உங்கள் வருகைக்கு நன்றி...

Monday, January 11, 2010

குளிர் காலச்சுற்றுலா


அமீரகம் துபாயிலிருந்து சுமார் 125 கிமீ தொலைவில் உள்ளது அல் அய்ன் என்ற சிறிய நகரம். இது அமீரகத்தின் தலைநகரமான அபுதாபியின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த நகரத்தில் சுற்றுலாவினர்களை கவரும் வண்ணம் பல இடங்கள் இருக்கிறது. அல்அய்னில் பிரதானமாக விளங்குவது ஜிபில் ஹபீட்(jebel hfeet) என்ற மலையடிவாரம். இந்த மலையின் உயரம் சுமார் 4000 அடி 21 வளைவுகள் 11.7 கிமீ தூரம். இந்த மலையின் உச்சியில் ஸ்டார் ஹோட்டல் உள்ளது. சுற்றுலா பயணியர்களின் வாகனங்களை சுமார் 1000 நிறுத்துவதற்கு செப்பனிட்டு அழகுப் படுத்தியிருக்கார்கள். இந்த மலையின் உச்சியில் நின்றுக் கொண்டு அல் அய்ன் நகரமுழுவதையும் காணமுடிகிறது. ஓமான் நாட்டு எல்லைகளையும் காணலாம்.

இந்த மலை அடிவாரத்தின் அடியில் ஒரு பசுமை கிராமத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த கிராமத்தின் அழகே அங்கு அமைக்கப்பட்டிருக்கும் ஓடைகள். இது வெண்ணீர் ஓடை ஆம். நான்கு புறமும் மலைகள் நடுவில் இந்த பசுமை கிராமம். வெண்ணீர் ஓடையில் கால்களை நனையவிட்டு அமர்ந்து ஓய்வெடுக்கலாம். குழந்தைகள் இந்த ஓடையில் விளையாடுவார்கள். சிலர் சறுக்கி விழுந்தும் இருக்கிறார்கள்.

நண்பர் சிராஜ்

இந்த வெண்ணீர் இயற்கையாகவே பூமியிலிருந்து வருகிறது. இந்த வெண்ணீரில் குளிப்பவர்களுக்கு மூட்டுவலி குறையும் என்று சில வயதானர்கள் கூறுகிறார்கள்.
குளிப்பதற்காக ஆண் பெண் தனித் தனிநீச்சல் குளங்கள் அமைத்து வைத்துள்ளார்கள். 5 திரஹம் குளியலுக்கான கட்டணம்.

குளிர் காலத்தில் குளிப்பதற்காகவேண்டியே பலரும் செல்வதைபோல் எனது குடும்பமும் எனது நண்பர் சிராஜ் குடும்பமும் கிளம்பினோம். புல முறை சென்றிருந்தாலும் இந்த முறை முதலில் அல் அய்னில் உள்ள மிருகக்காட்சி சாலைக்கு சென்றோம்.


புதிய வரவாக ஆப்பிரிக்காவிலிருந்து வெள்ளை சிங்கம் வந்திருக்கிறது அதைக்காண மக்கள் கூட்டம். நாங்கள் காலை 11 மணிக்கு மிருகக் காட்சி சாலையினுல் நுழைந்தோம்.

அன்னப் பறவைகளும் வண்ணப் பறவைகளும் எங்களை வரவேற்றது. பல வகையான குரங்கின வகைகள். வால் இல்லாமலும் வாலோடும். நம் நாட்டு குரங்குகளும் வாழைப்பழத்தை காட்டியதும் பல் இளிக்க ஆரம்பித்தது.
வாழைப்பழத்தை கொடுக்கலாம் என்று கை நீட்ட குரங்கும் கை நீட்ட இடையிலே இன்னொரு கை நீட்டியது செக்யூரிட்டி(பாது காவலர்) கொடுக்கக் கூடாது என்று.
அந்த குரங்குகள் செக்யூரிட்டியை பார்த்த பார்வை மொவன நான் வெளியில வந்தா உன்னை கொதரிடுவேன்ன்னு சொல்றாமாதிரி உர் உர்னு உருமிக் கொண்டு பார்த்தது.

செக்யூரிட்டியின் கட்டுப்பாட்டையும் மீறி சில குழந்தைகள் சிப்ஸ்களை குரங்களுக்கு தூவிக் கொண்டிருந்தார்கள்.

சிங்கம் புலி நரி பாம்பு முதலை ஒட்டகச்சிவிங்கி ஆமை மான் இப்படி பல வகையான மிருகங்கள் பல நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்டு பராமரித்து வருகிறார்கள்.


நுழைவுக்கட்டணம் 15 திரகம் குழந்தைகளுக்கு 5 திரகம் வீதம் பெறுகிறார்கள்.

மாலை 6.30 மணிக்கு பறவைக் காட்சி ஸ்பெஷல் ஷோ காண்பிக்கிறார்கள்.

அமீரகத்தின் தேசிய பறவையான ராஜாளியை வைத்து அது செய்யக் கூடிய சாசகங்கள் பார்பதற்கு பிரமிப்பாக இருந்தது. நல்ல பயிற்சி கொடுத்திருக்கிறார்கள்.

அவ்வளவு கூட்டத்திலும் அந்தப் பறவை காவலர்களின் கைகளில் மட்டும் வந்து அமர்கிறது.

மிருகக்காட்சி சாலையினுள் உணவு விடுதிகள் இருக்கின்றன.


ஆப்பிரிக்காவிலிருந்து வந்த விருந்தாளி வெள்ளை சிங்கத்தை காணமுடியவில்லை. அவர் காலையில் பத்து மணிக்கு வந்து விட்டு மதியம் 1 மணிக்கு கூண்டுக்குள் போய்விடுவாராம். இது தெரியாமல் குரங்குகளின் சேட்டைகளை பார்த்துக் கொண்டு நேரத்தை அதிகம் சிலவு செய்து விட்டோம்.


அமீரகத்தில் வாழக்கூடிய தமிழன்பர்கள் பெரும்பாலானோர் இந்த மிருக்காட்சி சாலைக்கு வந்திருப்பார்கள். அப்படி வராதவர்கள் அவசியம் வந்து பார்க்கலாம்.

இரவு 7 மணிக்கு மிருகக்காட்சி சாலையிலிருந்து புறப்பட்டு ஜபீல்அபீத் என்ற வெண்ணீர் ஊற்றுக்கு சென்றோம். வெண்ணீர் குளத்தில் குளிப்பதற்கு இந்த குளிர் காலம் தான் ஏற்றது. அதில் குளித்தவர்கள் அதன் சுகத்தை அனுபவிக்க அடிக்கடி வருவார்கள். (நான் அடிக்கடி குளித்து அனுபவிக்கறதுனால சொல்றேன்)

இந்த குளிர்கால சுற்றுலா வெதுவெதுப்பாக இருந்தது.


இதெல்லாம் நம்மக் கேமராவுல சிக்கியது



உன் தொல்லை இங்கேயுமான்னு





5 comments:

அப்துல்மாலிக் said...

எத்தனை தடவை போயிருந்தாலும் படிப்பதற்கும் படங்கள் பார்ப்பதற்கும் வித்தியாசமா இருக்கு

geethappriyan said...

மிக அருமையான இடம் போன வருடம் போயிருந்தோம்,மீண்டும் போக தூண்டும் பதிவு,
ஓட்டுக்கள் போட்டாச்சு பாய்

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

புகைப்படங்கள் அருமை சகோதரரே!.குழந்தைகளுக்கு திருஷ்டி பட்டுவிடப்போகிறது.
அருமையான குளு குளு பதிவு.நன்றி
அன்புடன்
க.நா.சாந்தி லெட்சுமணன்.

கிளியனூர் இஸ்மத் said...

அபுஅஃப்ஸர்
கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்
க.நா.சாந்தி லெட்சுமணன்

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

நல்லா இருக்கு

இனிய தமிழர் திருநாள் நல்வாழ்துக்கள்

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....