது. அதில் சல்லல்லாஹ் போய் திரும்ப வருவதற்கு 180 திரஹம் ஒரு நபருக்கு கொடுக்கவேண்டும். இருக்கையில் அமரக்கூடிய குழந்தையாக இருந்தாலும் 180 கட்டாயம் வாங்கிவிடுகிறார்கள்.

இந்த பேருந்து துபாய் கோல்டு சூக் மீன் மார்கெட் அருகிலிருந்து புறப்படுகிறது. இதன் அலுவலகம் கோல்ட் லேண்ட் கட்டிடத்திற்கு அருகில் உள்ளது. இந்த பேருந்து மட்டுமல்ல. மஸ்கட் அரசு பேருந்து துபாய் டனாட்டா அலுவலகத்திற்கு பின் உள்ள நிறுத்தத்திலிருந்து தினம் மதியம் 2.30 மணிக்கு இரு பேருந்துகள் புறப்படுகின்றன. விலையில் வித்தியாசம் இல்லை.

மதியம் மூன்று மணிக்கு புறப்பட்டால் அடுத்தநாள் காலை 9 மணிக்கு சல்லல்லாஹ் சென்றடையலாம். சுமார் 16 மணிநேரங்கள் நாம் பயணம் செய்யவேண்டி இருக்கிறது.
இவ்வளவு தூரம் பயணம் செய்யக்கூடிய நாம் அங்கு பார்க்ககூடிய இடங்கள் நமக்கு திருப்தி அளிக்கக் கூடியதாக இருக்கிறதா.?
என்றக்கேள்வி நம் மனதில் தோன்றலாம்… நியாயமானதே.

அதைப்பற்றி கொஞ்சம் விரிவாகப்பார்க்கலாமா…?

உங்களுக்கு போரடிக்காமல் இருப்பதற்க்காக தொடராகவே தொடரலாமே…!

15 comments:

சென்ஷி said...

ஆஹா.. சொன்ன சொல் தவறாம அடுத்த தொடர் ஆரம்பிச்சாச்சா.. சூப்பர்.. :-)

அது ஒரு கனாக் காலம் said...

wow... starting itself is good !!!

Jazeela said...

உபயோகமான தொடர். இன்ஷா அல்லாஹ் சலல்லாஹ் போக வேண்டும்.

Anonymous said...

முதல் பதிவிலேயே நிறைய உபயோகமான தகவல்கள். தொடருங்கள். நன்றி.

சிம்ம‌பார‌தி said...

நல்ல தொடர்...இத்தொடரை பக்கத்துல பிரியாணி வெச்சு சாப்பிட்டுகிட்டே படிச்சா... யப்பா....

சிம்மபாரதி

மின்னுது மின்னல் said...

தொடருங்கள்..

தொடர்கிறேன் !!!

அன்புடன் மலிக்கா said...

சொன்னதுபோல செய்து தொடரை சுடச்சுட தந்த இஸ்மத் அவர்களுக்கு பாராட்டுக்கள்

தொடர்ந்து தொடரை தொடருங்கள்-உங்கள்
தொடரை தொடர்ந்து தொடுத்துக்கொண்டு நாங்களும்
பயணமாலைக்கு தயாராகிறோம்

Anonymous said...

Thats SALALAH not Sallalah

கிளியனூர் இஸ்மத் said...

சென்ஷி, அதுஒரு கனாக்காலம், ஜெஸிலா,sivaramang,
சிம்ம‌பார‌தி ,மின்னுது மின்னல்,அன்புடன் மலிக்கா

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.... தொடருங்கள்...

Unknown said...

ஏம்பா இஸ்மத் பெருஞ்சேரி போறதுக்கே நடந்து போறவன் நீ ,
நீ மஸ்கட் போனாயா? நம்ப முடியவில்லையே
போட்டோ மாத்தினாலும் நீ கருப்பு தான்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

இஸ்மத் அண்ணே, அருமை.

அடுத்த தொடரை ஆரம்பித்துள்ளீர்கள். வாழ்த்துகள். தொடர்ந்து பயணிக்க ஆவலுடன் இருக்கிறோம் :)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

என்னைப் போல எளியவனையும் குறிப்பிட்டதற்கு நன்றிகள் :)

Unknown said...

சில ஆண்டுகளுக்கு முன் ஸலாலாஹ் (Salalah) போய் வந்தேன். நம்ம கேரளாதான்.
அடிக்கடி ஒமான் போகிறேன் என்றாலும் அங்கே இன்னும் என்னென்ன பார்க்க வேண்டிய இடங்கள் இருக்கிறது என்பதை உங்கள் தொடரிலிருந்து தெரியலாமென நினைக்கின்றேன்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

பயணக் கதையா? நானும் உங்களுடனேயே
வரேனே?!

கிளியனூர் இஸ்மத் said...

வாங்க...சுல்தான் பாய்...உங்க கருத்துபடியே கிட்டதட்ட கேரளா மாதிரிதான்....அவசியம் ஒருமுறையாவது பார்க்கனும் உங்கள் வருகைக்கு கருத்துக்கும் நன்றி...

நீடுர் நிஜாம் முதல்முறையா வந்திருக்கீங்க...மலேசியா பயணக்கட்டுரைய படிச்சீங்களா...இதையும் படிங்க....உங்கள் வருகைக்கு நன்றி...

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....