உங்கள் வருகைக்கு நன்றி...

Saturday, June 26, 2010

விட்டாச்சி விடுமுறை...இரயில் பயணம் இணையதள முன்பதிவு...

விடுமுறை என்பது அயல்நாட்டில் வாழக்கூடியவர்களுக்கு விடுதலையைப் போன்று இருக்கிறது என்று சொன்னால் அது மிகைஅல்ல.

எத்தனை சுகம் எத்தனை சுதந்திரம் இது பிரம்சாரிகளுக்கு மட்டுமல்ல குடும்பச்சாரிகளுக்கும் தான்.

ஓவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் தேதி என்னுடைய விடுமுறை ஆரம்பம் முப்பது தினங்கள் உல்லாசமாய் உறவுகளுடன் உலாவும் நாட்கள்...

இப்போதெல்லாம் 30, தினங்களை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை இங்கு துபாயில் உள்ள பள்ளிக்கூடங்களில் கோடைவிடுமுறை ஒவ்வொரு ஆண்டும் மாறுதல்கள் இருந்துக் கொண்டே இருக்கின்றன.

சென்ற ஆண்டு ஜூன் 6, ரில் காலாண்டு தேர்வு துவங்கி 16, ரில் முடிந்தது அச்சமயம் நான் மட்டும் ஜூன் 3, னில் புறப்பட்டு இந்தியா சென்றேன் தேர்வு எழுதிவிட்டு எனது பிள்ளைகள் மனைவி 16, ரில் சென்னை வந்தார்கள்.
அங்கிருந்தபடியே சிங்கை மலேசியான்னு சுற்றுலா புறப்பட்டு 17, தினங்கள் சுற்றிவிட்டு அவர்களை சென்னையில் இறக்கி விட்டு நான் மட்டும் துபாய் வந்துவிட்டேன்.

ஆனால் இந்த முறை கொஞ்சம் மாற்றம் காலாண்டுத் தேர்வு ஜூன் 16,க்கு துவங்கி 27, லில் முடிகிறது. எனது விடுமுறை தேதியையும் ஜூன் 15,க்கு மாற்றிக் கொண்டுள்ளேன்.

தாயகத்தில் நிறைய தேவைகள் மற்றும் கல்யாண விருந்துகள் இதிலெல்லாம் கலந்துக் கொள்ளவேண்டும் அடுத்து இந்த முறை சுற்றுலா நம்நாட்டிலேயே பார்க்க வேண்டிய பல இடங்களில் சில இடங்களை சுற்றிப்பார்க்க ஒரு பட்டியலைத் தயார் செய்துள்ளேன்.

இந்த சுற்றுலா எனது குடும்பமும் எனது நண்பர் குடும்பமும் இணைந்து சுற்றுவதற்குத் திட்டமிட்டிருக்கின்றோம்.

சென்னையிலிருந்து இரயிலில் இந்த சுற்றுலாவை ஜூன் இறுதியில் துவங்க இருக்கிறோம்.

முதலில் ஆக்ரா, பின்னர் டெல்லி, பின்னர் அஜ்மீர் பின்னர் ஜெய்பூர் பின் ஜெய்பூரிலிருந்து சென்னைக்கு வந்தடைகிறோம்.மொத்தம் பத்து தினங்கள்.

இந்த இரயில் பயணத்தை இணையதளத்தின் மூலம் முன் பதிவு செய்வதைப் பற்றி உங்களோடு பகிர்ந்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன்.அத்துடன் எனக்கு கிடைத்த முன் பதிவு செய்தபோது கிடைத்த அனுபவத்தையும் பகிர்ந்துக் கொள்கிறேன்.

நாம் இரயில் ஸ்டேஷனில் கால் கடுக்க நின்று முன் பதிவு செய்யும் வேலையை இப்பொழுது எந்த நாட்டிலிருந்தும் நமது இந்திய இரயில் பயண இருக்கையை இணையதளத்தின் மூலமாக முன் பதிவு செய்துக் கொள்ளலாம்.

இந்தியன் இரயில்வே என்ற முகவரியை சொடுக்கினால் போதும் இரயிலைப்பற்றி காலம் நேரம் மற்றம் எங்கு செல்லவேண்டும் போன்ற விபரங்கள் முழுவதையும் தெரிந்துக் கொள்ளலாம்.

நமது பயணம் 90 தினங்களுக்குள் நிகழ்வதாக இருக்கவேண்டும்.இந்த பயண இருக்கையை பதிவு செய்வதற்கு நமது விபரங்களை கீழ்காணும் இணையதள முகவரியில் பதிவு செய்து உபயோகப் பெயர் கடவுச்சொல்லையும் நிறுவவேண்டும்.அதன் பிறகே நாம் இரயிலின் முன் பதிவு செய்ய முடியும்.
www.irctc.co.in.

இந்த இணையதளத்தில் சீசன் டிக்கேட் மற்றும் ஐடிக்கேட் இடிக்கேட் இவைகளை பெறலாம்.



எங்கள் சுற்றுலாவுக்கான டிக்கேட்டை ஐடிக்கேட்டாக அதாவது இன்டர்னெட் டிக்கேட்டாக புக் செய்தேன்.அதில் நமது இந்திய முகவரி தொலைப்பேசி எண் கேட்கப்பட்டிருக்கிறது பதிவு செய்தேன்.டிக்கேட் நிச்சயமானது உடனே இமெயில் வந்தது.அதில் நாங்கள் ஏறவேண்டிய ஸ்டேஷன் இறங்க வேண்டிய ஸ்டேஷன் கோட்ச் நம்பர் பிஎன்ஆர் எண் போன்ற விபரங்கள் மற்றும் தொகை விபரங்கள் இருந்தன.அத்துடன் 36 மணிநேரத்திற்குள் நீங்கள் தந்த முகவரிக்கு ஒரிஜினல் டிக்கேட் கூரியரில் வரும் பெற்றுக் கொள்ளவும் அப்படி வரவில்லை எனில் இந்த முகவரிக்கு இமெயில் அனுப்பவும் என்று மெயில் வந்தது.

36மணி நேரத்தையும் கடந்து 168வது மணிநேரத்தில் இமெயில் போட்டேன் உடன் பதில் கிடைத்தது அதில் சிப்பிங் எண் மற்றும் கூரியர் தொலைபேசி எண் எழுதி தொடர்புக் கொள்ள சொன்னார்கள்.

நானும் தொடர்புக் கொண்டேன் தஞ்சாவூரிலிருந்து என்னிடம் பேசியவர் இது திருச்சி மெயினுக்கு தான் வரும் நீங்க அங்க தொடர்புக் கொள்ளுங்கள் என்றார்.நம்பர் கேட்டேன் கொடுத்தார்.

திருச்சிக்கு போன்போட்டேன் சார் இது கோயமுத்தூர் டிவிசனில் இருக்கும் நீங்க அங்க போன்போட்டு கேளுங்க என்றார் நம்பர் வாங்கினேன்.இவ்வளவையும் துபாயிலிருந்து டெலிபோனில் செய்தேன்.

சுhர் இது விழுப்புரம் டிவிசன் நீங்க விழுப்புரத்திற்கு போட்டு கேளுங்க எனறதும் அதுவரை பொறுமையாக இருந்த எனக்கு கோபம் கொப்பளித்தது.

மீண்டும் முதல்லிருந்து தொடங்கினேன்.தஞ்சாவூர் சார் நான் தான் சொன்னேன்ல நீங்க திருச்சிக்கு பண்ணுங்க என்றார்.

ஏன்ன கிண்டல் பண்றீங்களா? ஊங்க பேரு என்ன? கேட்டேன் காளிமுத்து என்றார்.இரயில்வே டிபார்ட்மெண்டுல உங்க நம்பரத்தான் எழுதி இருக்காங்க இதுக்கு பதில் நீங்கதான் சொல்லனும்.என்றேன்

சார் புரிஞ்சுக்கோங்க இந்த சிப்மெண்ட் எங்களுக்கு வரலை திருச்சிக்கு போன் போட்டா விபரம் கிடைக்கும் என்றார் ஒரு விபரமும் சொல்லமாட்டேங்குறாங்க என்றேன்.மேனேஜர் நம்பர் தர்ரேன் அவரிடம் கேளுங்க என்றார் அதே கோபத்துடன் மேனேஜரை தொடர்புக் கொண்டேன் நான் வெளியில இருக்கேன் அலுவலகத்துக்கு போன்போட்டு கேளுங்க என்றார்.

கோபம் கொஞ்சம் அதிகமானது உங்க அலுவலகத்துக்கு போன்போட்டு கேட்டுவிட்டுதான் உங்களுக்கு போட்டிருக்கிறேன் என்றதும் ஒரு மணிநேரம் கழித்து தொடர்புக் கொள்ளுங்கள் என்றார்.

தோடர்புக் கொண்டேன் அந்த சிப்மெண்ட் விழுப்புரத்திற்கு அனுப்பி 6 நாட்கள் ஆகிடுச்சி என்றார்.

விழுப்புரம் மயிலாடுதுறை எண்ணை கொடுக்க மயிலாடுதுறைகாரன் சிதம்பரத்தில் இந்த சிப்மெண்ட் மாட்டிகிடுச்சி நீங்க விழுப்புரத்திலேயே கேளுங்க என்றதும்

முடியல…முடியலப்பா முடியல ஒரத்தன் அடிச்சா தாங்கலாம் இப்படி மாவட்டம் மாவட்டமா அனுப்பி அடிச்சா எப்படி தாங்குறது…வலிதாங்காம ஒருத்தன் கிட்ட டேய் நான் இரயிவே டிபார்ட் மெண்ட்க்கு கம்ளைண்ட் பண்ணுவேன்னே செஞ்சுக்கோ எங்கவேணுன்னாலும் செஞ்சுக்கோன்னா.

எவ்வளோ தைரியம்! இருக்காதா பின்னே! பேசினவன் ஒனரு இல்லையே இருந்தாலும் டிபாட்மெண்ட்க்கு கம்ளைண்ட் அனுப்பினேன் அதை சம்பந்தப்பட்ட கூரியருக்கு பார்வேட் செய்திருக்காங்க மறுதினமே எனக்கு ரொம்பவும் பணிவாக மெயில் அனுப்பி நான் தந்த முகவரியில் டெலிவரியும் செய்தாங்க.

அரசு ஊழியர்கள் தங்கள் பணிகளில் பொடுபோக்கிதனமாக இருக்கிறார்கள் என்ற குறையை போக்குவதற்கு தனியாரிடம் சில பொறுப்புகளை கொடுத்து செய்ய சொன்ன அவங்களும் அரசு ஊழியர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று நிறுபிக்கிறார்கள்.

சரி எப்படியோ சுற்றுலா பயணத்திற்கான இரயில் முன் பதிவு செய்தாகிவிட்டாச்சி

இந்த வரியிலிருந்து இதை கிளியனூர் கிராமத்தில் டைப் செய்துக் கொண்டிருக்கிறேன்.

இரயில் முன் பதிவு விசயத்தில் ஐ டிக்கட்டைவிட (இண்டர்நெட்) இ டிக்கேட் எளிமையாக தெரிகிறது.ஆன் லைனில் பதிவு செய்து அதை பிரிண்ட் எடுத்து வைத்துக் கொண்டால் போதுமானது பயணம் செய்யும் சமயத்தில் நம்மிடமுள்ள அடையாள அட்டை அதாவது ஒட்டு அட்டை ரேஷன் அட்டை பான் அட்டை டிரைவிங் லைசன்ஸ் இப்படி ஏதாவது ஒன்றை டிக்கேட் பரிசோதகரிடம் காண்பித்தால் போதுமானது.

ஆக உங்கள் இரயில் பயணங்களை முன்பதிவு செய்து சிரமங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

சரி எங்கள் சுற்றுலா இனிமையாக அமைவதற்கு வாழ்த்துங்களேன்.

மீண்டும் சந்திப்போம்!

8 comments:

ராம்ஜி_யாஹூ said...

Iticket, eticket is 5 years old concept. Everyone uses eticket only (take print out from our mail).

As always, Gulf is 5 years behind than India (knowledge wise).

Anonymous said...

very usefull information wish u a happy journey = rajakamal

சென்ஷி said...

இனிமையான பயணத்திற்கு என் வாழ்த்துகள்

வடுவூர் குமார் said...

Have a nice Trip.

அப்துல்மாலிக் said...

wish you happy journey

Govt Employees?? As usual

துபாய் ராஜா said...

Annachi Naanum ippo oorlathaan irukkaen. oorukku Vantha en mobilella 9489153344 Koopidunga.Naeril Santhipoom.

cheena (சீனா) said...

அன்பின் இஸ்மத்
சில சமயங்களீல் இது மாதிரி நடந்து விடுகிறது
எப்பொழுதுமே இடிக்கெட் பிரச்னை இல்லாமல் உதவும்
நல்வாழ்த்துகள் கிஸ்மத்
நட்புடன் சீனா

கிளியனூர் இஸ்மத் said...

Thanks To All......

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....