உங்கள் வருகைக்கு நன்றி...

Saturday, September 19, 2009

மனம் கவர்ந்த மலேசியா...20 (நிறைவு)


நாங்கள் சாப்பிட்டுவிட்டு புறப்படுவதற்கு தயாரானோம் அப்போது எங்களைத்தேடி படகுகாரன் வந்து விட்டார். கடும்கோபத்துடன் கத்தினார்.
நல்ல வேளை எனக்கு மலாய் மொழிதெரியாததால் அவர் என்னச் சொல்கிறார் என்பது விளங்கவில்லை.
ரெஜாக்கிடம் கேட்டேன்… நாம் ஒரு மணிநேரத்துல திரும்பிவிடுவோம்னு சொன்னதுனால படகை இங்கேயே போட்டுவிட்டு நமக்காக காத்துள்ளார். நமக்கு நேரமாகும் என்று கூறியிருந்தால் அவர் கரைக்குச்சென்று வேறு சவாரி பார்த்திருப்பார்.என்றார்.
அப்படியா..? நமக்கு தெரியாது தானே… அவரிடம் மன்னிப்புக்கேட்டுக்கொண்டு சமாதானமானோம்…எங்களை கரையில் கொண்டுவந்து விட்டார்.
அங்கிருந்து பழைய மலாக்கா நகரத்தை காரில் அமர்ந்தவாறே கண்டு ரசித்தோம்.
ஹைவேயில் ரம்புத்தான் பழங்கள் விற்பனை செய்கிறார்கள். அதில் மஞ்சள் நிறம் சிவப்புநிறம் என்று இரு நிறங்களுடைய பழங்கள் விற்பனை செய்தார்கள்.
ஐந்து திரஹத்துக்கு (ரிங்கிட்) சுமார் 2 கொத்து தந்தார்கள். 2கிலோக்கு மேல் இருக்கும்.

மாலை கேஎல் நகரம் வந்து சேர்ந்தோம்… இறுதிகட்ட ஷாப்பிங் நடத்தினோம்… இந்தமுறை தெரு சந்தைக்கு சென்றோம். அங்கு வாரவாரம் ஒவ்வொரு தெருக்களில் சந்தைக்கூடுகிறது. இதில் எல்லாவிதமான பொருட்களும் விற்பனைச் செய்கிறார்கள். விலை மலிவுதான்.
சில கிடைக்காத பொருட்கள் கூட இங்கு கிடைக்கும். கவனமாக பார்த்து வாங்க வேண்டும். பழைய பொருட்களையும் கூட புதுசென்று நம் தலையில் கட்டிவிடுவார்கள்.
இந்த தெருசந்தையை சுற்றி விட்டு புறப்பட்டுவிட்டோம்… அதிகாலை 4.30 மணிக்கு ஏர்போர்ட் புறப்பட்டாக வேண்டும் என்பதால் 10 மணிக்கு முன் விடுதிக்கு வந்துவிட்டோம். சாமான்களை யெல்லாம் சரி செய்து வைத்துவிட்டு உறங்கினோம்.
அதிகாலை 4.15 கெல்லாம் ரெஜாக் டெலிபோன் செய்தார். கீழே வந்துவிடுங்கள். இன்னும் 5 நிமிடத்தில் வந்துவிடுவேன் என்றார்.
எனது குட்டிஸ்களை கிளப்புவதற்கு கொஞ்சம் சுனக்கம் கடைசி நிமிடத்தில் கொஞ்சம் பரபரப்பு என்னிடம் காணப்பட்டது.
குட்டிஸ்களின் கைகளில் அவர்களுக்கான பேக்கை கொடுத்துவிட்டு நான் இரண்டை எடுத்துக் கொண்டு என்மனைவி அவங்க பேக்கை எடுத்துக் கொள்ள சொல்லி விட்டு ரூமிலிருந்து வெளியில் வந்தேன்.
ரெஜாக் தயாராக நின்றார்… சாமான்களை ஏற்றினோம்… சரியாக 4.40க்கு புறப்பட்டோம். ரூம் காலி செய்யவில்லை. ரெஜாக் செய்துக் கொள்வதாய் கூறினார்.


கேஎல் நகரிலிருந்து விமான நிலையம் 65 கிலோ மீட்டர் தூரம்… காலைநேரம் என்பதால் வாகன நெரிசல் இல்லை.
நாங்கள் திருச்சி செல்கிறோம்.எங்களின் விமான நேரம் காலை 7.45 மணி… ஏர்ஆசியா விமானம்… இந்த விமானத்தில் பயணிக்கக் கூடியவர்கள் 3 மணிநேரம் முன்னாடியே விமானநிலையத்தில் இருக்கவேண்டும். ஏர் ஆசியாவிற்காக தனி விமான நிலையம் கேஎல்லில் வைத்திருக்கிறார்கள். 7 கிலோ எடைகொண்ட பேக்கை மட்டும் தான் கையில் வைத்துக் கொள்ளலாம். 15 கிலோ மட்டும் எடை இலவசம் அதற்கு மேல் உள்ள எடைகளுக்கு பணம் கட்டியாக வேண்டும். நாங்கள் நான்கு பயணிகள் அதற்கு தகுந்தமாதிரி எடைகளை சரி செய்து வைத்திருந்தேன்… இதோ விமான நிலையம் வரப்போகிறது… உங்களை யெல்லாம் விட்டு பிரியப்போகிறேன்…
ஓரு சந்தேகம் மனதில் தோன என்மனைவியிடம் கேட்டேன்…
உன்னுடைய பேக்கை நீ எடுத்துக் கொண்டாயா…?
எது சிவப்பு பேக்கையா…? நான் எதையும் கையில் எடுக்கவில்லை என்று கூற…ஒரு நிமிடம் நெருப்பு சுட்டது போல் இருந்தது…
ரெஜாக்கிடம் கொஞ்சம் வண்டிய நிறுத்துங்கள் எட்டு பேக் இருக்கனும் பார்த்துக் கொள்வோம் என்று பார்த்தால் ஒரு பேக் மிஸ்ஸிங்…அது என்னுடைய துணைவியாரின் துணிமணிகள்…ரூமிலேயே விட்டுவிட்டார்கள்.
பரபரப்பு அதிகமானது… நீ…நான்…அது…இது….ஒருவரையொருவர் காரணங்காட்டி காரணம் கூறி… சரி இப்ப என்ன செய்வது…
ரெஜாக் பேந்த பேந்த எங்களையேப் பார்த்தார்… விமான நிலையம் வருவதற்கு இன்னும் எவ்வளவு நேரமாகும் என்றேன்… இதோ 10 நிமிடத்தில் சென்று விடலாம் என்றார் அப்போது மணி 5 .25… எங்கள் விமானம் 7.45க்கு …
சுறுசுறுப்பாக யோசனை செய்தேன்…ரெஜாக்கிடம் அண்ணே இதுக்கு ஒரே வழி நீங்கள் தான் உங்களால் மட்டும் தான் முடியும்… நீங்க விடுதிக்கு போய் அந்த பேக்கை எடுத்து வந்திடுங்கள்… நான் அதற்குள் போர்டிங் போட்டு ரெடியாக இருக்கிறேன் என்றேன்…
நான் போய் திரும்ப வேண்டுமென்றால் ஒன்னரை மணிநேரம் ஆகுமே…வரும்போது டிராப்பிக் ஏதுமிருந்தால் நேரம் போய்விடுமே என்றார்… இல்லண்ணே எனக்கு நம்பிக்கை இருக்கு நீங்க வந்திடலாம் ப்ளீஸ்…இந்த உதவியை செய்யுங்கள் என்று அவரிடம் கேட்டதும்… அவரும் சரி என்று புறப்பட்டார்.

ஏர் ஆசியா கவுண்டருக்கு சென்றேன் … மிஸ்ஸிங்ஆன பேக்கின் எடை 15 கிலோ அதை கணக்கு செய்து தான் எடை வைத்திருந்தேன்… இப்போது சின்ன குலறுபடி நிகழ்ந்திட்டது… இந்த ஒரு பேக்கினால் எங்களின் மனங்கள் மௌனமாகின… சரி… சிறப்பாக சுற்றுலா முடித்துவிட்டு போகும் நேரத்தில் இப்படியா என்று வருத்தம்… எடைகளை சரி செய்து கவுண்டரில் போட்டு போர்டிங் பாஸ் வாங்கிக் கொண்டேன்… காலையிலிருந்து எதுவும் சாப்பிட வில்லை. காபிவாங்கி நாங்கள் அனைவரும் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு குடித்துக் கொண்டிருக்கையில் ரெஜாக் போன் செய்தார்… விடுதிக்கு வந்துவிட்டேன் அந்த பேக் ரூமில் தான் இருக்கிறது என்று அவர் சொல்லும் போது மணி காலை 6.35.
எங்கள் மனதில் நம்பிக்கை பிறந்தது அது எங்கள் முகத்தில் தெரிந்தது… இருந்தாலும் என் உறவினருக்கு போன் செய்து விசயத்தை சொன்னேன். அப்படி நாங்கள் மிஸ்பண்ணினால் அதை கார்கோ மூலம் அனுப்பி வைத்திடவும்… ஒகேயும் அவர் சொல்லி விட்டார். என்மனைவிக்கு நிறைய ஆறுதல் கூறினேன்… என்னுடைய எல்லா டிரஸ்சும் அதிலே தாங்க இருக்கு…என்று வருத்தப்பட்டார்…

நேரம் நகர்ந்துக் கொண்டிருந்தது… காலை 7 மணி ஆகி விட்டது நான் தயாராய் நின்றுக் கொண்டிருக்கிறோம்… ரெஜாக் வரவில்லை… 7.05 தாண்டியது 7.10 க்கு அவரின் கார் வேகமாக வந்தது… அவசரமாய் எடுத்துக் கொண்டு நன்றிதழும்ப அவரைப்பார்த்து கைகுலுக்கி இமிக்கிரேஷனை நோக்கி விரைந்தேன்… அங்கு பெரிய வரிசை நிற்க… மீண்டும் பதட்டம்… அது முடிய 7.35 ஆகி விட்டது… அதற்குள் எங்கள் பெயரைச் சொல்லி அழைக்க ஆரம்பித்துவிட்டார்கள்… முச்சு வாங்க ஒடினோம்… கடைசி பயணி நாங்கதான்…
விமானத்தில் ஏறி எங்கள் இருக்கையில் வந்து அமர்ந்ததும் தான் எங்களுக்கு நிம்மதியாக இருந்தது… விமானம் புறப்படும் அந்த சில நொடிகளில் மீண்டும் ரெஜாக்குக்கு டெலிபோன் செய்து நன்றி கூறினேன்…
எனது இருபது கால பயணத்தில் இதுபோன்ற சம்பவம் இதுவே முதல் தடவை…
விமானம் ஆகாயத்தில் இறக்கை வரித்து பறக்க நானும் பதிவர்களுக்கு இந்த சம்பவங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டுமே என்ற சிந்தனையில் பறந்தேன்….

நிறைவு நன்றி……….

மனம் கவர்ந்த மலேசியாவை மனக்கவைத்த பதிவர்களுக்கு நன்றி கூறும் நேரம் அடுத்த பதிவில்நாங்கள் திருச்சி செல்கிறோம். தொடரும்

2 comments:

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கலக்கலா முடிச்சுட்டீங்க! ஒரு கேள்வி..

எப்படி ஒவ்வொரு விசயத்தையும் நினைவில் வைக்கிறீர்கள்? குறிப்பெழுதும் பழக்கமா அல்லது கொஞ்சம் புனைவும் இருக்குமா?

அருமையாக வருகிறது.. அது தான் கேட்கிறேன் :)

கிளியனூர் இஸ்மத் said...

குறிப்பு எதுவும் எழுதிவைப்பதில்லை...மனதில் பதிந்த நிகழ்வுகளை நினைவுப்படுத்திதான் எழுதிவருகிறேன்...புனைவு இல்லை....கருத்துக்கு நன்றி...!

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....