உங்கள் வருகைக்கு நன்றி...

Sunday, March 6, 2011

நீண்ட நாட்களுக்கு பிறகு...


முப்பது தினங்களுக்கு பிறகு உங்களுடன் உரையாடுகிறேன்...தொடர் எழுதிக் கொண்டிருந்த நான் அதை தொடராமல் இப்படி நாட்களை விழுங்கிவிட்டு தொடர் எழுதினால் அது படிப்பவர்களுக்கு ஆவலை அளிக்காது என்பதை அறிகிறேன்.

பல வேலைகளின் பளுவால் வலைப்பக்கம் வரமுடியாத வந்தாலும் எழுதும் மனநிலை இல்லாத ஒரு அவசர உணர்வில் இந்த நாட்கள் என்னை கழித்தது.

பல அமைப்புகளில் என்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பதால் விழாக்காலங்களில் ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டுமே அதுவும் ஒரு காரணம், அடுத்து தங்கிருந்த கட்டிடத்திலேயே கீழ்தளத்திலிருந்து மேல்தளத்திற்கு நான்காவது மாடிக்கு வீட்டை மாற்றிக் கொண்ட காரணமும் கூட.

ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்கு மாறுவது என்பது எவ்வளவு பெரிய தலைவலி, தலைசுற்றல் என்பது வீடு மாறியவர்களுக்கு தெரியும்.ஆனால் எனக்கு அதெல்லாம் தெரியவில்லை காரணம் எனது மைத்துனர்களின் உதவி இருந்ததினால் நான் தப்பித்துக் கொண்டாலும் எனது துணைவியார் ரொம்ப கஸ்டப்பட்டதாக சொன்னார்கள்...அதில் நான் ஒன்றுமே செய்யவில்லை என்ற குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்தார்கள்.

ஒரு வீடு மாறுவதற்கே இவ்வளவு கஸ்டமாக பீல் பண்ணும் நாம், எந்த நேரத்திலும் நமது பின்னாடியே நிழலாக சுற்றிவரும் மரணம் தரும் மாற்றத்தை இந்த மனம் எப்படி ஏற்றுக் கொள்ளும்(?) என்ற சிந்தனை எனக்குள் வந்தது.இந்த உலகில் அழிவு என்பது எதுவும் இல்லை ஆனால் மாற்றம் மட்டுமே நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது என்பதை ஞானமாக படித்திருக்கிறேன்.
அதனால் எந்த மாற்றமானாலும் மனதை பக்குவப்படுத்திக் கொண்டால் மாற்றமும் மகிழ்வுடன் மாறிவிடும்.

எங்கள் அமைப்பின் சார்பாக அகிலத்தின் அருட்கொடை அண்ணல் பெருமானார் (ஸல் அலை) அவர்கள் அவதரித்த விழாவிற்காக இலங்கை வரை நண்பர்களுடன் நான்காம் வருடமாக சென்று வந்தேன்.ஒவ்வொரு முறை செல்லும்போதும் ஒருவித ஆன்ம ஆனந்தம் இம்முறையும் அப்படித்தான் அதை எழுத்தில் கொண்டுவர முடியாது.

துபாயில் சென்ற வாரம் நடந்த எங்கள் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய அமைப்பின் விழாவிற்கு வருகைப் புரிந்த தமிழஞர்களுடன் பழுகும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் முக்கியமாக கவிச்சித்தர் மு.மேத்தா அவர்களுடன்.

65 வயதைக் கடந்த மனிதராக இருந்தாலும் இன்னும் 50பதைப்போலவே காட்சியளிக்கிறார் எதை பேசினாலும் பல்தெரிய சிரித்து பேசுகிறார்.நிறைய பொறுமை நிதானம் அவரிடம் நிறைந்திருந்தது.எதையும் எதிர்பார்க்காத எண்ணத்தை கொண்டுள்ளார் அதனால் அவருடைய மனம் எப்பவும் எதார்த்தமாகவே இருக்கிறது.ஐந்து பெண்மக்களை பெற்றவர் என்றாலும் அதிகம் ஆசைப்படாதவராகவே காட்சியளித்தார்.

எங்கள் அமைப்பில் பேசும்போது கவிதையைப் பற்றியும் கூறினார் அதில் ஒரு கவிதை

குடியரசுதினம்
ஆளுநர் மாளிகையில்
அனைத்துக்கட்சி
தலைவர்களுக்கும்
விருந்து
பரிமாறிக் கொண்டிருந்த
பணியாளர்கள்
தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்
யார்
யாரைச் சாப்பிடப்போகிறார்களோ.!

இந்த கவிதையை கூறி நமது அரசியல்வாதிகளைப்பற்றிய கருத்தும் கூற அது நகைச்சுவையாக மாறி அனைவரையும் சிரிக்க(சிந்திக்க)வைத்தது.

தமிழறிஞர்களான இலங்கை காப்பிகோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் சென்னையைச் சார்ந்த இனியதிசைகள் பத்திரிக்கையின் ஆசிரியர் தொண்டு நிறுவனர் பேராசிரியர் சே.மு.முகமதலி இவர்களுடன் சந்திப்பு சில தினங்களில் அடிக்கடி நடந்தது.

எங்கள் ஏகத்து மெய்ஞ்ஞான சபையின் மீலாதுவிழா பணி... இப்படி காலத்தை காரணத்துடன் கழித்துவிட்டதால் அவைகள் அத்தனையும் என்னிடம் அனுபவ ஆடையாக இருக்கிறது.

இப்படி சென்றமாதம் தொடர் இலக்கியவிழா மழையாக பொழிந்ததால் நனைந்துவிட்டேன்.

இனி இன்னொரு நிகழ்வு அடுத்த வாரத்தில் தொழில் சார்ந்த பயணம் துருக்கி வரை செல்லவேண்டி இருக்கிறது அதையும் முடித்துவிட்டால் நிம்மதியாக எனது தொடரை தொடருவேன்.


No comments:

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....