உங்கள் வருகைக்கு நன்றி...

Tuesday, August 31, 2010

வடமாநிலச் சுற்றுலா - 10 (முடிவு)


இரவு உறங்கி விழித்த எங்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது இன்று பாரத பந்த் ஆதலால் கடைகள் அடைக்கப் பட்டிருக்கின்றன எங்கும் பொருட்களை வாங்க செல்ல முடியாது ஆதலால் விடுதியிலேயே இன்றைய பொழுதை கழிக்கவேண்டும் என்ற நிலை உருவானது.

விடுதி பொறுப்பாளர்கள் வெளியில் செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுத்தார்கள் ஆதலால் பெண்கள் குழந்தைகளை விடுதியில் விட்டுவிட்டு நானும் நண்பர் ஹாஜாவும் கடைத்தெருவை சுற்றிப்பார்க்க புறப்பட்டோம்.

அரசியல் வாகனங்கள் நிறைய ஊர்ந்தன ஒவ்வோரு முக்கிட்டிலும் காவலர்கள் தடியுடன் கூட்டம் கூட்டமாக நின்றுக் கொண்டிருந்தார்கள் மக்கள் அவசரஅவசரமாக அங்குமிங்கும் அழைந்துக் கொண்டிருந்தார்கள் பரபரப்பு அதிகமாகவே இருந்தது உணவு விடுதிகளைத் தவிர மற்ற கடைகள் அடைக்கப்பட்டிருந்தது சிலர் சொன்னார்கள் மதியத்திற்குள் கடைகள் திறந்துவிடுவார்கள்.

இந்த பரபரப்பைக் காணும்போது பீம்சிங் மன்னருடைய ஆட்சி நடப்பதுபோல் ஒரு பிரமை எனக்குள் ஏற்பட்டது. மன்னர் ஊரைச் சுற்றி வலம் வருகிறார் என்றால் சிப்பாய்கள் சுறுசுறுப்புடன் வீதியிலே அணிவகுத்து நிற்பதுபோல காவலர்கள் நின்றார்கள்.
அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஒலிப் பெருக்கியில் ஆளும்கட்சியை குறைக்கூறிக் கொண்டு காரில் சென்றார். ஒருநாள் அடைப்பில் எத்தனையோ ஆயிரம்கோடி நஸ்டம் என்று தொலைக் காட்சிக்காரர்கள் கணக்கு சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

ஒருநாள் வியாபாரத்தை இந்திய வணிகர்கள் ஏழைகளுக்கு வழங்கினால் வறுமையின் நிறம் சிவப்புளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாறுபடலாம்.

மாலையில் வெளியில் புறப்பட்டோம் ஆட்டோக்கள் ஓடின சில கடைகள் மட்டும் திறந்திருந்தது மீண்டும் ஜல்மஹால் சென்றோம் அன்று மழை பெய்திருந்ததால் குளுமையாக இருந்தது வாண்டுகள் ஒட்டகசவாரி செய்ய ஆசைப்பட்டார்கள் ஆசை நிறைவேறியது.

அங்கிருந்து ஹவா மஹால் சென்றோம் அதன் உள்ளே ஒன்றும் இல்லை வெறும் கட்டிடமாகவே நின்றது ஹவா என்றால் காற்று."காற்று வீசும் அரண்மனை" அல்லது "தென்றல் வீசும் அரண்மனை"),இது 1799ஆம் ஆண்டு மஹாராஜா ஸவாய் ப்ரதாப் ஸிங் என்பவரால் கட்டப்பட்டது, மேலும் ஹிந்து கடவுள் கிருஷ்ணாவின் கிரீடத்தின் அமைப்பில் லால் சந்த் உஸ்தா என்பவரால் வடிவமைக்கப்பட்டது. சிக்கலான பின்னல் வேலைப்பாட்டால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் ஜரோகாக்கள் எனப்படும் சிறிய ஜன்னல்கள் 953 உள்ள வெளியிலுள்ள அதனுடைய சிறப்பான ஐந்தடுக்குக் கட்டடம்கூட, தேன்கூட்டிலுள்ள அறுகோணவடிவ அமைப்புவகையைச் சார்ந்ததாகும். தொடக்கத்தில், பின்னல் வேலைப்பாட்டின் நோக்கம், மேல்நிலைப் பெண்கள் கடுமையான "பர்தா" (முகத்திரை). முறையைப் பின்பற்றவேண்டியிருந்ததால், அவர்கள் இருப்பதை மற்றவர் பார்க்காவண்ணம் இருந்து கீழே சாலையில் நடைபெரும் அன்றாட நிகழ்வுகளைக் கவனிப்பதேயாகும்.

சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு வண்ண மணல்கற்களால் கட்டப்பட்ட அந்த அரண்மணை, ஜெய்ப்பூர் வணிகப்பகுதியின் முக்கிய இடத்தின் பொது வழியில் அமைந்துள்ளது. அது நகர அரண்மனையின் ஒரு பகுதியாக விளங்குவதுடன், ஜினானா அல்லது பெண்களின் அறைகள், அந்தப்புரம் வரை பரவியுள்ளது. குறிப்பாக அது அதிகாலை வேளையில் சூரியனின் பொன்னிற ஒளியுடன் மின்னுவதைப் பார்க்கும்போது மிக்க மகிழ்வூட்டுவதாக உள்ளது.

சிட்டி பேலஸ் இது முபாரக் மஹால் மற்றும் சந்திரா மஹால் ஆகியவற்றை கொண்டுள்ளது. இதன் உட்புறத்தில் அழகிய தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது ஜெய்பூர் நகரத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.


இரவுவரையில் திறந்திருந்த சிலகடைகளில் கிடைத்தப் பொருட்களை பார்வையிட்டோம் பல கடைகள் அடைப்பு என்பதினால் விலைகளில் ஏற்றமிருந்தது அதனால் எங்கள் மனதில் மாற்றம் வந்தது நாளை வாங்கலாம்.

பொழுது விடிந்தது ஆனால் என் உடம்பு விடியவில்லை. பின்னிரவிலிருந்து வயிற்றுப்போக்கு ஒருமுறை இருமுறையல்ல பலமுறை. எண்ணெய் பண்டங்களை உண்டதினால் அது அஜீரணகோளாறை ஏற்படுத்திவிட்டது. முதலுதவிக்காக எடுத்துவந்த மாத்திரைகளை விழுங்கிப் பார்த்தேன் திறந்த அணை மூடுவதாக இல்லை.

இன்று மாலை ஜெய்பூரிலிருந்து கோயமுத்தூர் சூப்பர்பாஸ்ட் இரயிலில் சென்னை புறப்பட்டாகவேண்டும் ஆனால் வாங்கவேண்டிய பொருட்கள் வாங்க வேண்டி இருந்ததினால் காலை 10 மணிக்கு என்னைத்தவிர மற்றவர்களை கடைத்தெருவிற்கு அனுப்பிவிட்டு நான் மட்டும் விடுதியில் தங்கிக் கொண்டேன்.
நின்றபாடில்லை பெய்கின்ற மழையும் வயிற்றுப் போக்கும் நிற்காமல் இருந்தால் ஆபத்துதான். பலமிலந்தவனாய் படுத்திருந்த நான் மெல்ல எழுந்து பக்கத்தில் இருந்த கிளினிக் சென்றேன். மருத்துவர் இல்லை செவிலியர் இருந்தார் நிலமையைச் சொன்னேன் அவர் கைபேசியில் மருத்துவரை அழைத்து என்கையில் கொடுத்தார் சொன்னேன் சிலமருந்துகளை செவிலியர் தருவார் சாப்பிடுங்கள் என்றார் இது கைப்பேசி கிளினிக் எனக்கு மருந்து கிடைத்தது சிலமணி நேரங்களுக்குப் பின் வயிற்றுப் போக்கு சரியானது ஆனால் உடல் ரொம்பவும் பலஹீனமாக இருந்தது. வெளி ஊர்களுக்குச் சென்றால் எண்ணெய் பண்டங்களை தவிர்ப்பது நல்லது என தீர்மானித்துக் கொண்டேன்.எண்ணெயில் செய்யாத பண்டங்கள் கிடைத்தாலும் ருசி எண்ணெயில்தானே இருக்கிறது.

கடைவீதிகளை முடித்துக் கொண்டு மூட்டை முடிச்சுக்களை தயார்செய்து இரயில்நிலையம் செல்வதற்கு ஆயத்தமானோம். உள்ளுர்வாசிகளின் பரிந்துரையில் விடுதி அறை முன்பதிவு செய்திருந்ததால் தள்ளுபடி கிடைத்தது.

சிறப்பான முறையில் வாடிக்கையாளரை கவனித்து அவர்களை கவர்ந்ததினால் இணைய வலையிலும் வளம் வருகிறது மதினா விடுதி.
மாலை 6.00 மணிக்கு புறப்பட்டோம்.

ஜெய்பூரின் இரயில் நிலையம் எங்களை கூட்டத்துடன் வரவேற்றது. கோயமுத்தூர் விரைவு வண்டி தளத்தில் அப்போதுதான் நுழைந்தது எளிதாக எங்கள் பெட்டியைத்தேடி ஏறிக் கொண்டோம்.

சென்னையில் நடந்ததைப் போன்றே இங்கும் எங்களின் இருக்கை முன்னும் பின்னும் மாறியிருந்தது பாசத்திற்குரிய பயணிகள் எங்களுக்காக தங்களை இடம் மாற்றிக் கொண்டு சந்தோசமளித்தார்கள். அந்த அத்தனை பயணிகளுக்கும் எங்களின் சுற்றுலா குழுவினர்கள் சார்பில் நன்றியை சமர்ப்பிக்கின்றோம்

வயிற்றுப்போக்கினால் உடல் அசதி அதிகமாகவே இருந்தது ஆனாலும் சமாளித்தேன் அன்றைய இரவு நல்ல உறக்கம்.


மீண்டும் சென்னையை நோக்கியது எங்கள் பயணம் ஆனால் ஒரு வித்தியாசம் ஜெய்பூரிலிருந்து மழையை கூடவே சென்னைவரையில் அழைத்துச் சென்றோம்.

இந்த சுற்றுலாவை நாங்கள் நினைத்தபடி மனம் நிறைவுடன் நிறைவு செய்தோம்.

வடமாநிச் சுற்றுலா பதிவை பதிவிட்டதிலிருந்து பின்தொடர்ந்து பின்னூட்டமளித்து ஊக்கம் தந்த பதிவர்கள்

நிஜாமுதீன்,
நாஞ்சில் பிரதாப்,
அப்துல்பாஸித்,
நீடுர் அலி,
சுல்தான்,
ஜூவன்பென்னி,
ராம்ஜியாஹ_,
வித்யா சுப்ரமணியம்,
எம்.எம்.அப்துல்லா,
அப்துல்மாலிக்,
ஊமையன்,
ஜோ அமலன் ராயன் பர்னான்டோ,
மஞ்சூர் ராஜா,
ஜோதிஜி,
குசும்பன்,
ஆக்கூரான் தமிழ்,
சிநேகிதி,
ஸாதிகா,
அப்துல்கதீம்,
சிம்மபாரதி,
க.நா.சாந்திலெட்சுமணன்,
துளசிகோபால்,

உங்களின் வருகைக்கும கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

8 comments:

Unknown said...

பயணங்கள் முடிவதில்லை இஸ்மத். வடமாநிலம் முடிந்தாலென்ன? இருக்கவே இருக்கின்றன வட மாநிலங்கள் (Northern Emirates). தொடருங்கள், பிரியாணி உலா, பதிவர் உலா....

ஜோதிஜி said...

மிகவும் ரசித்த நடை.

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

சுற்றுலாத் தொடர் இயல்பான மொழியில் அழகான நடை. சாப்பாட்டில் கொஞ்சம் கட்டுப்பாடாய் இருந்திருந்தால் உடல் நலக்கோளாறைத் தவிர்த்திருக்கலா. உங்கள் எழுத்து எங்களுக்குப் பாடம்.
நாங்கள் வெளியூர் போனால் சமைத்த உணவை விட பழங்கள், பிஸ்கெட்டுகளால் சமாளிப்பது வழக்கம்.

கிளியனூர் இஸ்மத் said...

கதீம் அண்ணா பயணங்கள் முடிவதில்லை என்பது 100 க்கு 100 உண்மை...பிரியாணி உலா நோன்புக்கு அப்பால வளம் வருவோம்....நன்றி.

ஜோதிஜி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சகோதரி க.நா.சாந்திலெட்சுமணன் உங்களைப்போல் பழங்களை சாப்பிட்டிருந்தால் நான்பட்ட அவதியை தவிர்த்து இருக்கலாம்...இனி உசாரா ஆகிடுவோம்...நன்றி.

அன்புடன் அருணா said...

அட!எங்க ஊர் ஜெய்ப்பூருக்கா வந்தீங்க!???எனக்குத் தெரியாதே???

கிளியனூர் இஸ்மத் said...

அன்புடன் அருணா...வாங்க சார்....நீங்க ஜெய்பூரா?...நல்ல ஊர் அடுத்தமுறை வந்தால் உங்களை சந்திக்கிறேன்....உங்கள் வருகைக்கு நன்றி.

Karthikeyan Rajendran said...

பத்து பாகமும் படித்தேன், அருமை, உங்களுடனே பயனித்தது போல இருந்தது, இது போல எனக்கும் வாய்ப்பு அமைய வேண்டும்,

கிளியனூர் இஸ்மத் said...

sparkkarthi karthikeyan உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....