உங்கள் வருகைக்கு நன்றி...

Tuesday, January 31, 2012

விருது பெற்ற தீரன் திப்புசுல்தான்

கண்மணி நாயகம் (ஸல் அலை) அவர்களின் பிறந்த மாதத்தை கௌரவிக்கும்முகமாக துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் ரபீஉல் அவ்வல் மாதம் முழுவதும் சுப்ஹான மௌலிது நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இந்த சிறப்புமிகு மவ்லிது மஜ்லிஸில் நேற்றைய தினம் (30/01/2012) சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட கண்ணியமிக்க சகோதரர் டாக்டர் காவியத்திலம் ஜின்னாஹ் ஷரீபுத்தீன் அவர்களுக்கு சையதுஅலி மௌலானாவும் ஜாஹித் அலி மௌலானாவும் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்கள்.
இவர்களைப் பற்றி ஏற்கனவே பதிவிட்டுள்ளேன் என்றாலும்
சாதனையளர்களை ஒவ்வொரு சாதனையின் போது எழுதுவதில் எழுதக்கூடியவர்களுக்கு ஊக்கமளிக்கிறது என்பதே உண்மை. அதனாலே என்னை ஊக்கப்படுத்திக் கொள்வதற்கு இதோ...

இருபதுக்கும் அதிகமான தமிழ் நூல்களை எழுதியவர் அதில் எட்டு காவியங்களை படைத்திருப்பவர். குறிப்பாக கண்மணி நாயகம் (ஸல் அலை) அவர்களின் சரிதையை “திருநபி காவியம்” என்ற பெயரில் எழுதி அமீரகத்தில் வெளியிட்டார்கள்.
அமர்ந்த இடத்தில் ஆயிரம் பாக்களை எழுதும் ஆற்றலைப் பெற்றவர்.
தமிழ்மீது கொண்ட ஆர்வத்தினால் மருத்துவ சேவையும் அத்துடன் தமிழ் இலக்கிய சேவையும் செய்பவர். தற்போது மருத்துவ சேவையிலிருந்து ஓய்வு எடுத்துக் கொண்டு தமிழ் இலக்கிய சேவையை மட்டும் தொடர்ந்து செய்துக் கொண்டு வருபவர்.

இலங்கையில் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையமும் நீர்கொழும்பு இந்து மாமன்றமும் மன்னாரு தமிழ் சங்கமும் இவருக்கு “வாழ்நாள் சாதனையாளர்” என்ற விருதை வழங்கி கௌரவித்துள்ளார்கள்.

மதம் கடந்த மனிதநேயமிக்க மனிதராக திகழக்கூடிய இவர் பண்டாரவன்னியன் காவியத்தையும் படைத்துள்ளார்.

இந்திய சுதந்திர வீரர் தீரன் திப்புச்சுல்தானைப் பற்றி எழுதிய காவியத்திற்காக சென்ற ஆண்டு “அரச இலக்கிய விருது” இலங்கை அரசாங்கம் வழங்கி கௌரவித்தது. (இது இந்தியாவில் வழங்கப்படும் சாகித்ய அகடாமி விருதுக்கு சமமானது).

இனி அடுத்து மூஸா நபி அவர்களைப் பற்றிய காவியத்தை எழுதி முடித்துள்ளார்கள். விரைவில் இந்த காவியம் நூல் வடிவம் பெறும். கிடைக்கும் ஒய்வு நேரத்தில் பல காவியங்களை படைத்துக் கொண்டிருக்கும் காவியத்திலகம் ஜின்னாஹ் ஷரீபுத்தீன் அவர்கள் ஒரு மருத்துவர்.

தமிழ் இஸ்லாமிய இலக்கிய உலகில் ஒன்பது காவியங்களை படைக்கும் ஆற்றலை எல்லாம் வல்ல இறைவன் இவர்களுக்கு வழங்கியுள்ளான் எல்லா புகழும் இறைவனுக்கே!

அமீரகத்தில் இயங்கும் பல தமிழ் அமைப்புகளுக்கு பரிச்சயம் பெற்ற இவர்கள் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகம் என்ற அமைப்பை அமீரகத்தில் அமைப்பதற்கு காரணமாக இருந்து அந்த அமைப்பின் அங்குரார்பணராக இன்று வரை இருந்து செயல்பட்டு கொண்டிருப்பவர்.

அமைதியும், அடக்கமும், இனிமையும் எளிமையும் இவரின் சொத்துக்களாக வைத்திருப்பவர்.
இவரின் எழுத்துப் பணி தமிழ் உலகிற்கு என்றென்றும் தேவைக் கொண்டதாகவே இருக்கிறது. இன்னும் இன்னும் காவியங்களை தந்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல ஏக இறைவனிடம் இருகரம் ஏந்தி பிரார்திக்கிறேன்…!

2 comments:

Anonymous said...

படித்தது பிடிkkalaa. சுப்ஹான மௌலிது நிகழ்ச்சி
பிடிkkalaa.

புல்லாங்குழல் said...

இன்னும் பல நற்காவியங்கள் படைக்க இறைவனை இறைஞ்சுகின்றேன். இந்த இடுகையை வெளியிட்டதற்காக உங்களுக்கு நன்றி நண்பரே!

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....